Tuesday 8 November 2011

வில்வ இலை

         




  பறபல  தெய்வங்களுக்கு நாம் வாசனை மலர்களால் பூஜை செய்கிறோம்.அவ்வாறு இருந்தும் திருமாலுக்கு துளசி உகந்தது போல சிவபெருமானுக்கு வில்வ இலை உகந்தது.
          சிவபெருமானை பல வாசனை திரவியங்களால், தாமரை புஷ்பங்களால், சங்கு புஷ்பங்களால், வில்வ இலைகளால் பூஜித்தால் லக்ஷ்மி பாக்கியம் ஏற்படும். இது சிவபுரான வாக்கு. சிலசமயம் வேறு புஷ்பங்கள் கிடைக்கவிட்டாலும் வில்வ பத்திரமே போதுமானது.
          வில்வ பத்ரார்பனேனைவ ஸர்வபூஜா பிரஸித்தியத்தி. வில்வர்ப்பணம் செய்தால் மட்டும் பூஜையின் முழு பலனை பெறலாம். 
          வில்வ மகாத்மயம் கூறுகிறது.  வில்வசெடியின் அடியில் மகாதேவனை பூஜனை செய்தால் சிவாசாலோக சாயுஜ்ய பதவி கிடைக்கும். அபிஷேகம் செய்தால் எல்லா தீர்த்த ஸ்தான பலனும் கிடைக்கும். வில்வசெடியின் அடியில் தூபம் கொளுத்தி தீபம் காட்டினால் சகல பாவங்களும் நீங்கும். வில்வ மரத்தின் கீழ் சிவா பக்தர்களுக்கு அன்னதானம் செய்தால் அவனுக்கு சகல செல்வமும் கை கூடும். வில்வபத்ர பூஜையின் ரகசியம் என்பது அது மூன்று மூன்று இலைகளாகவே பிரிந்துள்ளது. அது பசு,பதி, பாசம் என்று எடுத்துகொள்வார்கள். பசுவிற்கு நடுவில் பாசத்தை எடுத்தால் பசுபதி என்ற ஒரு சொல்லாக மாறுகிறது.பசு என்பது ஜீவாத்மா தன் ஆத்மாவை பதியில் சேர்க்க நாம் சிவனை வழிபடுகிறோம்.
          ரிக்கு வேதம் கூறுகிறது: ஓம் பூர் புவ : ஸ்வ: ஓம் த்ரயம்பகம் யஜாமஹே ஷுகந்தீம் புஷ்டிவர்தனம் உர்வாருகமிவ பந்தனான மிருத்யோர் முக்ஷிய மாம்ருதத்
          போஷிக்ககூடிய நறுமணம் மிக்க முக்கண்ணனை வழிபடுகிறோம். மரணம் என்ற நாசத்தை அறுத்தெறிந்து அமுதத்தின் அமரத்துவத்தின் சமிபம் கொண்டுபோய் சேர்த்துவிடு.
          ம்ருத்யோர் மா அம்ருதம் கமய 
          அன்ருதான்மம் ரிதம் கமய
          தமஸோமம் ஜ்யோதிர்கமய 
          அசத்தியத்தில் இருந்து சத்யத்தில் என்னை சேர்த்து விடு. இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு என்னை கொண்டு போய் விடு. வில்வ இலை இவை மூன்றையும் விளக்குகிறது. 
          வில்வம் ஆயுர்வேதத்தில் சிறந்த ஒளஷதமாக இடம் பெற்றுள்ளது. அது சளி போன்ற கபசம்பந்தமான நோய்களை தீர்க்கும் சிறந்த மருந்தாக பயன்படுகிறது.  



No comments:

Post a Comment