Wednesday 28 December 2011

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 47

தாச பாவ பக்தியாக இருந்தாலும் பதி பக்தியாக இருந்தாலும் தன் நாயகனை தவிர எவரையும் அறிய மாட்டார்கள்.அவர்கள் மனம்,தேகம்,செல்வம்,அறிவு,வாழ்வு ,உயிர், தர்மம்,மோட்சம், நற்கதி அனைத்தும் எங்கள் இறைவன் தான் என்று நினைப்பார்கள்.
"பக்தா ஏகாந்தினோ முக்யா:"
          அனன்ய பக்தர்களே முதலிடம் பெறுவார்கள்.முன் சொன்ன சூத்திரத்தில் சிறந்த பக்தி லட்சணத்தை கூறியிருந்தார்கள்.அந்த சிறந்த பக்தி அதாவது வேறு இடத்தில வைக்காத அன்பு கலந்த பக்திக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.
          அனன்ய பக்தியானது ஒப்பற்றது.தமக்கு சொந்தமான செல்வம்,குடும்பம் எல்லாம் பரமாத்மாவுக்கே சொந்தமாகி விடுகிறது.பக்தனோ பரமனின் சேவகன் போல உலகில் செயல்படுகிறான்.எதையும் பரமாத்மா சொரூபமாகவே காண்கிறான்.
"கண்டாவரோத ரோமாஞசாச்ரூபி: பரஸ்பரம் லபமானா: பாவயந்தி குலானிப்ருதிவீம் ச "
பகவானின் திருவிளையாடல்களை பாராயணம் செய்யும் போது, கேட்கும் போது அல்லது பஜனை பாடும் போது அவரை நினைத்து நடனமாடும்போது பரவசத்தின் உன்னத நிலைக்கு போய்விடுவார்கள்.அச்சமயம் பாடும்போது தொண்டை அடைக்கும்.ஆனந்த கண்ணீர் பெருகும்போது ரோமாஞ்சனம் உண்டாகும்.இப்படிப்பட்ட அனன்ய பக்தர்கள் முன் வந்த தலைமுறைகளையும்  வரப்போகும் தலைமுறைகளையும் புனிதப்படுதுவார்கள். பூமியை சுற்றுச்சூழலை புனிதப்படுதுவார்கள்.லயிப்புடன் பஜனை செய்யும் போது சுற்றுச்சூழலில் உள்ள தீய சக்திகள் பறந்தோடிவிடும்.கலகமும் கேடும் ஒழிந்து மனிதர்கள் மனதில் சாந்தி கிடைக்கும்.இப்படிப்பட்ட தூய பக்தர்களின் அருகாமை கிடைப்பதே பெரும் பாக்கியம்.
"தீர்த்தீ குர்வந்தி தீர்த்தானி ஸுகர்மீ குர்வந்தி கர்மாணி ஸச்சாஸ்த்ரீ குர்வந்தி சாஸ்த்ரானி "
புண்ணிய க்ஷேத்திரங்களையும் அவர்கள் புன்னியமாக்குவார்கள்.பாவச்செயல்களால் பாவியானவர்களையும் தரிசன,ஸ்பரிசங்களால் அல்லது பாத சேவையால் புனிதப்படுதுவார்கள்.அவர்கள் செய்யும் செயல்கள் மற்றவருக்கு எடுத்துக்காட்டாக மாறுகின்றன.பாவிகளும் புநிதப்படுதப்படுகிறார்கள் என்பதற்கு பின்வரும் கதை கூறப்பட்டுள்ளது.(தொடரும்)

No comments:

Post a Comment