Thursday 17 November 2011

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 7

 "யல்லப்த்வா புமான் ஸித்தோ பவதி 
          அம்ருதோ பவதி த்ருப்தோ   பவதி"
பகவானின் பக்தி பிரேமாமிர்த்ததை ஒரு முறை பருகி விட்டால்  அவன் பெரும் பேரு பெற்றுவிட்டான்,நிறைவடைந்துவிட்டான் என்று அறிய வேண்டும்.இனிமேல் அவன் எதுவும் சிரமப்பட்டு அடையவேண்டிய தேவையில்லை.அவன் சித்தன் ஆகிவிடுவான் .உபநிஷதங்கள் கூறுவது போல ஆத்மாவை உணர்ந்துகொண்டவன் அமுததன்மை அடைவான்.பிறவியில் வரும் துன்பங்களை வென்று விடுவான்.ஏனெனில் இறைவன் மீது மட்டும் அவனுக்கு பற்று உண்டாகிறது.அணிமா முதலிய சித்திகளை துச்சமாக நினைப்பான். சித்திகளே இவனை தேடி வருமாம். 
           பாகவத புராணம் கூறுகிறது:
               என் மீது சித்தத்தில் பிரேமை பக்தி கொண்டவர்கள் தன ஆத்மாவை என்னிடமே அர்ப்பணம் செய்தவர்கள் பிரம்ம பதவியையும் இந்திர லோக பதவியையும் விரும்ப மாட்டார்கள்.பூலோகத்தையும் ஆளும் பேரரசு பதவியும் அவர்களுக்கு துச்சமாக இருக்கும்.
          அறுபது மூன்று நாயன்மார்களும் தேவாரம் திருவாசகம் பாடியவர்களும் புளகாங்கிதம் அடைந்து கண்களில் கண்ணீர் பெருக ஆண்டவை நினைத்து எல்லாவற்றையும் மறந்தனர்.சாயுஜ்யம் முதலிய நான்கு வித முக்திகளும் சித்திகளும் அவர்கள் முன் கைகட்டி நிற்கும்.
          இதில் தான் நிரந்தர சுகம் கிடைக்கும் என்று மனிதன் வேறு வேறு ஆசைகளுக்கு அடிமையானதால் தான் வினைபயன்கள் தொடர்ந்து பல பிறவிகள் எடுக்க அவசியமாகிறது.ஆனால் பரமனான இறைவனில் தன்னிறைவு கண்டு விட்டால் துன்பமில்லை பயமில்லை.பிறவியும் இல்லை .மரணத்தை நினைத்து அஞ்சவும் வேண்டாம்.
        "  யத் ப்ராப்ய ந கிஞ்சித்வாஞ்சதி ந சோசதி ந த்வேஷ்டி ந ரமதே  நோத்ஸாஹி பவதி"
          மனதில் பரமனிடம் அன்பு பெருக்கு ஏற்பட்டு பக்தி உருவாகிவிட்டால், மற்ற சுகங்கலயடைய வேறுபக்கம் திரும்பமாட்டான். ஜகத்தினில் பற்று,இஸ்வர்யம் ,சௌந்தர்யம், பலம்,புகழ்,ஞானம்,வைராக்யம்,ஆகியவை சுக வாழ்விற்கும் தியாகத்திற்கும் தேவைபடுபவை என்று அனைவரும் விரும்பி அவற்றை நோக்கி ஓடுகிறார்கள்.ஆனால் உலகில் நிரம்பி வழியும் அனைத்து சந்தோசங்களும் ஆண்டவனின் பிரேமை பக்தி கடலின் சிறு துளிக்கும் ஈடாகதவை. பகவான் காந்தம் போல தன்னில் இழுத்து ஆட்கொண்டுவிட்டால் அதை சுகதேவ முனிவரை போல கூறுவார்கள்.
          மோட்சத்திற்கு ஈசனான பகவானின் பக்திக்கு வசமாகிவிட்டால் அவன் அமிர்த கடலில் மூழ்கி விடுவான். அதன் பின் குட்டையில் தேங்கிய நீரை நோக்கி போக மாட்டான்.பக்தியை பற்றிகொள்பவனுக்கு ஏன் மற்ற விஷயங்கள் பிடிக்காமல் போகின்றன.?மற்ற விசயங்களில் சோகங்கள் மறைந்து உள்ளன.சுகங்கள் எல்லாம் அவனுக்கு துன்பமாக தெரிகின்றன.சுகமும் சந்தோசமும் ஒரு எல்லைக்கு உட்பட்டு இருக்கின்றன.ஆதலால் சுக சந்தோசங்கள் அவனிடம் வந்தாலும் அவனை விட்டு பிரிந்தாலும் அவனுக்கு கவலையில்லை.(தொடரும்)

No comments:

Post a Comment