Tuesday 22 November 2011

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 11

கோபிகா பெண்கள் கூறுகிறார்கள்:
          கண்ணா உன்னை நினைத்தவுடன் எல்லாம் மறந்து விடுகிறோம்.வீட்டு வேலைகளில் கவனம் செலுத்த முடியவில்லை.கால்கள் நீ இருக்குமிடம் நோக்கி தாமாகவே நடக்கின்றன.
"தஸ்மின்னனன் யாதத்விரோதி ஷூ தாஸி னதா"
வேறு இடத்தில வைக்கபடாத பிரேமை பக்தி செய்யும் பக்தன் எதை செய்தாலும் பகவானுக்கே செய்வான்.மற்ற விசயங்களில் கவனம் செலுத்த மாட்டன்.உலகில் மேன்மையுடன் வாழ எத்தனையோ வழிமுறைகள் இருந்தும் அவற்றில் அவனுக்கு ஆர்வம் ஏற்படாது.
" அன்யாச் ரயாணாம் த்யாகோ அனன்யதா" 
தன் நாயகன் சம்பந்தபடாததை எல்லாம் துறந்து விடுவதே அனன்யதா எனப்படுகிறது.
            எள் கல்  தந்த எந்தாய் உன்னை எங்கனம் விடுகிறேன் என்று பாடுகிறார் ஆல்வார்.
          எள் கல் :உலகபோருள்கள் மேல் உள்ள ஆசையை நீக்கும் திறமை மற்ற பொருள்களை இகழ்ந்து தள்ளும் சக்தியை தந்தாய்.கோபியர்கள் எதிலும் எங்கும் கண்ணனையே கண்டார்கள்.
          சிவபெருமான் மேல் பக்தி கொண்ட பார்வதி தேவியாரின் மனதை சோதிப்பதற்காக சிவனை நோக்கி தவம் செய்வதை நிறுத்தி விடுமாறு சப்தரிஷிகள் கூறுகிறார்கள்.சிவன் ஒரு பித்தன் என்று பல வகையில் குற்ற பத்திரிகை வாசிக்கிறார்கள். ஆனால் பரமன் மீது மாறாத பக்தி கொண்ட பார்வதி மிகவும் உறுதியுடன் இருக்கிறார்.நீரை துறந்த மீன்கள் கணப்பொழுதும் உயிர்வாழ்வதில்லை.அது போல அனன்ய பக்தி கொண்டவர்கள் கணப்பொழுதும் ஆண்டவன் நினைவை விட்டு நீங்கி உயிர் வாழ மாட்டார்கள்.
          சாதக பட்சி மழைநீர் மட்டும் அருந்தும். மதுசூதனா உன் அருளை நான் பெறுவதற்கு தடையாக நிற்கும் சத்ருக்கள் போன்ற தடைகளை எல்லாம் அழித்து விட்டவனே என்று ஆல்வார் பாடுகிறார்.
          வள்ளலே மதுசூதனா ,என் மரகதமலையே உனை நினைந்து வெள்ளமே புரை நின் புகழ் குடைந்து ஆடிபாடி களித்து உகந்து உகந்து உள்ள நோய்களை எல்லாம் துரந்து உயந்து போந்திருந்தே (தொடரும் )



No comments:

Post a Comment