Friday 30 December 2011

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 49

"நாஸ்தி தேஷு ஜாதிவித்யா ரூபகுல தனக்ரியாதி பேத:" 
மேற்சொன்னவாறு பிறந்த அனன்ய பக்தர்கள் எவராகவும் இருக்கலாம். அவருக்கென்ற அடையாளமும் இருக்காது.பக்தி யோகத்தில் பக்தன் பகவான் மீது பிரேமை செலுத்தும் தகுதி பெற்றவனாக மட்டும் தான் இருப்பான்.மற்ற எந்த தகுதியும் இருக்க வேண்டும் என்ற தேவையில்லை.என்று கூறுகிறார்கள்.
          பக்தர்களிடம் ஜாதி வித்தியாசம் பார்க்ககூடாது.பக்தனின் ஜாதி,கல்வித்தகுதி,அழகு,குலம்,பணவசதி,அவன் செய்யும் தொழில் அனைத்தையும் வைத்து அவனை வித்தியாசப்படுத்த கூடாது.தாழ்வாக நினைக்க கூடாது.இதை வைஷ்ணவ கிரந்தத்தில் கூறியிருக்கிறார்கள்.
         வைஷ்ணவ பக்தி கிரந்தத்தில் பகவானுக்கு செய்யும் அபசாரங்கள் 64 உள்ளன.அவற்றில் ஒரு அபசாரம் பக்தர்களில் ஜாதி வித்தியாசம் பார்ப்பது.
ஏழை என்று புறக்கணிப்பது.அவன் செய்யும் தொழிலை இழிவு படுத்தி பேசுவது.பிரேமையால் பகவானையே வசப்படுத்திய பக்தன் மரியாதைக்கு உரியவன்.
        குகன் உயர்ந்த குலத்தவன் அல்ல.கொக்கை எரித்த முனிவனுக்கு, மாமிசம் விற்று பிழைக்கும் குலத்தொழிலை கொண்ட தர்ம வியாதன் தர்மோபதேசம் செய்தான்.வேடுவ குல பெண்ணான சபரி ஸ்ரீ ராமரிடம் அதீத பக்தி கொண்டவர்.அரக்க குலத்தில் பிறந்த பிரகலாதன்,வானரன் ஹனுமான், தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்த விதுரன்,படிப்பறிவு இல்லாத கோபிகை பெண்கள்,இவர்கள் அனைவரும் எந்த தகுதியும் இல்லாதவர்களானாலும் உள்ளத்தில் பகவானின் பிரேமை பக்தி அபரிதமாக இருந்தது.
         வைஷ்ணவ சம்பிரதாயங்களில் 64 அபசாரங்களையும் ஜாதி வித்யாசமில்லா எல்லா மக்களும் குற்றங்கள் போல தவிர்க்க வேண்டும்.
அபசாரங்கள் சிலவற்றை கீழே குறிப்பிட்டுள்ளோம்:
          வேதங்களை மதிக்காமல் இருப்பது,பகவானின் ஓவியம் அல்லது விக்ரஹத்தை கல்,மண் என்று நினைப்பது,குருவை அவமதிப்பது,நைவேதம் செய்யப்பட்ட பிரசாதத்தை சாப்பிடும் தின்பண்டமாக நினைப்பது,தீர்த்தத்தை சாதாரண நீராக நினைப்பது,துளசி அல்லது வில்வ இலையை சாதாரண இலையாக மதிப்பது,பகவானின் திருவிளையாடல்களை மனிதர்கள் வாழும் முறைக்கு ஒப்பிட்டு கேவலமாக பேசுவது,பகவான் இருக்கிறாரா இல்லையா என்று விவாதிப்பது,அவர் அருளை சந்தேகிப்பது,கிராம தெய்வங்களை அவமதிப்பது,நிந்திப்பது,சாதுக்கள் மீது குற்றம் காண்பது,குலதெய்வத்தை அற்பமாக நினைப்பது,கோவிலில் அல்லது வீட்டில் பகவான் மூர்த்திக்கு முன்னால் காலை நீட்டுவது,கோவிலுக்குள் கையில் கம்பை எடுத்துக்கொண்டு போவது,கோவிலில் பெரிய மனிதர்களை கண்டால் அவர்களை வணங்குவது,கோவிலில் பகவானுக்கு முன்னால் உரக்க சிரிப்பது,அர்ச்சகரிடம் கோபம் கொள்வது,பெண்கள் தலை கேசத்தை முடியாமல் கேசத்தை விரித்துக்கொண்டு போவது,கோவிலுக்கு போதை வஸ்துக்களை உட்கொண்டு அல்லது மாமிசம் சாப்பிட்டு விட்டு போவது,கோவிலில் பிற மனிதர்களிடம் தர்க்க வாதம் செய்வது,பொய் பேசுவது,பகவான் துணை செய்வதில்லை என்று கூறுவது,பிரசாத்தை விற்பது,கோவிலில் பிற மனிதர்களுடன் சண்டை போடுவது அழுக்கு ஆடை அணிந்து தலை ஸ்நானம் செய்யாமல் கோவிலுக்குள் போவது
 கோவிலில் தமக்கு பிரியமுள்ள நபரை பார்த்து நீங்கள் தான் கடவுள் என்று கூறி காலில் விழுந்து வணங்குவது,கை கால்களை கழுவிக்கொள்ளாமல் போவது,கைகளை வீசி நடந்து கொண்டு பிரகாரம் சுற்றுவது,ஆகியவை மன்னிக்க முடியாத அபசாரங்கள்.(தொடரும்)           

No comments:

Post a Comment