Monday 14 November 2011

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 3

உலகிலேயே மிகபெரிய காவியமாக கருதப்படும் மகாபாரதத்தை இயற்றிய பின்னும் வியாச முனிவர் தன்னிறைவு அடையவில்லை. அவர் அமைதியின்றி தவித்தார். எதோ விட்டுப்போனது போல உணர்ந்தார். ஒரு வேதத்தை நான்கு வேதங்களாக பிரித்தார்.18 புராணங்களையும் எழுதினார். ஆனாலும் அவர் மனம் நிறைவடையவில்லை.
          ஒரு சமயம் சரஸ்வதி நதிகரையில் அவர் கவலையுடன் அமர்ந்து இருந்தபோது நாரதர் அவரை காண வந்தார். வியாசமுனிவர் அவரை உபசரித்த பின் தன மனக்குறையை கூறினார்.மக்கள் அனைவரும் மோட்சம் அடைய நல்வழி காட்டும்புராணங்களை எழுதினேன். மனிதருக்கு உண்டான கடமைகளையும் மனித தர்மத்தையும் கூறி இறுதி நிலையான மோட்சம் அடைய ஞானத்தை பற்றியும் மகாபாரதத்தில் கூறியிருக்கிறேன். ஆயினும் ஒரு குறை என் மனதில் நெருடுவதை உணருகிறேன். இதற்கு நாரதர் கூறினார் . மகாமுனிவரே தாங்கள் அறநூல்களை எழுதி மகத்தான சாதனை படைத்து இருக்கிறீர்கள். இதில் எந்த சந்தேகமும் இல்லை. அனால் இறைவன் பால்செலுத்தவேண்டிய அன்பு என்ற பக்தியோகத்தை விசேசமாக கூற மறந்து விட்டிர்கள். பக்தியோகத்தை பிரதானமாக வைத்து ஒரு கிரந்தத்தை எழுதுங்கள்.அதில் ஸ்ரீஹரியின் லீலை அடங்கி யிருக்க வேண்டும். அதை படித்து மக்கள் உய்வடைவார்கள். மனிதர்களின் கடமை, தவம்,கர்மபலன், உயர்ந்த சிந்தனை, லட்சியம், எல்லாம் தன் ஆத்மாவை மேம்படுதுவதர்கவே  அடிபடையாக அமைந்து இருக்க வேண்டும்.அந்த ஆத்மாவின் உயர்வு பக்தி பக்தி யோகத்தால் மிக சுலபமாக கிடைக்கும். 
          உலகியலில் மற்ற நூல்களில் அறம், பொருள்,இன்பம்,வீடுபேறு,எல்லாம் கூறப்பட்டுதான் இருக்கின்றன. அதில் அதிக பெருமை இருக்க வேண்டுமானால் ஆண்டவனின் திருபுகழ் இருக்க வேண்டும்.
          அகில ஜகத்தையும் தூய்மைபடுத்தும் ஸ்ரீஹரியின் மகிமையும் ,கீர்த்தியும்
எந்த கவிதையில் அல்லது நூலில் எழுதபடவில்லையோ அது மிக இனிமையாக இருந்தும் என்ன பயன்?பாடல் வரிசைகள் சரியாக பொருந்தி இலக்கண சுத்தத்துடன் உவமை முதலிய அலங்காரத்துடன் இருந்தும் என்ன பயன்?எச்சில் இலையை உண்ணும் காக்கைகளுக்கு சமமாக விஷய சுகங்களை பெரியதாக மதிக்கும் மனிதர்களே அதை புகழ்வார்கள்.அதற்கு மாறாக இலக்கண பிழையுடன் பாடல் நியதியை விட்டு அலங்கார சொற்கள் போடாமல் புனையப்பட்ட கவிதையில் இறைவன் புகழ் பாடப்பட்டு இருந்தால் அது பாவங்களை அழிக்ககூடியது. மாந்தர்களை தூய்மை படுத்தும்.தூய மானசஏரியில் நீந்தும் அன்னபறவைகள் போலிருக்கும், ஆன்றோர்கள் அதை ஏற்றுகொள்வார்கள். அதை பாடி சாது மகாத்மாக்கள் மகிழ்ந்து போவர்கள்.
                                                                                                              (தொடரும் )

No comments:

Post a Comment