Monday 5 December 2011

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி23

          இவர்கள் பக்திக்கு இருப்பிடமான இறைவனுடன் இரண்டற கலந்து விடுகிறார்கள்.மற்ற ஞானம் முதலிய விஷயங்கள் முக்கியமில்லாமல் போய்விடுகின்றன என்று நாரதர் கூறுகிறார்.
        "ஸ்வயம் பலரூபதேதி ப்ரஹ்ம குமாரா:"  
          சனகாதி முனிவர்களும் ஸ்ரீ தேவரிஷி நாரதரும் பக்தியால் தான் பக்தியின் உயர்ந்த நிலைக்கு போக முடியும் என்கிறார்கள்.பக்தியே சிறந்த பக்தி என்ற பலனை தருகிறது.ஆதலால் (அதுவே)பக்தி தாமே பலனாக இருக்கிறது.பக்தர்கள் பக்தியை வளைக்கவே மேலும் பக்தி செய்கிறார்கள்.அதாவது இறைவனை நேசிக்கிறார்கள்.பக்தி இயற்கையாகவே தாமாக வருகிறது.அதை விட சிறந்தது எதுவும் இல்லை.அது ஆண்டவனையும் வசப்படுத்தி விடுகிறது.
       "  ராஜ க்ருஹ போஜனாதிஷு ததைவ த்ருஷ்டத்வாத் 
ந தேன ராஜ பரிதோஷ: க்ஷ்தாசாந்திர்வா "
          அரசனின் அரண்மனையும் ராஜ போக உணவும் நன்கு அறிந்து கொள்ளும் போது அதை பற்றி முழு ஞானம் தான் ஏற்படுகிறது.ஆனால் அனுபவ பூர்வமாக உணர முடியாது.அதாவது அரசனின் அரண்மனை பற்றியும் அரசனை பற்றியும் அறிந்து கொண்டால் அரசனை மகிழ்விக்க முடியுமா?
          அரசன் அறங்காவலன் மிகுந்த படை பலம் பெற்று வலிமையானவன்.குடிமக்களுக்கு நன்மை செய்பவன் என்று தெரிந்து கொண்டால் அரசனிடம் நட்பு கொண்டாட முடியாது, அல்லது அரச போக உணவை அறிந்து கொண்டால் பசி தீராது.அது போல வேத சாஸ்திரங்களை படித்து இறைவனை தத்துவார்த்தமாக அறிந்து ஞானம் பெற்றாலும் அந்த இறை அனுபவம் கிட்டாது. இறை அனுபவம் தியானத்தாலும் யோகத்தாலும் மட்டுமே கைகூடும்.இறைவனை தியானித்துக்கொண்டு இருந்தால் பிரேமை பக்தி முற்றிய நிலை அடையும்.அதனால் உள்ளம் கரைந்து இறை அனுபவம் உண்டாகும்.
         பகவத் கீதையில் பகவான் கூறுகிறார்:
பக்தி மிக கொண்டு என்னை தொழுதால் நான் அவர்கள் உள்ளத்தில் குடியிருப்பேன்.அவர்களும் என்னுள் இருப்பார்கள்.
 "தஸ் மாத் சை(सै )வ க்ராஹ்யா முமு க்ஷூ பி " 
          பிறப்பு இறப்புகளில் இருந்து பற்று என்ற பந்தத்திலிருந்து விடுபட் வேண்டுமானால் பக்தியை தான் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
         பிரேமை பக்தியோடு தன வாழ்க்கை யை இணைத்து கொண்டால் பகவானின் தெய்வீகத்தை பிரத்யட்சமாக உணரலாம்.மேலான பக்தியில் ஈடுபட தியாகராஜ சுவாமிகளும் புரந்தர தாசரும் ஆண்டவனை பிரத்யட்சமாக கண்டார்கள்.அவர் அருளை பெற்று சித்தி அடைந்தார்கள்.யோகிகளும் முனிவர்களும் சிரமப்பட்டு கிடைக்கும் முக்தி பக்தர்கள் முன் அடிமை போல வந்து விடுகிறது.ஆனால் பக்தர்களோ முக்தியை விரும்ப மாட்டார்கள்.பகவானை தான் விரும்புவார்கள்.இப்படிப்பட்ட உயர்ந்த நிலைக்கு கொண்டு போகும் பக்தி மார்க்கத்தை விட்டு வேறு மார்க்கத்தை ஏன் பின்பற்ற வேண்டும்?
      "தஸ்யா ஸாதனானி காயன்த்யா சார்யா:"  
கர்மயோகத்தையும் ஞானத்தையும் விட பக்தியே சிறந்தது என்று கூறிவிட்டு பக்தி யோகத்தை கூறும் நாரதர் பக்தி மார்க்கத்தை பின் பற்றும் ஆச்சாரியர்கள் உபதேசிக்கும் உபாயங்களை கூறுகிறார்.
       " தத்து விஷயத்யாகாத் ஸ ங்கத்யாகாச்ச"
பக்தியோக வழியில் செல்ல வேண்டுமானால் ஆசைகளை தூண்டும் விசயங்களை துறக்க வேண்டும்.அந்த இன்பம் என்று கருதப்படும் விசயங்களில் ஒட்டுதல் இல்லாமல் இருக்க வேண்டும்.(தொடரும்)

1 comment:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete