Wednesday 30 November 2011

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 18

ஸ்ரீகிருஷ்ணன் பதிலுரைக்கிறார்:
         பிரிய சகிகளே ஒருவர் அன்பை காட்டினால் தான் மற்றவர் அன்பாக இருப்பது அது சுய நலத்தின் அடிப்படையில் உருவாகிறது.அது ஒன்றை கொடுத்து ஒன்றை வாங்குவது போல வியாபாரமாகிறது.அதில் உள்ளார்ந்த நட்பும் இருக்காது.தர்மமும் இருக்காது.அந்த அன்பு நிலைத்தும் இருக்காது.ஏனெனில் காரியம் முடிந்தவுடன் அவர்கள் விலகிசெல்வார்கள்.
         இரண்டாவது ரகத்தினர் அன்பு செலுத்தாமல் இருந்தும் அன்பாக இருப்பார்கள்.சான்றோர்,குரு,தாய்,தந்தையர்கள் இவர்கள்.சுபாவத்திலேயே பாசமுள்ளவர்கள் இதயத்தில் அன்பு சுரந்து கொண்டே இருக்கும்.அன்பு செலுத்தாவிட்டாலும் அவர்கள் நன்மைக்காக பாடுபடுபவர்கள்.மகான்கள் அல்லது உண்மையான நண்பர்களும் இருக்கலாம்.இவர்களின் அன்பில் சத்தியமும் தர்மமும் இருக்கும்.
          மூன்றாவதாக எவ்வளவு அன்பு செலுத்தினாலும் அன்புடன் இருக்க மாட்டார்கள்.முற்றும் துறந்த யோகிகளுக்கு அன்பும் கருணையும் கூட தடையாக இருக்கும்.அவர்கள் இறைவனை அனைத்துயிர்களிலும் காண்பார்கள்.அவர்கள் அன்பு பாசம் ஆகிய வலையில் விழாமல் பற்றற்று இருப்பார்கள்.இவர்களும் யோகா சாதனையில் ஈடுபட்ட சாதகர்களும் எவரிடமும் எதையும் விரும்பாமல் பற்று என்ற அன்பை பிறரிடம் காட்ட மாட்டார்கள்.
          வேறொரு ரகத்தினர் புத்தி சுவாதீனம் இல்லாதவர்கள்.தம்மிடம் யார் அன்பு செலுத்துகிறார்கள் என்பதை அறிய மாட்டார்கள்.மற்றொரு ரகத்தினர் உபகாரம் செய்து தன்மீது அன்பு கொண்டவர்களிடமும் பிரியமாக இருக்க மாட்டார்கள்.இவர்கள் கல் நெஞ்சக்காரர்கள்.அல்லது துரோகிகள்.நெஞ்சில் பகை வளர்த்துக்கொண்ட பகையாளிகள் அல்லது திருடர்களாகவும் தீயவர்களாகவும் இருப்பார்கள்.
          கோபியர்களே மேற்சொன்ன எல்லாவித அன்பும் என்னில் பொருந்தாது.இறைவன் உயிர்களிடம் செலுத்தும் அன்பு என்ற அருள் ஒப்பற்றது.அதற்க்கு எதுவும் ஈடாகாது.இறைவன் அருள் எங்கும் ஒரே மாதிரி தான் பொழிகிறது.இறைவன் அருளை பெறுவதற்காக பக்குவப்படுவதர்க்காக வைரம் போல பக்தர்கள் பட்டை தீட்டப்படுகிரர்கள்.நான் உங்களை விட்டு பிரியும் போது அது உண்மையான பிரிவு அல்ல.என்னில் மேலும் மேலும் அதிக அன்பும் ஏக்கமும் பெருகத்தான் நான் திடீரென்று மறைந்து போகின்றேன்.
"பொக்கிசத்தை அடைந்த பின் அது தொலைந்து போனதும் அதில் மிகுந்த பற்று ஏற்படுகிறதல்லவா?அது போல நீங்கள் என்னை மறக்காமல் இருப்பீர்கள்.எனக்காக நீங்கள் குடும்பத்தையும் வேத சாஸ்திர கடமைகளையும், ஆசைகளையும், உறவினர்களையும் கூட துறந்து என்னிடம் சரணடைந்து விட்டீர்கள்.மேலும் தன் அதிஷ்டத்தை பற்றியும் அழகை பற்றியும் கர்வம் கொள்ளாமல் இருக்க உங்கள் எதிரில் நானும் என் அருளும் சுலபமானவை அல்ல என்று அறிவுருத்துவதர்காகவே நான் மறைந்து போனேன்.ஆதலால் நீங்கள் என் அன்பில் குற்றம் காணாதீர்கள்.எனக்காக சாஸ்திர சம்பிரதாயங்களை தகர்தெறிநதீர்கள்.யோகிகளாலும் அறுக்க முடியாத குடும்ப பந்த பாசங்களை அறுத்தெறிந்து விட்டீர்கள்.என் மீது தூய அன்பை வைத்தீர்கள்.சித்தத்தில் இமை பொழுதும் நீங்காது எனது இனிய நினைவில் வாழ்ந்து அளவு கடந்த பக்தி செய்து தியாகம் செய்து என்னை கடனாளியாக்கி விட்டீர்கள்.அந்த கடனை இறவா வாழ்வு  பெற்று தெய்வீகதாலும் முடிவில்லா காலத்திலும் என்னால் தீர்க்க முடியாது.பரந்த மனம் கொண்டு எல்லையற்ற பிரேமையினால் என்னை ஆட்கொண்டு நீங்கள் தான் என்னை கடனில் இருந்து விடுவிக்க வேண்டும்.
" ஸாது கர்மக்ஞான யோகேப்யோ அப்யதிகதரா "
அந்த பிரேமை பக்தி,கர்ம யோகத்தை விட, ஞான யோகத்தை விட சிறந்தது.எளிதானது.நிச்சம ஞானயோகமும் கர்மயோகமும் யோகமும் மற்ற எல்லா வழிகளும் ஆண்டவனிடம் கொண்டு சேர்கின்றன.ஆனால் இவற்றை சரியாக அனுஷ்டிககாமல் நடுவில் சில தவறு நடந்தாலும் ஆரம்பத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டியது தான்.மேலும் இவற்றை கடைபிடிக்க பல யம நியமங்களை அனுசரிக்க வேண்டும்.(தொடரும்)

No comments:

Post a Comment