Saturday 17 December 2011

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 35

"தரங்காயிதா அபீமே ஸங்காத் ஸமுத்ராயந்தி "
காமமும் (உலகில் இருக்கும் அனைத்து வித ஆசைகள்)குரோதமும் அலைகள் போல எழுந்து எழுந்து பெரும் அலைகடலாக பெருகி விடுகின்றன.மேற்சொன்னது போல தீயவர் சேர்கையால் அல்லது தீமைகளை தன்னில் வளர்த்து கொள்வதால் பெரிய அளவில் பெருகி விடுகின்றன.
          தீமைகளை வேருடன் களைய வேண்டும்.சிறிதளவு தேங்கி விட்டால் கூட அவை படிப்படியாக வளர்ந்து ஆபத்தை விளைவிக்கும்.தீயின் சிறு பொறியை விட்டு வைத்தாலும் அது பெரிய நெருப்பாக மாறி எல்லாவற்றையும் சாம்பலாகி விடும்.
         ஆரம்பத்தில் காமகுரோதாதிகள் சிறு அலை போல தோன்றினாலும் சூழ்நிலைக்கு ஏற்றவாறு பெருகி கடல் போல ஆகி விடும்.என்று கூறுகிறார்கள்.நல்ல எண்ணங்களை விரட்டிவிடும்.நம்மனதில் நல்ல குணங்கள் அதிகமாகவும் தீய எண்ணங்கள் குறைவாகவும் இருக்கின்றன என்று நினைத்து கொள்ள கூடாது.இந்த மனதை அடிக்கடி சோதித்து பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும்.இந்த மனமானது கீழான விசயங்களை நோக்கி விரைந்து பாயக்கூடியது. மாயையை எவராலும் வெல்ல முடியும்.என்பதை அடுத்த சூத்திரத்தில் கூறுகிறார்கள்.
"கஸ்தரதி கஸ்தரதி மாயம்? ய : ஸங்கான் ஸத்யஜதியோ மஹானுபாவம் ஸேவதே, நிர்மமோ பவதி " 
மாயையை வென்று எவன் கரை சேருகிறான்?ஜனன மரணத்தை விட்டு எவன் கடைத்தேருகிறான்? என்ற கேள்வி எழும் போது தேவைக்கு அதிகமாக இருக்கும் (ஏனெனில் உலகில் வாழ்வதற்கான சில விஷயங்கள் இன்றியமையாதவை)உலகியல் விசயங்களை துண்டித்து துறந்து விட்டவன் பக்தர் அல்லாதவர்களுடன் அதிக தொடர்பு கொள்ளாமல் தீயவர்களோடு சுத்தமாக தொடர்பை அறுத்து கொண்டவன் கடைதேருவான்.மகான்களோடு தொடர்பு கொள்பவன் பற்றற்று வாழ்க்கை வாழ்ந்து நான் என்ற அகந்தையை விட்டோழிப்பான். 
         நதியில் நீந்த வேண்டுமானால் கைகளாலும் கால்களாலும் நீரை அடித்து விலக்கிக்கொண்டே போனால் மூழ்காமல் இருக்கலாம்.அது போலவே மகா பயங்கரமான மாயை என்ற நதியை நீந்தி கடக்கவேண்டுமேன்றால் இருகைகளாலும் அகங்காரத்தையும் விசயபற்றையும் விலக்கிக்கொண்டே போக வேண்டும்.இல்லையேல் முடிவில்லா பிறவி பெருங்கடலில் மூழ்கி விட வேண்டியது தான்.
         மாயை சம்ஸாரக்கடலில் நீந்திக்கொண்டிருக்கும் போது கைகால்கள் சோர்ந்து விடும்போது ஒரு படகு போல மகான்களின் திருவடிகளை பற்றிக்கொள்ளவேண்டும்.பாகவதபுராணம் கூறுகிறது.மிகுந்த குளிர் பிரதேசத்தில் தீயை மூட்டி பக்கத்தில் குளிர் காய்வார்கள்.அதனால் குளிரும் விலங்குகளில் இருந்து பயமும் நீங்கி இருளும் அகன்று சுகம் கிடைக்கும்.அதுபோல மகான்களின் நிழலில் இருந்து கொண்டால் பாவங்கள் ஜெனனமரண பயம் அஞ்ஞான இருள் இவை மூன்றும் விலகி சென்றவுடன் நமக்கு அலாதியான அமைதி கிடைக்கும்.
          தந்தை இரண்யன்,மகன் பிரகலாதனை நோக்கி கேட்கிறான்."உனக்கு இந்த மதி எப்படி வந்தது?விடாப்படியாக எப்படி ஹரியை பற்றிக்கொண்டு இருக்கிறாய்?
          பிரகலாதன் அதற்க்கு பதில் அளிக்கிறான்."தந்தையே இறைவனை நோக்கி பக்தி கொள்ளும் மதி எவருக்கு எப்படி வரும் என்று கூறுகிறேன்.-பற்றற்ற சாதுக்களான மகான்களின் பாத தூசி தன் தலை மீது பட்டவுடன் எல்லா அனர்த்தங்களையும் அது விரட்டி அடிக்கும்.அப்போது ஸ்ரீ ஹரியின் பாத கமலங்களை பற்றிக்கொள்ளும் மதி ஏற்படுகிறது.
         ஜட பரதன் ரஹூகணன் என்ற மன்னனிடம் கூறுகிறார்:கிடைப்பதற்கரிய பகவானின் பேரருள் பகவத் தத்துவ ஞானம், பிரேமை எல்லாம், தவம்,யக்ஞம்,கிரஹச்தாசிரம கடமைகள் வேத அத்யாயனம், தீர்த்தாடனம், அக்னி உபாசனை, சூரிய உபாசனை யாவற்றாலும் கிடைக்ககூடியவை அல்ல. ஆனால் மகா புருஷர்களை அண்டி சேவை செய்யும் பாக்கியம் கிடைத்து அவர்கள் பாத தூசி மேனியில் பட்டு விட்டால் மட்டும் கிடைத்து விடும்.
                                                                                    (தொடரும்)

No comments:

Post a Comment