Friday 18 November 2011

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 8

          மோட்ச பதவியை கூட விரும்பாதவன் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் உன் மீது பிரேமை பெருகி கொண்டே இருக்கவேண்டும்.உன்னை மறவா வரம் வேண்டும் என்றே கேட்பான். ஆதலால் அவன் எவரிடமும் துவேஷம் கொள்வதில்லை.இறைவனை நினைத்து நினைத்து ஒவ்வொரு கணமும் ஆனந்தத்தை அனுபவிப்பான்.
          கோபிகா பெண்கள் கண்ணனை உள்ளங்கவர்ந்த கள்வன் என்று கூறினார்கள்.மற்றொரு பொருளோ மற்றொருவனோ எப்படி இறைவனுக்கு அடிமையான மனதை சொந்தம் கொண்டாட முடியும்?அவர்கள் மனதில் எவராலும் நுழைய முடியாது.
          ஸ்ரீஹரி உள்ளமெங்கும் நிறைந்து விட்டபின் மனம் வேறு சுகத்தை தேடி போகுமோ?
          பகவத்கீதை கூறுகிறது:-எதை கண்டும் ஆனந்தபடதவன்,துவேஷம் கொள்ளாதவன்,வருந்ததவன்,நிச்சயம் என் வலையில் விழுந்து இருப்பான்.
         " யஜ்க்ஞாத்வா மத்தோ பவதி ஸ்தப்தோ பவதி 
அத்மாராமோ பவதி"    
          பிரேமை பக்தி நிலை எட்டியவன் போதை வஸ்து உண்டவன் போல பித்தன் போல இருப்பான்.தியானத்தின் பரவச நிலை அமைந்து இருப்பான்.தன்னில் இறையருளை உணர்ந்து ஆனந்தத்தில் திளைப்பன்.
          பக்தியின் உச்சகட்ட நிலை வந்ததும் ஆண்டாள் போல பைத்தியமாகிவிடுவான்.ஸ்ரீ ஹரியின் திருவிளையாடல் கதையை மட்டும் கேட்பான்.வெட்கத்தை விட்டு அவன் திருநாமங்களை உரக்க பாடுவான்.
"பக்தி கொண்ட பிரகலாதன் மற்ற நண்பர்களுடன் ஒட்டாமல் தனித்து அமர்ந்திருந்தான்.இறைவனை நினைத்து பரவச நிலையில் திடீரென
சிரிப்பானாம்.கண்களில் நீர் பெருக அவரை நினைத்து பாடி ஆடி மகிழ்வான்."
என்று ஸ்ரீ பாகவதபுராணம் கூறுகிறது.இறைவனை நினைத்து பாடி தியானநிலை அடைந்து சித்தமும் சரீர உணர்வும் இல்லாமல் ஆத்மாவாக இருக்கும் இறைவனோடு ஒன்றி போய்ஆனந்தத்தில் திளைத்தார்.இது பிரேமாத்துவைத நிலையாகும்.
                                                                                             (தொடரும்)

No comments:

Post a Comment