Monday 21 November 2011

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 10

"நிரோதஸ்து லோகவேதவ்யாபாரன் யாஸ:"
பிரேமை பக்திக்கு அடிமையானவர்கள் செய்ய வேண்டிய தன் கடமைகளை துறந்து விடுவார்கள்.சிவபெருமானின் திருதொண்டரான குங் குலியகலயனாரை  
இதற்க்கு உதாரனமாக கூறலாம்.சிவபெருமானுக்கு குங்குலிய தூபமிடும் திருத்தொண்டை தவறாமல் நடத்திக்கொண்டு வருகையில் அவருடைய வறுமை மேலும் மேலும் அதிகரித்தது.அவர் தன் குடும்பத்தையும் பிள்ளைகளையும் கவனியாமல் தன் நிலங்களையும் சொத்துக்களையும் விற்று குங்குலியம் வாங்கி சிவபெருமானுக்கு தூபமிட்டு வனங்கினார். மனைவியும் மக்களும் உற்றாரும் உறவினரும் முழுப்பட்டினி கிடக்க நேரிட்டது.அவரது அன்பு மனைவி மனம் நொந்து ஒருநாள் தன் பொன் தாலியை கழற்றி அவர் கையில் கொடுத்து அதை விற்று நெல் வாங்கிவர சொன்னார்.தாலியை எடுத்துக்கொண்டு கலயனார் நெல் வாங்குவதற்காக கடைதெரு வீதிவழியாக சென்றார்.
          அப்போது வணிகன் ஒருவன் குங்குலிய பொதி ஒன்றை சுமந்து கொண்டு அவருக்கு எதிரே வந்தான்.அதை பார்த்த கலயனாரின் முகம் மலர்ந்தது.செஞ்சடைபெருமான் பூசைக்கேற்ற நறுமணம் பொருந்திய குங்குலியம் இது என்றால் நான் பெரும் பேற்றை இன்றே பெற்றேன்.இதை வாங்கி செல்வதை விட நல்ல பேரு வேறு உள்ளதோ?என்று பொங்கி எழும் விருப்பம் மிக கொண்டு தன் கையில் இருந்த பொன் தாலியை வணிகனிடம் கொடுத்தார்.வணிகன் குங்குலிய பொதியை அவரிடம் கொடுத்தான்.கலயனார் மனமெல்லாம் நிறைந்த மகிழ்ச்சி கொண்டு ஒரு கணமும் தாமதிக்காமல் விரைந்து சென்று வீரட்டான திரு கோவிலை அடைந்தார்.அங்கு எம்பெருமானுடைய வழிபாட்டிற்கு வைத்திருக்கும் பண்டக சாலையிலேயே எல்லா குங்குலியத்தையும் சேமித்து வைத்தார்.
         அதன் பிறகு தம் மனைவி மக்களின் பசி,வறுமை, துன்பம் எல்லாவற்றையும் மறந்து சிவதொண்டில் பேரன்பு பொங்க சிவபெருமானின் திருவடிகளை போற்றி தொழுது கொண்டு குங்குலிய பணி புரிந்து கொண்டு அங்கேயே இருந்தார்.
          கருணைக்கடலான சிவபெருமான் திருவருளை முன்னிட்டு அவர் மனைவி மக்கள் வாழ்ந்த வீட்டில் திடீரென ஒரே இரவில் குபேர செல்வம் நிறைந்து விட்டது.தேவர்களை வழிபடுதலும், பித்ருக்களை வழிபடுதலும்,  நித்ய நைமித்திய கர்மங்கள் எல்லாவற்றையும் அவன் மறந்து விடுகிறான்.
                                                                                    (தொடரும்)  

No comments:

Post a Comment