Thursday 24 November 2011

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 13

"தல்ல க்ஷணானி  வாச்யந்தே நா நா மதபேதாத்"  
பிரேமை பக்தியின் லக்ஷணத்தை கூறுகிறார்கள்.பக்தியின் லக்ஷணங்களை பல ஆச்சாரியர்கள் பலவிதமாக கூறுகிறார்கள்.அவர்கள் கருத்தை கூறிவிட்டு
ஸ்ரீ நாரதர் அதன் பின்பு தன கருத்தை கூறி இருக்கிறார்கள்.
"பூஜாதிஷ் வனுராக  இதி பாராசர்யா:"
பராசர மாமுனிவர் புதல்வர் ஸ்ரீ வியாசபகவான் பகவானை பூஜிபபதன் மூலம் பக்தியை வெளிப்படுத்தலாம், அதில் மிகுந்த ஈடுபாடு தான் பக்தி என்று கூறுகிறார்.மனம்,வாக்கு,தேகம்,இவை மூன்றையும் பூஜை செய்யும் கருவிகளாக பிரயோகிக்கவேண்டும்.பகவானின் பிரதிமைக்கு (விக்ரஹத்திற்கு)பூஜை செய்ய வேண்டும்.அல்லது பகவானை விசுவாத்மாவாக நினைத்து அனைத்து உயிர்களிலும் உறைபவன் என்று அனைத்து உயிர்களையும் நேசிக்க வேண்டும்.இப்படிப்பட்ட பக்தன் முற்றிலும் பகையை துறந்து விடுவான்.ஆசைகளுக்கு அடிமையாக மாட்டான்.விஷ்ணு பகவானை பூஜை செய்பவர்கள் சாசுவதமான பரம பதத்தை அடைவார்கள் என்று விஷ்ணு ரகசியம் கூறுகிறது.
"கதா திஷ்விதி கர்க:"
ஸ்ரீ கர்காசாரியார் பகவானின் திருவிளையாடல் கதைகளில் பிரியமுள்ளவர்களே இறைவனிடம் உண்மை பக்தி செலுத்துபவர்கள் என்று கூறுகிறார்.
          பகவான் நிகழ்த்திய திருவிளையாடல் புராண கதைகள்,பகவானின் கல்யாண குணங்கள் ஆகியவற்றில் பிரியம் வைப்பார்கள்.திரு நாமங்களை பஜனை செய்வார்கள்.பாராயணம் செய்யும் இடத்திருக்கு சென்று கதை கேட்பார்கள்.
          உலகியல் விசயங்களில் உழன்று கொண்டிருப்பவர்களுக்கு பகவானின் கதைகளை கேட்டால் அதில் என்ன லாபம் வரப்போகிறது?என்று கேட்பார்கள்.அவர்கள் பணம்,பொருள் விசயத்தில் மட்டும் கவனம் செலுத்துவார்கள்.உண்மையான பக்தர்கள் பணத்தாசையை விட்டிருப்பார்கள்.
          உயிர் வாழ தேவையான பொருட் செல்வதை பகவானிடம் அர்ப்பணம் செய்துவிட்டு தமக்காக உபயோகிக்க மாட்டார்கள்.
பாகவத புராணம் கூறுகிறது:
          தவம்,வேத பாராயணம்,யாகம்,மந்திரம்,ஞானம் ,தானம் இவை அனைத்தும் பகவானின் திருநாமங்களையும் அவரது குணங்களையும் பக்தி கொண்டு பாடினால் தான் முழு பலன்களை தருகின்றன.
         " ஆத்ம ரத்ய விரோ தேனேதி சாண்டில்ய :"
தன்னுள் இருக்கும் சாத்தாத்மாவை உணர்வதும் அதற்க்கு சாதகமான விசயங்களில் அன்பு செலுத்துவதும் தான் உண்மையான பக்தி என்று சாண்டில்ய மகரிஷி கூறுகிறார்.
          சங்கராச்சாரியார் கூறுகிறார்:
          சகல உயிர்களுக்கும் இறைவன் ஆத்மாவாக வீற்று இருக்கிறார்.அந்த சர்வாத்மா மீது அன்பு செலுத்துவது தான் பக்தி.அந்த பக்தி குடி கொண்டு விட்டால் முக்தி நிச்சயம் கிடைக்கும்.
         " நாரதஸ்து ததர்பிதாகிலாசாரிதா தத்விஸ்மரணே பரமவ்யாகுலதேதி "
          நாரதர் தன் கருத்தை கூறுகிறார் :
          பிறவியெடுத்த தேகத்தால் செய்யப்படும் செயல் அனைத்தும் அவனுக்காகவே இருக்கும். அவனுக்கே அர்ப்பணம் செய்யப்பட்டிருக்கும்.தன் காதல் நாயகன் போல இருக்கும் பகவானை நினையாத நொடி வீனனதே என்று வருந்துவதே உண்மையான பக்தி.பகவானை பூஜை செய்வது,அவர் குணங்களை பாடுவது,சர்வாத்மாவாக இருக்கும் பகவானிடம் அன்பு செலுத்துவது எல்லாமே பக்தியின் லக்ஷணங்கள் என்று அனைவரும் ஒப்புக்கொண்ட விஷயம்.ஆச்சாரியார்களின் கருத்தை மேலும் வலுப்படுத்தும் விதமாக நாரதர் கூறுகிறார்.
          உடல் ,ஆத்மா,பொருள் எல்லாம் அவனுக்கே அர்ப்பணம் செய்துவிட்டு அவனை நினைத்துகொண்டு கர்மங்கள் செய்யவேண்டும்.எந்த சந்தர்பத்திலும் மனம் அவனை விட்டு நீங்காதிருக்க வேண்டும்.
ஆழ்வார் செய்த பக்தி மிகவும் உயர்ந்தது.
          ஆழ்வார் தம்மை ஒரு ஸ்திரியாக பாவித்து பகவானாகிய நாயகனை பிரிந்த தாபத்தை பல பாசுரங்களாக பாடியிருக்கிறார்.பகவானிடம் கொண்ட பாகவத பிரேமை வேகத்தை பாடும் இப்பாட்டுக்கள் காதலி தன் நாயகனை சேர ஆசை பட்டு சொல்லிய பிரிவு ஆற்றாமைச்சொற்களை  போலிருக்கும்.
இறைவன் கேட்கதக்கவன்,நினைக்கதக்கவன்,தியானம் செய்ய தக்கவன் ,பார்க்கதக்கவன் என்பது ஸ்ருதியின் வாக்கு.(தொடரும்)

No comments:

Post a Comment