Saturday 24 December 2011

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 43

ரிஷி முனிவர்கள் வியாசர்,நாரதர்,சுகதேவர் ஆகியோர் உருவமற்ற பரப்ரம்மத்தை உணர்ந்தவர்கள்.தியான சமாதியில் பரமானந்த பேரின்பத்தை அடைந்தவர்கள்.ஆயினும் இவர்களில் பகவானின் தெய்வீக குணங்கள் ,தெய்வீக இசை,ஆகியவற்றில் தன்னை இழந்து விட்டார்கள்.ஏனெனில் பகவானின் திருமேனி மாயையோடு கூடியது அல்ல.இது தெய்வீக ஜோதி சொரூபமானது.பகவத் கீதையில் அர்ச்சுனன் வியந்து தரிசித்த ரூபம்.இதை சொல்லிலடங்கா பரம சாந்தியாக ஆனந்த கடலாக வர்ணித்தாலும் நிறைவாகாது.அந்த பரஞ்சோதியின் பிரேமையும் அப்படிபட்டதேயாகும்.
" லோகஹானௌ சிந்தா ந கார்யா நிவேதி தாத்ம லோகவேதத்வாத் "
பக்தர்கள் உலகியல் விசயங்களின் லாப நஷ்டங்களை பற்றி கவலைப்பட வேண்டியதில்லை.ஏனெனில் சிந்தை எல்லாம் சிவமயமாக அல்லது ஹரி மயமாக இருக்கும் போது அங்கு வேறு விசயங்களுக்கு இடமேது? உலகியல் கடமைகளையும் வேத சாஸ்திரங்களை பின்பற்றி வாழும் முறைகளையும் முன்பே அவன் அர்ப்பணம் செய்து விடுகிறான்.பக்தியின் உச்சகட்டத்திற்கு போன பின் தன்னையும் தன் கடமைகளையும் கூட மறந்து விடுகிறான்.மற்ற சிந்தனைகள் அவனை விட்டு தாமாகவே விடைபெற்று விடுகின்றன.தன்னையே அர்ப்பணித்து விட்ட பின் அவனை சார்ந்த மனைவி, மக்கள்,சொத்து சுகங்கள் எல்லாம் தாமாக பகவான் திருவடியில் சேர்ந்து விடுகின்றன.அவன் உயிர் வாழ்வதற்காக மட்டும் பட்டற்று கடமைகளை செய்கிறான்.
"ந ததஸித்தௌ லோகவ்யவ ஹாரோ ஹேய :
 கிந்து பலத்யாகஸ்தத் ஸாதனம் ச கார்யமேவ " 
மேற்சொன்னவாறு உலகியல் விசயங்களும் வேத சாஸ்திர கடமைகளும் பக்தியின் மேல்நிலையில் தாமாக விடுபடாவிட்டால் கடமைகளை அவசியம்
செயலாற்றிக்கொண்டே இருக்க வேண்டும்.நல்ல கர்மங்களின் புண்ணிய பலனை ஆண்டவனுக்கே கொடுத்து விட வேண்டும்.பகவானுக்காகவே சேவை செய்வது போல பிற உயிர்களுக்கு நன்மை செய்து வாழ வேண்டும். அவ்வாறு செய்தால் தற்பெருமை ஒழியும். பக்தியின் ஆரம்பபடியில் இருப்பவர்கள் தீமையிலிருந்து விலகி சுயநலமின்றி தேவ பூஜைகளையும் பித்ரு கடனையும் சாஸ்திரங்கள் கூறியபடி செய்வார்கள்.
"ஸ்திரிதன நாஸ்திக வைரி சரித்ரம் நச்ரவணியம்"
முன் சொன்ன சூத்திரங்களில் உலகில் வாழ்வதற்கு உதவும் கடமைகளை, பக்தியை ஒரு சாக்காக வைத்து துறக்க வேண்டாம் என்று கூறியிருந்தார்கள்.இருப்பினும் பக்தி மார்க்கத்தில் செல்பவர்கள் சில தீமைகளில் இருந்து விலகியே இருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள்.
          பெண் முஹம பிடித்த நபர்களுடன் நட்பு கொள்ள கூடாது.பேராசை பட்டு பணம் சம்பாதிப்பதிலேயே குறியாக இருக்க கூடாது.நாத்திகம் பேசும் நபர்களிடம் சகவாசம் கூடாது.தமக்கு எதிராக செயல்படும் நபர்களிடம் தீராத பகையும் வேண்டாம்.அவர்களை பற்றி புறம் பேசவும் வேண்டாம்.அவர்கள் வரலாற்றினை கேட்கவும் வேண்டாம்.
          ஆண்களை வசியபடுத்தும் சுபாவமுடைய பெண்களிடம் நட்பு கொள்வது மரணத்தை தழுவுவதற்கு சமமானது.ஏனென்றால் யானைகூட்டத்திற்க்கு தலைமை தாங்கும் யானையை மற்ற யானைகள் வந்து அதனுடன் சண்டையிட்டு வீழ்த்திவிடும். அதனால் தன் ஆத்மாவை மேன்மை அடைய செய்து பக்தி யோக வழியை பின் பற்றி வாழ விரும்புகிறவன் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.(தொடரும்)


No comments:

Post a Comment