Saturday 17 December 2011

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 36

"யோ விவிக்த ஸ்தானம் ஸேவதே யோ லோக பந்தமுன்மூலயாதி நிஸ்த்ரைகுன்யோ பவதி யோக க்ஷேமம் த்யஜதி "
          இதற்க்கு முன் சொன்ன சூத்திரத்தில் மாயையை கடக்க மூன்று வழிகள் கூறப்பட்டுள்ளன.இந்த சூத்திரத்தில் ஐந்து உபாயங்களை கூறுகிறார்கள்.
           நான் எனது,என்ற பற்று சொத்து சுகங்கள் நடுவில் இருந்தால் வைராக்கியம் உண்டாகாது.மேலும் பற்று தான் உண்டாகும்.ஆதலால் பகவத் விஷயங்கள் அல்லாதவற்றில் நெருக்கம் கொள்ளாமல் தனித்து வாழ வேண்டும்.என்று சூத்திரத்தில் கூறி இருக்கிறார்கள்.பகவத்கீதையிலும் பகவான் அதையே கூறுகிறார்.
"விவிக்ததேசஸேவித்வமரரதிர் ஜனஸம்ஸதி "   
உலகியல் விவகாரங்களில் ஈடுபட்டிருக்கும் ஜனக்கூட்டத்தில் இருந்து விலகி தனித்து இருக்க வேண்டும். இந்த சூழ்நிலை பகவத் தியானத்திற்கு உகந்தது.
எவ்வளவு தான் பகவான் மீது ஈடுபாடாக இருந்தாலும் அதற்க்கு தக்க சூழ்நிலை இல்லாவிடில் எதிலும் சரியாக கவனம் செலுத்த முடியாது.பகவானின் பிரேமையில் கட்டுப்பட வேண்டுமானால் உலகியல் பந்தங்கள் என்ற கட்டுக்களை அறுக்க வேண்டும்.உலகியல் விவகாரங்களில் எவ்வளவு துன்பம் இருக்கின்றன.பகவானை நோக்கி போகும் பக்தி வழி எவ்வளவு நிம்மதியும் ஆனந்தமும் இருக்கின்றதென ஒப்பிட்டு பார்க்கவேண்டும்.இதனால் தாமாக பந்த பாசங்கள் கழன்று விடும்.
          முக்குணங்களில் உருவானதே இந்த உலகம். உலகப்பற்றை அறுக்க வேண்டுமானால் முக்குணங்களில் இருந்து விடுபட வேண்டும்.சாத்வீக,ராஜச,தாமச குணங்களை ஜெயிக்க வேண்டும். இல்லையேல் அவை உலக விவகாரங்களில் நம்மை அமிழ்த்திவிடும்.
         சாத்வீகம் என்பது அதிக அன்பும் பாசமும் அதிக இரக்கமும் கொள்வது.அதிக அன்பாலும் அதிக இரக்கத்தாலும் ஒருதலை பட்சமாகிவிடும் நிலையில் ஒருவருக்கு பரிந்து, ஒருவரை பகைத்து கொள்ளும் கட்டாயம் ஏற்படும்.அல்லது பிறரை இம்சிக்கும் குணம் தலை தூக்கும்.
         ராஜசம் என்பது கோபம் வேகம் பிறரை இம்சிக்கும் குணம் ஆகியன.தாமசம் சோம்பல்,செயல்படாமல் தூங்கிகொண்டிருப்பது,மயக்கம் முதலியன.இவை மூன்றும் தவிர்க்கப்பட வேண்டும்.
        கிடைக்காதது,கிடைப்பது-யோகம் எனப்படுகிறது.
         கிடைத்ததை காத்துக்கொள்வது க்ஷேமம்.க்ஷேமம் என்றால் நலன்கள் என்றும் பொருள் கொள்ளலாம்.இதில் உலகியலில் கிடைக்காத சுக போகங்கள் கிடைப்பதை யோகமும் கிடைத்த நலன்களை காத்துக்கொள்வதை க்ஷேமம் என்றும் கூறலாம்.இந்த உலகியல் யோக க்ஷேமங்களை பற்றி சிந்திக்காமல் இருக்க வேண்டும்.கிடைத்தாலும் விலகி கொள்ள வேண்டும்.
         மற்றொரு யோக க்ஷேமம் -- கடவுள் விசயத்தில் யோகமேன்பது கடவுளை அடைவது அல்லது கடவுளை அடையும் உபாயத்தை ,வழியை அடைவது. க்ஷேமம் என்றால் பகவானை அடையும் வழியை அறிந்து அதிலுருந்து பிறழாமல் சாதனை செய்வது.
         இரண்டுவித யோக க்ஷேமங்களை பற்றி கொண்டு கவலை பட்டுக்கொண்டு இருக்க வேண்டாம். எல்லாவற்றையும் முழு பொறுப்பையும் பகவானிடம் அர்ப்பணித்து விட்டு பகவானை வழிபடுதளிலேயே குறியாக இருக்க வேண்டும்.என்று சூத்திரத்தில் கூறுகிறார்கள்.என்னை மட்டும் உபாசிக்கும் பக்தர்கள் என்னை மட்டும் நம்பி இருப்பார்கள்.அவர்களின் யோக க்ஷேமங்களை நானே பொறுப்பேற்று சுமந்து கொண்டு இருக்கிறேன்.
"போஜனாச்சாதனே.சிந்தா வ்ருதா குர்வந்தி வைஷ்ணவா
யோ அசௌல விச்வம்பரோ தேவ ஸ கிம் தாஸானு பேக்ஷதே "
வைஷ்ணவர்கள் உணவு உடை பற்றி ஏன் வீணாக கவலை பட வேண்டும்? அகில விசுவத்திர்க்கும் உணவளிப்பவன் தன பக்தர்களை மறந்து விடுவானா?
                                                                                                                    (தொடரும்)

No comments:

Post a Comment