Saturday 21 January 2012

ஸ்ரீ பாகவத் கதைகள்

பக்தியை பிரதானமாக கொண்ட பாகவத புராணத்தில் பக்தியை வளர்க்கும் பல கதைகள் உள்ளன.அவை வாழ்க்கை கல்வியை போதித்து மனிதனுள் நற்குணங்களை பெருக்ககூடியவை.தன்னை மேம்படுத்திக்கொள்ள இந்த கதைகளை அவசியம் படிக்க வேண்டும்.மேலும் இந்த கதைகளை படிக்கும் போது பகவான் மீது பக்தி ஏற்பட்டு உலக துன்பங்களில் இருந்து விடுபட்டு மனஓய்வு கிடைக்கும்.பாகவத புராணம் என்பது அது ரிஷியின் வாக்கு.பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழச்சிகளை புராணத்தில் கதைகளாக கூறப்பட்டுள்ளன.ரிஷி வாக்கு சத்திய வாக்கு என்பதால் எக்காலத்திலும் பொருந்தும் வகையில் எழுதப்பட்டுள்ளன.ஆறு அறிவு இல்லாத எறும்புக்கு அதன் உலகம் மட்டும் தான் தெரியும்.மற்ற விஷயங்கள் அதன் அறிவுக்கு எட்டாதவை.ஆனால் அறிவுக்கு எட்டாத விசயங்களை பொய் என்று கருத முடியாது.அது போல சிறிய அறிவு படைத்த மனிதன் அறிவுக்கு எட்டாத விஷயங்கள்,எல்லை கடந்த விஷயங்கள் எவ்வளவோ உள்ளன.விஞ்ஞானத்திற்கும் எட்டாத விஷயங்கள் பல உள்ளன.ஆதலால் இந்த கதைகளை முழுமையாக நம்பி கதைகளில் காட்டி உள்ள வாழ்க்கை கல்வியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
                                                             சுலோச்சனா பத்மநாபன்.

No comments:

Post a Comment