Thursday 8 December 2011

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 26

"லோகே அபி பகவத்குணச்ரவண கீர்தனம்" 
உலகில் மனித சமுதாயத்தின் நடுவில் வாழ்ந்து கொண்டிருக்கும் போது மனதில் இறைவனை சுமந்து கொண்டே இருக்கவேண்டும்.அவனுக்காக எல்லா பணிகளையும் செய்ய வேண்டும்.காதால் அவன் புகழ் கேட்கவும் வாக்கால் அவன் புகழ் பாடவும் அதிகநேரம் செலவிடவேண்டும்.அவ்வாறு செய்யும் போது வெட்டிபேச்சுகளிலும் வீண் விவகாரங்களிலும் ஈடுபட வாய்ப்பிருக்காது.
         சுயநலத்திற்காக பொருளீட்டுவதற்காக பணத்திற்கு பின்னால் போகும்  
மனிதர்கள் சொந்த சுகத்திற்காக உயிர் வாழ்ந்து இறக்கும் மனிதர்கள் சாரமில்லாத உலகில் எதை சாதித்தார்கள்.இவர்கள் ஐந்து அறிவு இரண்டறிவு ஓரறிவு படைத்த மிருக பட்சி ஜீவா ஜந்துக்களை விட கீழானவர்கள்.ஏனெனில் மிருக பட்சிகளுக்கு சூதும் பொய்யும் தெரியாது.பிறரை வஞ்சிக்க தெரியாது.
        பகவான் சம்பந்தப்பட்ட இல்லாத கதைகளும் பேச்சுக்களும் உலகவாழ்க்கைக்கு தேவையாக இருக்கலாம்.ஆனால் இறைவனை நெருங்க வேண்டும் என்று பக்தி செய்பவர்களுக்கு அவை வீணானவையே.பகவானின் திருநாமங்களும் குணங்களும் அடங்கிய பாட்டு அதுவே புண்ணியமும் மங்களமும் தரும்.இதுவே சாத்தியமானது.அந்த மகிமையை அறிந்தவர்களுக்கு ரம்யமாகவும் சலிக்காமலும் நித்தமும் புத்தம் புதிதாகவும் இருக்கும்.மனதிற்கு இன்பம் தரும்.அதை மனதில் பக்தியுள்ளவர்களே அனுபவிக்க முடியும்.ஆனந்தமாக அதை ஏற்றுக்கொள்பவர்களுக்கு துக்ககடலில் இருந்து கரை சேரும் உணர்வு ஏற்படும்.
       பகவானின் பஜனையில் கலந்து கொள்பவர்கள் சிரத்தையுடன் திருவிளையாடல் புராண கதைகளை கேட்பவர்கள் நிச்சயம் பக்தர்களாகி விடுவார்கள்.பாகவத புராண முடிவில் சுகதேவர் கூறுகிறார்.(தொடரும்)

No comments:

Post a Comment