Saturday 12 November 2011

நாரத பக்தி சூத்திரம் முன்னுரை



ஷட் தரிசனம் என்று சொல்லப்படும் ஆறு தத்துவ சாஸ்திரங்களில் பக்தியோகம் முக்யத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. தியானயோகம் (பதஞ்சலி யோகம்),ஞானயோகம் (வேதாந்தம்-உபநிஷத்துக்கள், பிரம்ம சூத்திரம் ) ஹட யோகம் , ராஜயோகம் , கர்மயோகம்,(பகவத் கீதை)ஆகிய யோகங்களில் பக்தியோகம் மிக சுலபமானது,எளிமையானது. இந்த பகதியோகமானது மேற் சொன்ன மற்ற அனைத்து யோகங்களில் அங்கம் வகிக்கிறது. ஏனெனில் அனைத்து யோகங்களிலும் பக்தி இல்லாமல் வெற்றி பெறாது. ஆதலால் ஆன்மீக பாதையில் குறிக்கோளை அடைய வேண்டுமானால் பக்தி மிக மிக அவசியம். இங்கு ஸ்ரீ நாரதர் காட்டிய வழியில் அவர் இயற்றிய பக்தி சூத்திரங்களை எழுதி விளக்கமளிதிருக்கிறோம்.
          பக்தி யோகத்தின் ஆசாரியார் ஸ்ரீ நாரதர், இவர் 84 சூத்திரங்கள் மூலமாக பக்தி தத்துவத்தை வியாக்யானம் செய்துள்ளார். பக்திக்கு துணையாக உள்ள சாதனங்கள், பக்தியின் மகிமை, பக்திக்கு குறுக்கே வரும் இடர்கள் ஆகியவற்றை விரிவாக கூறியிருக்கிறார்கள். 
          உருவமுள்ள கடவுளின் (பிரம்மத்தின்) தெய்வீக சொருபத்தில் ஏற்படும் அன்பு தான் பக்தி. இது ஞானத்திற்கு புறம்பானது அல்ல. ஸ்ரீ கிருஷ்ணாஅவதாரத்தில் கோபிகா பெண்கள் பக்தி செய்து ஞானம் பெற்றார்கள்  என்று தேவரிஷி நாரதரே நிருபித்து இருக்கிறார். பரமாத்மாவிடம் அன்பு செலுத்தாமல் ஞானம் வராது. அதே போல பக்தியினால் கர்ம யோகம் சித்தி பெறுகிறது. பக்தி ரசத்தை அந்த ஆனந்தத்தை அனுபவித்தவர்களே அறிவார்கள். 
           பாகவத புராணம் கூறுகிறது:
                      நித்தமும் சூரியன் உதயமாகிறது. பூமி சுழன்று கொண்டிருக்கிறது. அதில் உயிர்கள் நித்தமும் பிறக்கின்றன, இறக்கின்றன. இந்த வாழ்வியலில் ஆறு அறிவு இல்லாத விலங்குகளும், பூச்சி புழுக்களும் வாழ்ந்து மடிகின்றன. இவற்றின் வாழ்வு அர்த்தமில்ல்லாமல் போகிறது.ஏனெனில் இறைவன் அருளை உணராத பிறவிகளாக இருப்பவைகள். நித்தமும் எதையும் உண்டு வாழ்கின்றன, இனபெருக்கம் செய்கின்றன, பின்பு மடிந்து விடுகின்றன. ஆனால் மனித உயிர் அப்படி அல்ல. அவன் இந்த கீழான விலங்கினதுடன் சேரகூடாது. அவைகள் போல் உண்டு வாழ்ந்து மடிவதற்கா மனித பிறவி எடுத்து  இருக்கிறான்? இறைவன் அருளை உணராமல் வாழ்ந்து என்ன பயன்? பாரதத்தின் தத்துவ சாஸ்திரம் உலக வாழ்வியலே பெரிது என்று சொல்ல வில்லை . அதனினும் மேலானது ஒன்று இருக்கிறது. அதுவே நிலையான பேரின்பமாகும். 
          பிறப்பெடுப்பது உலகியல் வாழ்கையை அனுபவிபபதர்க்காகவே தான் என்று மற்ற தேசத்து கலாசாரங்கள் கூறுகின்றன. மேலை நாட்டு மக்களும் அதையே ஆமோதிகிறார்கள். ஆனால் இந்திய நாட்டு தத்துவ ஞான சாஸ்திரங்கள் அப்படி கூறவில்லை . 
          இந்த பூமியில் ஆனந்தம் காண எவ்வளவோ விஷயங்கள் இருக்க தான் செய்கின்றன. நல்ல சுகமாக, ஆனந்தமாக,வசதியாக,  வாழ பழையகாலத்து இந்தியமக்கள் விஞ்ஞான கண்டுபிடிப்புகளில் கவனம் செலுத்தவில்லை. 
          எகிப்து முதலிய நாட்டினர் போல பிணங்களை பாடம் செய்து வைக்கவில்லை. நிலையற்ற பொன்னும் வைரங்களும் அவர்கள் போல சேர்த்து வைக்கவில்லை. அதற்க்கு மாறாக உயிர்களும் மனிதர்களும் பிறவி எடுத்த தேகம் நிலையில்லாதது . அதற்குள் இருக்கும் ஆத்மா அழிவில்லாதது அதை மட்டும் உணர்ந்து கொண்டால் பேரின்பம் அடையலாம் என்று இந்தியர்கள் கருதினார்கள்.
                                                                                                                 (தொடரும் )

No comments:

Post a Comment