Thursday 22 December 2011

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 41

பகவத் கீதை கூறுகிறது.-
           ஆர்த்த பக்தன், ஜிக் ஞாஸு பக்தன்  பக்தன்,அர்த்தார்த்தீ பக்தன் ஆகிய மூன்று வகை பக்தர்கள் தனி தனி இயல்பு உடையவர்கள்.
           ஆர்தபக்தன்: ஆபத்து வியாதி போன்ற தன் கஷ்டங்களையும் பாவங்களையும் அழிக்க வேண்டும் என்ற ஒரே லட்சியத்துடன் பகவானை தொழுது பஜனை செய்வது கோவில் திருப்பணிகளை செய்வது ஆகிய வழிகளால் இறைவனை ஆராதிப்பான்.
            ஜிக் ஞாஸு பக்தன்: பகவான் என்றால் அவருடைய ஆற்றல் என்ன ? பகவானை தத்துவார்த்தமாக எப்படி அறிய முடியும் எங்கும் நிறைந்த ஈசன் எப்படி அருள் பாலிக்கிறார்?என்று பகவானை பற்றி நன்கு அறிய விரும்பும் வேட்கை கொண்டவன் தன் அரிய பிரேமை பக்தியால் உபாசனை செய்து நெருங்குகிறவன் ஜிக் ஞாஸு பக்தன் பக்தன் ஆகிறான்.
             அர்த்தார்த்தீ பக்தன்:இவன் புராண காலத்து அசுரர்கள் போல தவமிருந்து நாம ஜபம்,தியானம் செய்து வரங்களை கேட்பான்.மென்மையான வாழ்வு ,பெயர்,புகழ்,செல்வம் எல்லாம் பகவானிடம் விரும்புவான்.
           உலகத்தின் நிலையில்லா வாழ்வில் நிலையில்லா அற்ப சுகங்களுக்கும் சந்தோசங்களுக்கும் பகவானிடம் கையேந்துவது எப்படி இருக்கிறதென்றால் -பொன்னும் பொருளும் ரத்தினங்களும் வழங்கும் பெரும் செல்வந்தனிடம் போய் எனக்கு தவிடு வேண்டும் என்று கேட்பது போல உள்ளது.
           உண்மையில் செல்வதினுள் பெரும் செல்வம் இறைவன் அன்றோ அந்த செல்வதை அடைந்த பின் வேறு எந்த செல்வம் பெரிதானது?அல்லது வேறு செல்வதை எதற்காக விரும்ப வேண்டும்?
"உத்தரஸ்மாதுத்தரஸ்மாத் பூர்வ பூர்வா ச்ரேயாய பவதி "
முக்குண பகதிகளில் சாத்வீக பக்தியே சிறந்ததாக முதலிடம் பெறுகிறது.அதுபோல ஆர்த்த பக்தி-அர்த்தார்த்த பக்தி,  ஜிக் ஞாஸு பக்தி ஆகிய வற்றில்  ஜிக் ஞாஸு பக்தியே சிறந்ததாக முதலிடம் பெறுகிறது.
"அன்யஸ்மாத் சௌலப்யம் பக்தௌ"
இறைவனை அடைய வேண்டிய மற்ற வழிகளை விட பக்தியோக வழியே சுலபமானது.கர்ம,ஞான, தியான யோகங்கள்,அனுஷ்டானம் செய்வதற்கு கடினமானவை.பக்தியோகத்தின் பலனோ எந்த பாதிப்புமின்றி கிடைத்து விடும்.மற்ற சாதனைகளில் சிறிய தவறு ஏற்பட்டாலும் அதன் பலன்கள் எதிர்மாறாக இருக்கும்.அல்லது சாதகர்களை பாதிக்க கூடியதாக இருக்கும்.
பகவான் மீது நம்பிக்கை கொண்டு முக்காலத்திலும் எங்கும் அவர் அருளை உணர்ந்தவன் நிச்சயம் பக்திக்கு பாத்திரமாகி விடுவான்.அக்கணமே அவன் பாவங்கள் எல்லாம் நாசப்பட்டு விடும்.இதற்காக எதையும் தியாகம் செய்ய தேவையில்லை.
             விலங்குகளும் பறவைகளும் பக்தி செய்து ஆண்டவனை தரிசித்த வரலாறும் உள்ளது. கஜேந்திரன் யானை, தவளை,பல்லி, சிலந்தி,வானரர்,ஆகியோர் செய்த வரலாறு கோவில்களில் சிற்பங்களால் ஓவியங்களால் பேசப்படுகிறது.பக்தி செய்த பக்தர்களிடம் பகவான் தன் மகாமஹிமையை விட்டு இறங்கி வந்து விடுவார்.(தொடரும்)

No comments:

Post a Comment