Friday 23 December 2011

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 42

                                                              

ஒரு கோடை காலத்தில் காட்டில் உள்ள யானை கூட்டம் அதிக வெப்பத்தால் துன்புற்று நீர் நிலையை நோக்கி சென்றது.ஓர் இடத்தில ஒரு பெரிய ஏரியை கண்டு மிக உற்சாகமாக யானைகள் நீருக்குள் இறங்கி தண்ணீர் பருகி தாமரை தண்டுகளை பிடுங்கி தின்றன.இஷ்டம் போல நீராடின.ஏரி நீரை யானைகள் கலக்கி கொண்டிருக்கும் போது திடீரென்று நீருக்கடியில் ஒரு முதலை வந்து யானை தலைவன் காலை பற்றிக்கொண்டது.நிலை தடுமாறிய யானை தலைவன் பலம் கொண்டு காலை இழுத்தது.மற்ற யானைகளும் யானை தலைவனை இழுத்தன.முதலிடம் சிக்கிகொண்ட யானையை பார்த்து மற்ற யானைகள் பிளிறின.அவைகளின் முயற்சி பலிக்காமல் போனது.நெடுநாள் கழித்து முதளையிடம் சிக்கிய யானை தலைவனை விட்டு விட்டு யானை கூட்டம் அனைத்தும் சென்று விட்டன.முதலைக்கோ நீரில் பலம் கூடிக்கொண்டே இருந்தது.
           யானைக்கும் முதலைக்கும் நடந்த இழுபறி போராட்டம் வருடக்கணக்கில் தொடர்ந்தது.யானை பலவீனமடைய தொடங்கியது.அச்சமயம் யானைக்கு கர்மவினைபயனாக முன்ஜென்ம நினைவு வந்தது.நாம் இந்த பிறவியில் வீழ்ந்து ஆசா பாசங்களில் சிக்குண்டு ஆண்டவனை மறந்தோமே என்று நினைத்தது.சரண் அடையும் அடியாட்களை காப்பாற்றும் இயல்புடைய ஸ்ரீ நாராயணர் தாம் எம்மை காப்பாற்ற வேண்டும் அவரே யம பயம் போக்கி பக்தருக்கு நற்கதி அளிப்பார் என்று நினைத்து ஆதிமூலமே ஸ்ரீ நாராயணா என்னை காத்தருள்வீர் பெருமானே இந்த தாவர ஜங்கமம் அடங்கிய வையகமும் வானகமும் காக்கும் பரம் பொருளே என்மீது தயை புரிய வேண்டும் என்று பகவானை அழைத்து. சர்வசக்தி படைத்த விஷ்ணு பகவானுக்கு யானையின் பிரார்த்தனை குரல் விஷ்ணு பகவானுக்கு கேட்டது.அவர் மனமிரங்கி கருடன் மீதேறி அங்கு வந்தார்.சுதர்சன சக்ராயுதம் ஏவி முதலையின் தலையை வெட்டினார்.யானையை இழுத்து கரையில் கொண்டு வந்தார்.அவர் ஸ்பரிசம் பட்டு யானை தன உடல் துறந்து தேவனாக மாறியது.முதலையும் சாபம் நீங்க பெற்றது.இருவரும் தேவர்களாக மாறி விஷ்ணுபகவானுடன் சேர்ந்து வைகுண்ட பதவியை அடைந்தார்கள்.
 "ப்ரமாணாந்தர்ஸயான பேக்ஷத்வாத் ஸ்வயம் பரமாணத்வாத் "
பக்தியை நிருபிக்க எந்த பிரமாணமும் தேவையில்லை.ஏனெனில் அதுவே பிரத்யட்ச பிரமாணமாக இருக்கிறது.பக்தியின் பிரேமை ஆனந்தம் தாமாக உணரப்படுகிறது.அந்த இறை இன்பம் பக்தனாக இருப்பவனுக்கே தெரியும்.மனமுருகி நினைக்கும் போதே பரவசமடைந்து நடனமும் ஆடுவார்கள்.
"சாந்திரூபாத் பரமானந்தரூபாச்ச "
பக்தி ஏன் பிரத்யட்ச பிரமாணமாக நிருபிக்கபடுகிறது?ஏனென்றால் அது சாந்தி ரூபமானது.பரமானந்த ரூபமானது.பக்தி செலுத்தினால் பக்தனுக்கு சாந்தி கிடைக்கிறது.பகவான் தன மஹா மகிமையை விட்டு இறங்கி வந்து பக்தர்கள் முன் தன் திவ்ய சக்தியுடன் பிரகடனமாகிறார்.பகவான் ஆனந்தமானவன் என்று நிரூபிக்கிறார்.இது முக்குணங்களுடன் சேர்ந்த சகுண பிரம்ம சொருபமில்லை என்று பக்தர்கள் கூறுகிறார்கள்.(தொடரும்)

No comments:

Post a Comment