Thursday 21 March 2013

அஜாமிளன்

 
கான்யகுப்ஜ தேசத்தில் ஒழுக்கசீலமுள்ள ஒரு பிராமணன் இருந்தான்.சாஸ்திரங்கள் படித்து நற்குணங்கள் பெற்றிருந்தான்.மந்திரங்கள் படித்து சத்தியம் பேசும் நல்லவனாக குரு,அதிதி, அக்னி,பெரியோர்கள்,மாதா,பிதா ஆகியோரை சேவிப்பவனாக இருந்தான்.பரோபகார சிந்தனை பெற்றிருப்பான்.அதிகம் பேசமாட்டான்.இப்படிபட்டவன் பாதை தவறினான்.
ஒரு நாள் தந்தையின் ஆணைப்படி பூஜைக்காக தர்பையை பறித்து வர காட்டிற்க்கு சென்று இருந்தான்.அச்சமயம் ஒரு காட்சியை கண்டான்.ஒருவன் கள் குடித்து விட்டு ஒருபெண்ணுடன் சிரித்து மகிழ்ந்து கொண்டிருந்தான்.அந்த பெண்ணும் குடித்து விட்டிருந்தாள்.அவள் அறைகுறை ஆடை அணிந்து ஆடிக்கொண்டிருந்தாள்.தினமும் மலர்கள் பறிக்க போகும்போது இந்த காட்சியை பார்த்துக்கொண்டே போவான்.ஒருநாள் திடீரென அந்த பெண் அஜாமிளனோடு சினேகிதமானால்.சில நாட்கள் கழிந்த பின் அந்த சிநேகிதம் பலப்பட்டது.
          அஜாமிளன் அந்த பெண்ணின் சந்தோசத்திற்காக ஆடை ஆபரணங்களை கொண்டு வந்து தந்தான்.நல்லவளான தன் சொந்த மனைவியை மறந்தான்.தன் இல்லத்தில் இருந்த விலை உயர்ந்த பொருட்களை அவளுக்கு பரிசாக அளித்தான்.தன் இல்லத்தில்  தந்தையோடு செய்யும் தெய்வவழிபாடுகளையும்,வேதபாராயணங்களையும் மறந்தான்.வைதீக கர்மங்களை துறந்தான்.தந்தையின் சொத்துக்களை அழித்தான்.மொத்தத்தில் அவளுக்கு அடிமையாகி தன் வீட்டிற்க்கு திரும்பாமல் அவளுடன் வாழ்க்கை நடத்த ஆரம்பித்தான்.அதனால் குழந்தைகள் பிறந்து குடும்பம் பெரிதானது.பிழைப்புக்கு காசு,பணம் இல்லாமல் போகவே அவன் திருட ஆரம்பித்தான்.தீய வழியில் பணம் சம்பாதிக்க ஆரம்பித்தான்.வழிப்போக்கர்களிடமும் யாத்ரீகர்களிடமும் கொள்ளை அடித்தான்.அல்லது பிறரிடம் கடன் வாங்கி ஏமாற்றுவான், சூதாடுவான்.இவ்வாறு தன் ஆயுளின் பெரும்பகுதி கடந்து விட்டது.அவன் 10 பிள்ளைகள் பெற்றான்.பத்தாவது மகன் மீது அளவு கடந்த பாசம் வைத்து இருந்தான்.எதற்கெடுத்தாலும் நாராயணா!நாராயணா! என்றுபெயரை சொல்லி கூப்பிடுவான். அவன் சாப்பிட்டால் இவனும் சாப்பிடுவான்.அவன் நீர் குடித்தால் இவனும் நீர் குடிப்பான்.அந்த சின்ன மகன் மீது உயிரயே வைத்திருந்தான்.தனது 88வது வயதில் காலன் தம்மை கொண்டு போக வந்ததை அறியாமல் இருந்தான்.
          
நோய்வாய் பட்டு மரணப்படுக்கையில் கிடக்கும்போது பாசக்கயிற்றை போட்டு இவன் சூட்சும உடம்பை இழுத்த சமயம் மரண அவஸ்தையில் அவன் சின்ன மகனை நினைத்து நாராயணா,நாராயணா என்று கரகரத்த குரலில் கத்தினான்.மரணத்தருவாயில் எவரோ நமது பகவானின் பெயரை சொல்லி அழைக்கிறார்கள் என்று நினைத்து விஷ்ணு பகவானின் நான்கு பார்ஷத சேவகர்கள் விஷ்ணுவை போலவே நான்கு கரங்களுடன் சங்கு சக்கரம் தரித்திருப்பவர்கள் வேகமாக அஜாமிளன் படுத்திருக்கும் இடத்திற்க்கு ஓடி வந்தனர்.அங்கு பயங்கர கொடூர உருவம் கொண்ட யம கிங்கரர்கள் அஜாமிளனை நரகத்திற்க்கு இழுத்து போக முயன்று கொண்டிருந்தனர்.(தொடரும்)