Monday 12 December 2011

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 30

மகான்களின் அருள் கிட்டுவது மோட்சத்திற்கும் அது ஈடாகாது. பகவானின் பிரேமையில் இரண்டற கலந்த பெரியோர்கள் நாடி வந்தவர்கள் மனதில் பக்தியை வித்திடுவார்கள்.என்று துளசிதாசர் கூறுகிறார்.
          மகா புருஷர்களின் சேர்கையால் சீக்கிரமே நமக்கு இறையருள் கிடைத்துவிடும்.அவ்வளவு குறுகிய காலத்தில் யோகம் செய்தாலும் சாங்கிய யாகம் அறிந்திருந்தாலும் புண்ணியம் செய்தாலும் வேதங்களை படித்தாலும் தவம் தியாகம் யாகங்கள் செய்தாலும் தான தட்சிணைகள் கொடுத்தாலும் யம நியமங்கள் கடைபிடித்து தீர்த்தாடனம் செய்தாலும் விரதங்கள் இருந்தாலும் அவர்களுக்கு நான் வசப்பட மாட்டேன்.என்று பாகவதத்தில் பகவானே கூறுகிறார்.இதற்க்கு காரணம் என்ன வென்றால் மேற்சொன்ன சில சாதனைகள் இகலோக ஆசையின் அடிப்படையில் அல்லது பரலோக ஆசையின் அடிப்படையில் செயாப்படுகின்றன.மேலும் அந்த சாதனைகள் நிஷ்காம பாவமாக (பலனை எதிர்பாராத ) செய்த பின் சித்தம் தூய்மை அடைந்து முக்தி யடைய தகுதி கிடைக்கிறது.ஆனால் மஹா புருசர்களின் சேர்கையால் மிக எளிதாக சுதந்திரமாக மாறாத பிரேமை பக்தி கிடைத்து விடுகிறது.அது அவர்கள் நம் மீது அன்பு கொண்டு பேரருளை பொழிவதற்கு மட்டும் கிடைக்கும் மிக அரிதான வாய்ப்பு.
          சூத்திரத்தில் மேலும் கூறப்படுவதாவது:
பூர்வ ஜென்மத்தில் புண்ணியமான பலனால் அல்லது இறைவனை தொழுத பலனால் நேரடியாக பகவானின் சிறிதளவு அருள் கிடைத்தாலும் உய்வடயலாம்.ஆனால் பகவானின் அருளால் தான் மகா புருஷர்களின் சந்திப்பும் கிடைக்க கூடும்.அந்த சந்திப்பு மிக அரிதானது என்று அடுத்த சூத்திரத்தில் கூறுகிறார்கள்.
 "மஹத்சங்கஸ்து துர்லபோ அகம்யோ அமோகச்ச "
உலகில் நேரான சுபாவமுள்ள தர்ம சிந்தனை உள்ள நல்லொழுக்க சீலர்களாக இருக்கப்படும் தெய்வ சம்பத்து படைத்த மகான்களை காண்பது அரிது.உபதேசங்கள் சொல்வது சுலபமானது.அதை கடைபிடிக்கும் சாதுக்களோ பரம ஞானிகளோ எளிதில் கிடைக்க மாட்டார்கள்.நாம் உண்மையாக சரண் அடைந்தாலும் பாராமுகமாக இருப்பார்கள்.யோகிகளும் ஞானிகளும் விரும்பும் பிரேமை பக்தி அவர்கள் மூலமாக சாமானியமாக கிடைப்பதும் இல்லை.மேலும் உயர்ந்த ஞானிகளை அடையாளம் காண முடியாமல் போகிறது.
          சிலர் எல்லாம் அறிந்தவர்களாக சாஸ்திரம் படைத்தவர்களாக இருப்பார்கள்.கவர்ந்திழுக்கும் பேச்சு திறமை உள்ளவர்களாகவும் இருப்பார்கள்.பக்தர்கள் போல தத்துவ மேதைகள் போல நடிப்பார்கள்.மனம் உருகுவது கண்ணிற் வடிப்பது,தெய்வம் தன்னில் இறங்கி விட்டது என்று ஆடுவது எல்லாம் புற தோற்றதால் எதையும் நிச்சயமாக நம்ப முடியாது.சிலர் ஆழ்கடல் போல எந்த ஆர்பாட்டமும் அல்லாது இருப்பார்கள்.எதையும் நிச்சயிக்க முடியாது.நான் தான் பெரிய ஞானி என்று எவரும் தன வாயால் சொல்வதில்லை. ஆதலால் உண்மையான மகானை கண்டுபிடிப்பது மிகவும் கடினம்.அதிஷ்டவசமாக ஒருவர் கிடைத்துவிட்டால் பிறவி எடுத்த பலனை அடைந்துவிடலாம்.அவரிடம் சென்று சரண் அடைந்தது வீண் போகாது.
         சாதரணமாக ஒரு நல்லவரோடு நட்பு கொள்ளும்போது நம் மனதிற்கு இதமாக இருக்கிறது.நமது துன்பங்கள் தீர்ந்துவிட்டது போல அனுபவம் உண்டாகிறது.அதற்கும் மேலாக நமக்கு மகா புருசர்கள் கிடைத்தால் நமது பாக்கியமே பாக்கியம்.அவர்கள் நம் மனதை தூய்மை படுத்தி பகவானை நோக்கி திருப்பி விடுவார்கள்.அவர்கள் தரிசனத்தால் நமக்கு அடிமனதில் பக்தி சுரக்கும்.(தொடரும்)

No comments:

Post a Comment