Sunday 13 November 2011

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 2

 விஞ்ஞான கண்டுபிடிப்புகளால் தகவல் தொடர்பிலும் வாகன வசதிகளும், வாழும் வீட்டு வசதிகளும் செய்துகொண்டு கம்ப்யூட்டர் முதலிய அரிய கண்டுபிடிப்புகளையும் அற்புதங்களையும் செய்துவிட்ட மனிதர்கள் பெருமை பீற்றிகொள்வார்கள். முன்னேற்றத்தின் சிகரத்தை தொட்டுவிட்டோம் என்பார்கள்.அவற்றின் மறுபக்கம் எப்படி இருக்கிறது. மனிதன் இன்னமும் ஆசைகளையும் பகைமையும் பொறாமையும் தூக்கி எறியவில்லை. இவற்றின் விளைவால் எப்படிப்பட்ட தீமைகள் உருவாகின்றன என்பதை சொல்லவே வேண்டாம். உலகத்தை வென்றுவிட்ட கர்வம் படைத்த மனிதன் கோபம் பகை வன்செயல் ஆகிய தீமைகளுக்கு அடிமையாகி கிடக்கிறான்.
          பாகவத புராணம் பக்தியில்லாத மனிதனை விலங்குடன் ஒப்பிட்டு கூறுகிறது. - பாலைவனத்து முட்செடியை ஒட்டகம் வாயில் குத்தி ரத்தம் வந்தாலும் மிகபிரியமாக தின்கிறது. அதுபோல மனிதன் துன்பத்தில் முடியும் விஷய சுகங்களை மிக இன்பமாக ஏற்று அனுபவிக்கிறான். உலகில் நாய்போல அவமானங்களை தாங்கிக்கொண்டு வாழவே விரும்புகிறான். கழுதை போல குடும்ப கஷ்டங்களை சுமக்கிறான். அதில் வைராக்யமடைந்து இறைவன் பால் தன மனதை செலுத்த மறுக்கிறான். இறைவன் திருபுகழை படாத நாவு தவளை நாவு. அது வீணாக சத்தத்தை கிளப்பிக்கொண்டு இருக்கிறது. இறைவன் திருபுகழை கேட்காத காது பாம்பு புற்றுக்கு சமம் . ஏனெனில் பாம்பு போல தீய விசயங்களை மட்டும் கிரகித்து கொண்டுஇருக்கிறது. இறைவனை வணங்காத தலையும் ஒரு சுமை தான். இறைவன் திரு புகழை கேட்டு உருகாத இதயம் அது கல்லால் ஆனது. கோவிலை நோக்கி போகாத கால்கள் எதற்கு? பக்தர்களை தரிசிக்காத அவன் திருநாமங்கள் ஜபித்து கண்ணீர் மல்காத கண்கள் இருந்தும் இல்லாததற்கு சமமாகின்றன. 
          மேலும் பாகவதம் கூறுகிறது:
உலகில் தனசெல்வங்களை இழக்கும் குடும்பம், நண்பர்கள், உறவினர்கள்,ஆகியோரின் பற்று, பாசம்,பகை,சோகம், ஆசை, தோல்வி,நான்,எனது என்ற பற்று,இவை துக்கத்திற்கு மூல காரணங்கள். 
இவையெல்லாம் எதுவரை தொடர்கின்றன? ஆண்டவனே உன் திருவடிகளை பற்றினேன் அபயம் தர வேண்டும் என்னை உன்னுடயவனாக்கி  கொள் என்று கூறும் வரை தான்.
          தேவரிஷி நாரதர் பெரும் பேரு பெற்றவர் சாரங்கபாணி நாராயனரின் புகழை தம்பூராவை மீட்டிக்கொண்டு , பாடிக்கொண்டு அல்லல் படும் உலக மக்களை ஆனந்தகடலில் அமிழ்துகிறார். 
          சில மகான்கள் கடவுள் அம்சமாக அவதரிக்கிறார்கள். தனக்கென்று அவர்களுக்கு சாதிக்க எதுவும் இருக்காது. மக்களை கடைதேற்றவே அவர்கள் வருகிறார்கள். அவர்களுக்கு துணையாகவும் பலர் ஜென்மமெடுக்கிரர்கள். அவதாரங்களின் திருவிளையாடல்களில் பங்குகொள்கிறார்கள். தேவரிஷி நாரதர் முக்திநிலையை விரும்பாமல் மக்களுக்காகவே வாழ்ந்தார். மக்களை இறைவனடி சேர்பதற்காகவே வாழ்ந்தார். எல்லா யுகங்களிலும் எல்லா புராண சாஸ்திரங்களிலும் எல்லா லோகங்களிலும் நாரதர் பெரும் பங்கு வகிக்கிறார். தன் யோகபலத்தல் சித்தியால் எங்கும் தடையின்றி செல்கிறார். அனைவரையும் நல்வழிப்ப்டுதுகிறார். ராமாயணத்தை இயற்றிய வால்மீகி முனிவர், பிரகலாதன்,சுகதேவர்,துருவன்,இவர்கள் அனைவரும் இவரிடம் மந்த்ரோபதேசம் பெற்று சித்தி அடைந்தவர்கள். 
               

No comments:

Post a Comment