Friday 28 June 2013

நரசிம்மாவதாரம்

 
கச்யப முனிவருக்கும் அசுர குல பெண் திதி என்ற மனைவிக்கும் ஹிரணியாக்ஷன்,ஹிரணியகசிபு என்ற இரட்டை மகன்கள் பிறந்தார்கள்.
          அச்சமயம் கல்ப காலம் முடிந்து கடல் வெள்ளம் பூமியை சூழ்ந்திருந்தது. நிலமெல்லாம் கடலுக்குள் மூல்கிவிட்ட நிலையில் ஹிரணியாக்ஷன் கடலுக்குள் திரிந்து கொண்டிருந்தான். எவராவது தன்னுடன் போர் செய்ய வர மாட்டார்களா என்று எதிர்பார்த்துக்கொண்டு இருந்தான். அச்சமயம் உயிர்கள் வாழ்வதற்காக கடலுக்கடியில் இருந்து நிலத்தை வெளியில் கொண்டு வந்து வைப்பதற்காக விஷ்ணு பகவான் வராக அவதாரம் எடுத்தார்.  ஹிரணியாக்ஷன் நிலத்தை கடலில் மூல்கி இருக்கும்படி செய்து கொண்டிருந்தான்.இறுதியில்  ஹிரணியாக்ஷனுக்கும் வராக பகவானுக்கும் பலத்த போர் மூண்டது.வராக மூர்த்தி அவனுடன் பயங்கர யுத்தம் செய்து இறுதியில் கொன்று விட்டார். அதன் பின் கடலில் இருந்து பூமியை வெளியில் கொண்டு வந்து ஸ்தாபிதம் செய்தார்.
          தம்பியை கொன்ற விஷ்ணு பகவானை பழிவாங்க நினைத்தான் ஹிரணியகசிபு. தன் குலத்தை நாசம் செய்தவர் விஷ்ணு என்று கருதி அவர் மீது தீராத பகை கொண்டான். அவரை மனதால் நினைப்பதையும் வெறுத்தான்.பெரும் தவம் இயற்றி விஷ்ணுவை விட பெரிய கடவுளாக மாற வேண்டும் என்று நினைத்தான்.
         ஹிரணியாக்ஷனின் மனைவியும் அவன் புதல்வர்களும் அழுது புலம்பிக்கொண்டு இருந்தார்கள்.அச்சமயம் தவிர்க்க முடியாத மரணத்தை பற்றி கூறும்போது போர்முனையில் வீழ்ந்து கிடந்தஉசிநர மன்னரின் சுற்றத்தாரும், மனைவி மக்களும் மீளா துயரில் இருந்த போது சாட்ஷாத் யமதர்மராஜன் சிறுவனாக வந்து அவர்களை எப்படி தேற்றினான் என்ற கதையை அவர்களுக்கு கூறினான்:
          சிறுவனாக மாறிய யமதர்மராஜா கூறினார்: “பந்துக்களே ஜீவராசிகள் எங்கிருந்து வந்ததோ அங்கு திரும்பி போய்தான் ஆகவேண்டும்.என்னை பாருங்கள் சிறுவனாக அங்கும் இங்கும் திரிந்து கொண்டிருக்கிறேன்.என் மீது ஆபத்து ஏதும் வரவில்லை. பாதையில் தவறா விட்ட பொருள் அப்படியே இருக்கிறது.ஆனால் வீட்டில் பெட்டியில் பூட்டி வைத்த பொருள் காணாமல் போகிறது.அதாவது மரணம் எந்த சூழலில் எவரை நெருங்கும் என்று தெரியாது. அதாவது வீட்டில் பொத்தி பொத்தி வளர்த்த பிள்ளைக்கு ஆபத்து வருகிறது. ஆனால் காட்டில் திரிந்த்து விட்டு க்ஷேமமாக வீடு திரும்பும் மனிதன் இருக்கிறான்.தம்பி மனைவிக்கும் புத்திரர்களுக்கும் இவ்வாறு ஆறுதல் கூறிவிட்டு ஒரு முடிவெடுத்தான்.
          நான் மரணமில்லா பெரு வாழ்க்கைபெற மூப்பு இறப்பு அற்றவனாக எவராலும் வெல்ல முடியாதவனாக ஆக வேண்டும்.மூவுலகங்களை ஆட்சி செய்யும் கடவுளாக மாற வேண்டும். அதற்கு தவம் ஒன்று தான் சிறந்த வழியாகும் என்று நிச்சயித்து சுக்கிராசரியாரிடம் ஆசி பெற்று தன் பட்டத்து ராணியிடமும் விடை பெற்றுக்கொண்டு மந்திரசல மலைச்சாரலில் கடும் தவம் மேற்கொண்டான். ஆகாயத்தை நோக்கி கைகளை மேலே தூக்கி ஒரு கால் பெரு விரலால் பூமியில் நின்ற படி உண்ணாமல் உறங்காமல் கோர தவம் செய்தான்.அவனுடய ஜடாமுடிகள் பிரளய கால சூரிய கதிர்கள் போல பிரகாசித்தன. தேவர்கள் தற்காலிகமாக நிம்மதி கிடைத்தது என்று அவர்,அவர் இடத்திற்க்கு சென்றனர்.
          ஹிரணியகசிபு நீண்ட நாள் தவத்தில் இருந்தான். திடீரென தவத்தின் வெப்பம் தலையில் இருந்து நெருப்பும் புகையுமாக கிளம்பி நான்கு திசைகளிலும் மேலும் கீழும் பரவி லோகங்களை எல்லாம் எரிக்க ஆரம்பித்தது.அந்த தீ ஜ்வாலையில் நதிகளும் சமுத்திரங்களும் கொதிகலன்ங்களானது.காடு மலை தீவுகளுடன் பூமி நடுங்கியது.தாரகையில் நட்சத்திரங்கள் உடைந்து விழுவது போல தீப்பொறி கிளம்பின.
            இறுதியில் ஹிரணியகசிபுவின் தவ தீ ஜ்வாலை தேவலோகத்தை தகிக்க ஆரம்பித்தது.தேவர்கள் பதற்றமடைந்து பிரம்மலோகத்தை அடைந்து பிரம்மாவை பிரார்தித்தார்கள்.(தொடரும்)