Wednesday 7 December 2011

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 25

திருநாவுக்கரசர் முன் அலங்காரமாக வந்து நின்றார்கள்.வில் போன்ற நெற்றி விளைநதிழுக்க கான அமுதம் பொங்கும் கொல்வய் கனிவாய் ஒளிவீச கவர்ந்திழுக்கும் கண்கள் மின்னலிட அப்பெண்கள் இன்னிசை பாடினார்கள்.கற்பக பூந்தளிர் போன்ற காலடிகளால் மோக நடிப்புடன் அவர்கள் நடனமாடவும் தொடங்கினார்கள்.அப்சரசுகள் அப்பரின் முன் நடனமாடி பூமாரியை அவர் மீது அள்ளி பொழிந்தார்கள்.அரம்பையர்கள் பலவிததாலும் அப்பரின் மனநிலையை கவர்ந்திழுக்கவும் குலைக்கவும் முயன்றார்கள்.ஆனால் சிவபெருமானின் திருவடிகளில் சிறிதும் அகலாத அன்பு செலுத்தும் பெருந்துரவியாரான அப்பரோ அந்த பேரின்ப நிலையிலேயே நினைவெல்லாம் நிலைத்திருக்க தமது சித்த நிலை சிறிதும் மாறுபடாமல் தம் திருதொன்டிலேயே நிலையாக நின்றார்.அவருக்கு மங்கையரும் சிவமாகவே தென்பட்டார்கள்.

          மனதில் வேறு ஆசைகளை வைத்துக்கொண்டு வெளிப்பார்வைக்கு கோவிலுக்கு சென்று பக்தி கொள்வது போல இருப்பது வெளிவேசமாகும்.பகவான் மீது அன்பு இதயத்தில் இருந்து வரவேண்டும்.உள்ளம் உருகி பாட வேண்டும்.உலக விசயங்களில் ஈடுபட்டிருப்பவர்கள் இறைவன் பக்தியார் உருவாகும் பரமானந்தத்தை அறிய மாட்டார்கள்.அது போல இறைவன் பக்தி என்ற தேனை குடித்த பக்தர்கள் உலகியல் விஷயங்கள் என்ற கரும்பு சாற்றை நோக்கி போக மாட்டார்கள்.
         "அவ்யாவ்ருத பஜனாத் "
          பக்தி பகவத் பிரேமையினால் வருகிறது என்பது உண்மை தான்.அது மாறாத பக்தியாக உருவாக வேண்டுமானால் அகண்ட பஜனை அதாவது இடைவிடாத பஜனை செய்ய வேண்டும்.
          இந்த மனம் மிக மோசமானது.இதில் மிருககுணமும் உண்டு.தேவ குணமும் உண்டு.இதை இழுத்து பிடித்து பகவான் திருவடிகளில் பதிய வைக்க வேண்டும்.இல்லையேல் நொடியில் அது வேறு விசயங்களை நோக்கி ஓடி விடும்.அதற்க்கு மனம் வைராக்கியம் அடைந்து பக்குவப்படவேண்டும்.
         தியானம்,பஜனை இன்று செய்தோம்,நாளை செய்யவில்லை என்று இருக்ககூடாது.அது தொடர்ச்சியாக நடைபெறவேண்டும்.
         கீதையில் ஸ்ரீ கிருஷ்ண பகவான் இதையே கூறுகிறார்.
        அனன்ய பக்தி கொண்டு என்னை என்றும் நினைப்பவர்களுக்கு நான் சுலபமாகிவிடுகிறேன்.ஏனெனில் அவர்கள் மிக உறுதியாக இருக்கிறார்கள்.
இறைவனை நினைத்து நினைத்து அகண்ட பஜனை செய்வார்கள்.
         அன்றாட வேலைகள் செய்யும் போதும் (ஸ்நானம்,போஜனம்)வேறு பல கடமைகள் செய்யும் போதும் பகவானின் திருநாமங்களை ஜபித்துக்கொண்டே இருப்பார்கள்.உயிர் மூச்சில் நாம ஜபம் கலந்து விடும்.(தொடரும்)

No comments:

Post a Comment