Tuesday 29 November 2011

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 17




தவசிகளுக்கு எல்லாம் உன் திருவடிகளை தந்தாய். லக்ஷ்மி தேவிக்கும் உன் திருவடிகளை தந்தாய்.என்று உன் திருவடிகளை தொட்டு வணங்கினோமோ அன்றே எம்மை ஆட்கொண்டாய்.மற்ற விசயங்களை எம்மால் சிந்திக்க முடியவில்லை.லக்ஷ்மி தேவி உன் திருமார்பில் இடம் பெற்று வீற்றிருந்தாலும் துளசியும் மற்ற பக்தர்களும் பெரும் பாக்யமுடன் கொண்டாடும் நிந்தன் பாட தூசி யை நமக்கு கிடைக்காதா என்று விரும்புகிறார்கள்.நாங்கள் அதை விரும்பினால் என்ன தவறு?உன் கருணை கடாட்சம் நம் மீது விழாதா என்று தேவர்களும் ஏங்குகிறார்கள்.
          நீ நிச்சயம் இடையர் குலத்தில் பிறந்த நந்தகோபன் மகான் அல்ல.நீ சகல உயிர்களின் தேகத்தில் உறையும் அந்தராத்மாவாக, சர்வசாட்சியாக இருப்பவன்.நீ பிரம்ம தேவர் கேட்டுக்கொண்டதால் மாந்தர்களை கடைதேற்ற வந்த தெய்வம் நீ.
        இவ்வாறு கோபிகை பெண்களுக்கு இறைவன் மீது கொண்ட பக்தி மிகுதியால் ஞான திருஷ்டியும் வந்து விடுகிறது.
   "தத் விஹீனம் ஜாராணாமிவ" 
         உலகியலில் ஒரு பெண்ணோ ஆணோ ஒருவர் மீது ஒருவர் அன்பு காட்டினால் அதன் பின்னால் பல விசயங்கள் ஒளிந்து இருக்கும்.எந்த அன்பும் பலனை எதிர்பாராமல் உருவாகாது.பெண் ஒரு ஆணை காதலித்தால் அவன் தன்னை ஆதரிக்க வேண்டும் .ஆசைகளை நிறைவேற்றி வைக்க வேண்டும்.வாழ்நாள் எல்லாம் தமக்கு துணையாக பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று பல பலன்களை எதிர்பார்ப்பாள். அது போல ஆணும் அவனுக்கு தகுந்த பல லாபங்களை எதிர்பார்ப்பான்.இது போல உலகியல் காதலுக்கு முற்றிலும் எதிரானது இறைவன் மீது செலுத்தப்படும் பக்தி அல்லது பிரியம்.அதையே கோபிகை பெண்கள் செய்தார்கள்.ஸ்ரீ கிருஷ்ணனால் அவர்களுக்கு ஆகவேண்டியது எதுவும் இல்லை.அந்த தூய பிரேமை பக்திக்கு உலகியல் காதல் ஈடாகாது.அவர்களுக்கு ஸ்ரீ கிருஷ்ணனை நினைத்தாலே பரவச நிலை ஏற்பட்டது.அந்த பரவச நிலை ஏற்பட்டது.அந்த பரவசநிலை யோகிகளுக்கு மட்டும் கிடைக்க கூடியது.கோபிகை பெண்கள் மோட்சத்தையும் விரும்பவில்லை.இந்த கிருஷ்ண பக்தி தான் சுக தேவ முனிவர் பரீட்சித் மன்னன் முக்தியடைய,நற்கதியடைய பாகவத புராண கதை மூலமாக சொன்னார்.
          "நாஸ்த்யேவ தஸ்மின்ஸ்தத்ஸுகஸுகித்வம் "
உலகில் மக்கள் தன் சொந்த லாபத்தை வைத்து ஒருவர் மீது ஒருவர் அன்பு கொள்வார்கள்.மற்றவர் க்ஷேம லாபத்தை பற்றி நினைக்க மாட்டார்கள்.கண்ணப்ப நாயனார் போல கோபிகை பெண்கள் கிருஷ்ணனுக்காக அவனை மகிழ்விக்க எதையும் இழக்க தயாராக இருந்தார்கள்.அதில் தான் சந்தோசம் அடைந்தார்கள்.அவர்கள் மனம்,தேகம்,அறிவு,செல்வம்,உயிர் அழகு எல்லாம் தன் அன்பன் கிருஷ்ணனின் பூஜை பொருள்களாக கருதினார்கள்.பாகவத புராணத்தில் கோபியர்க்கும் ஸ்ரீ கிருஷ்ணனுக்கும் இடையே நடந்த சம்பாஷனை அனைவரும் அறியக்கூடிய ஓர் உண்மையை வெளிப்படுத்துகிறது.
கோபிகை பெண்கள் கூறுகிறார்கள்:" கிருஷ்ணா எங்கள் கேள்விகளுக்கு முதலில் நீ பதில் கூறவேண்டும்.உலகில் சில பேர் அன்பு செலுத்தினால் தான் பதிலுக்கு அன்பு செலுத்துகிறார்கள்.சிலர் அன்பு செலுத்தாவிட்டாலும் அவர்களை நேசிப்பவர்கள் இருக்கிறார்கள்.சிலர் இருவரில் எவருமே அன்பை பரிமாறிக் கொள்வதில்லை. இந்த மூன்று ரகமானவர்கள் யாரை உனக்கு பிடிக்கும்? யாருடைய அன்பை உயர்வாக எண்ணுகிறாய்? (தொடரும்)
 

"

No comments:

Post a Comment