Wednesday 24 September 2014

குப்தாசனம்:

 

தேகத்தில் மறைவிடத்தை பாதுகாப்பதே குப்தாசனம் எனப்படுகிறது. குப்தாசனம் ஆண்,பெண் இருவருக்குமே ஏற்றது. சமமாக பலன் தரக்கூடியது. ஆண்களுக்கு உபஸ்த இந்திரியத்தில் சுத்த ரத்தம் கிடைக்கச்செய்கிறது. அதை பலப்படுத்துகிறது. பிரம்மச்சரியம் கடைபிடிக்க உதவியாக இருக்கிறது. வீரியத்தை பாதுகாக்கிறது. சீர் இல்லாத மாதவிலக்கு அல்லது மாதவிலக்கு சமயம் ஏற்படும் கஷ்டங்கள் அதிக இரத்தப்போக்கு ஆகியவை எல்லாம் குணமாகின்றன. கற்பப்பையும் சினைப்பையும் பலப்படுகின்றன. இதை பெண்களுக்கு ஏற்பட்ட வரப்பிரசாதம் என்றே கூறலாம்.
செய்யும் விதி:
கீழே ஜமுக்காளம் விரித்து அதில் நேராக அமர வேண்டும். இடது கால் பாதத்தை ஜனன உறுப்புக்கு கீழே வைக்க வேண்டும். காலை பூமியில் பதிய வைக்க வேண்டும். பாதத்தின் அடிப்பாகம் மேல்நோக்கி இருக்க வேண்டும். இரண்டு முழங்கால்களின் பாரம் பூமியில் இருக்க இடது கால் பாதம் வலது கால் தொடைக்குள் இருக்க வேண்டும். வலது குதிகால் ஆசனவாயை நன்கு மூடி அழுத்தம் கொடுக்க வேண்டும். தலை, கழுத்து, முதுக்குத்தண்டு  சமமாக நேர்கோட்டில் இருக்க வேண்டும். இரண்டு கைகளையும் முழங்கால்களில் வைத்துக்கொண்டு ஈஸ்வரனை தியானம் செய்யலாம். ஒரு நிமிஷத்திலிருந்து பிரதி தினமும் மூன்று நிமிஷம் வரை இந்த ஆசனம் செய்யலாம். நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகநேரம்(அரைமணிநேரம்) செய்யலாம்.
இந்த ஆசனத்தில் மலத்துவாரத்தை குதையின் மூலத்தை குதிகால் அடைத்து அழுத்தம் கொடுக்கப்படுகிறது. ஜனனேந்திரியத்திற்கு கீழேயும் அமுக்கப்படுகிறது. இதை பெண்கள் மிகவும் கவனமாக செய்யவேண்டும். ஜனன இந்திரியத்தில் அழுத்தாமல் குதஸ்தானமும் ஜனன இந்திரியத்தின் கீழே உள்ள இடமும் அமுக்கப்படவேண்டும். ஆசனத்தில் குதா துவாரத்திலும் ஜனன இந்திரியத்திற்கு கீழும் ரத்த ஓட்டம் தடுக்கப்பட்டு பின் ஆசனம் முடிந்தபின் சுத்த இரத்தம் பாயும். அந்தரங்க உறுப்புகள் பலப்படும். ஆசனம் முடிந்தபின் நிச்சயம் சவாசனம் போட வேண்டும். நன்கு ஓய்வு எடுத்த பின் எழுந்திருக்க வேண்டும்.

 தொடரும்