Sunday 19 February 2012

தக்ஷன் செய்த யாகம் தொடர்ச்சி 2

சசி தேவி இவ்வாறு தக்ஷன் செய்த யாக சாலை சென்றடைந்தாள். மந்திரோட்சாடனம் செய்யும் பிராமணர்களின் வேத கோஷங்கள் வானை பிளப்பது போல கேட்டன.அங்கு சதி தேவியை தாய் வழி சொந்தங்களும் சகோதரிகளும் அன்புடன் அரவனைத்துக்கொண்டனர்.தக்ஷனுக்கு பயந்து வேறு எவரும் சதி தேவியை வரவேற்கவில்லை.தாயின் சகோதரிகளும் ,தாயும்,உடன் பிறந்த சகோதரிகளும் பொன் இருக்கையில் அமரச்செய்து குசலம் விசாரித்து அன்புடன் பேசுவதை கேட்காமல் கோபம் மேலிட்டு அழுதாள். .
                                 



 யாக மண்டபம் சென்று அங்கு ருத்ரபகவானுக்கு அவிர் பாகம் அளிக்காததை பார்த்தாள். தந்தையோ இவளை கண்டும் காணாமல் இருந்தார்.
          சசி தேவி தந்தை தக்ஷனை நோக்கி கோபமாக பேசினாள்.-- சர்வ சக்திமானாகிய சிவபெருமானுக்கு சமமானவரே இல்லாதிருக்கும் போது அவரை விட பெரியவர் எவ்வுலகிலும் இல்லை.அவர் உயிர்களில் பரமாத்மாவாக இருக்கிறார்.அவருக்கு எவரும் பகைவரும் இல்லை ,பிரியமானவரும் இல்லை.அவ்வாறு இருந்தும் நாடி வந்த பக்தர்களுக்கு அன்பர்.அவரிடம் உங்களை தவிர யார் தான் விரோதம் கொள்வார்? தன்னுள் இருக்கும் இறைவனின் அருட்பெரும் ஜோதியை அறிந்து கொள்ளாதவர் தான் இந்த சடலம் என்று கூறப்படும் ஜட சரீரத்தை ஆத்மாவாக எண்ணுபவர்கள் பரம புருஷனை அல்லாது மகா புருஷனை நிந்திக்கிறார்கள்.அப்பெரியோனின் ஆற்றலே அவர்களை கூடிய விரைவில் வீழ்த்தி விடும்.
           சிவ என்ற இரண்டு அட்சரத்தை உச்சரித்த கணமே பாவங்கள் அழிந்து பட்டு போகும்.அந்த சங்கரர் மீது துவேசம் கொண்டு நீங்கள் நன்மையடைய மாட்டீர்கள்.அவர் திருவடிகளை தொழுத பக்தர்கள் வேண்டிய வரங்களை பெற்று பெரிய பதவிகளை அடைந்திருக்கிறார்கள்.சிவபெருமானை நீங்கள் அமங்கலமாக நினைக்கிறீர்கள்.ஜடை விரித்து பூத பேய்களுடன் சிதை சாம்பல் பூசி திரிவதாக கூறுகிறீர்களே.அவர் திருவடிகளில் இருந்து விழுந்த மலர்களையும் திரு நீற்றையும் பிரம்மா,விஷ்ணு முதலான தேவர்களும் தலையிலும் நெற்றியிலும் சூடி அவர் அருளை பெறுகின்றனர்.
           அன்று நீங்கள் சிவ நிந்தை செய்து கொண்டு இருந்தபோது எவரும் சபையை விட்டு வெளியேறவில்லை.பெரியோர்களை அல்லது இறைவனை அவதூறாக சபையில் பேசும்போது சக்தி இருந்தால் அவர்களை தண்டிக்க வேண்டும்.அந்த துஷ்டன் நாவை இழுத்து அறுத்து விட வேண்டும்.அது இயலாது போனால் சபையை விட்டு வெளியேற வேண்டும்.உங்களை சேர்ந்த பிராமணர்களை எதுவும் செய்ய வில்லை.இதற்க்கெல்லாம் தண்டனை கிடைக்கத்தான் போகிறது.அறியாமல் நஞ்சை உண்டு விட்டால் அதை வாந்தி எடுத்து விட்டால் தான் க்ஷேமமாக இருக்க முடியும்.அது போல நான் தாட்சாயணி உங்கள் மகள் என்று சொல்லிக்கொள்ள விரும்பவில்லை,
இந்த உயிரை மாய்த்துக்கொண்டு தந்தை என்ற உறவை அழித்துக்கொள்கிறேன் .என்று கூறிவிட்டு சதி தேவி தியானத்தில் அமர்ந்தாள். பத்மாசனத்தில் ஸ்திரமாக அமர்ந்து இமைகளை மூடி பிராணாயாமம் செய்தாள். பிராண அபான வாயுக்களை ஒன்றாக சேர்த்தாள். அதை நாபியில் நிலை நிறுத்தி உதான வாயுவை கிளப்பி அறிவுடன் சேர்த்து இதயத்திற்கு கொண்டு போனாள். இதயத்தில் இருந்த வாயுவை கழுத்து வழியாக புருவ மையத்தில் நிறுத்தினாள்.அதன் பின் அவள் வாயுவையும் அக்னியையும் சகல அங்கங்களில் தாரணை செய்தாள்.அதன் விளைவாக அவள் திருமேனியில் யோக அக்னி பற்றிக்கொண்டது.ஜகத்குரு சங்கர பகவானின் திருவடிகளை தியானம் செய்துகொண்டே எரிந்து போனாள்.தேவர்களும் ரிஷி முனிவர்களும்  சற்றும் எதிர்பாராத இந்த துக்க நிகழ்ச்சியை கண்டு ஹா ஹா என்று ஸ்தம்பித்து நின்றனர்.ஐயோ தக்ஷனால் அவமானப்பட்ட சதிதேவி இவ்வாறு உயிர் துறந்து விட்டாளே. மக்களை பெற்ற தக்ஷப்பிரஜாபதிக்கு இது தகுமா?தூயவளான சதிதேவி மரியாதைக்கு உரியவள்.தக்ஷன் தன் மகளை சாகப்போகும் முன் தடுத்திருக்க கூடாதா?இதெல்லாம் நல்லதற்கு இல்லை.இவ்வாறு கூறிக்கொண்டு இருக்கும் போதே சிவ கணங்கள் ஆத்திரம் பொறுக்காமல் ஆயுதங்கள் ஏவி அனைவரையும் தாக்க முற்ப்பட்டனர்.இதைக்கண்டு பிருகு முதலிய பிராமணர்கள் யக்ஞா விக்னங்களை அழிப்பதற்கு மந்திரோச்சாடனம் செய்து தக்ஷாக்னியில் ஆஹூதி இட்டனர்.அதன் விளைவாக யாகவிக்னங்களை,தீயசக்திகளை அழிப்பதற்கு யக்ஞா குண்டத்திலிருந்து ஆயிரக்கணக்கான ரிபு என்றழைக்கப்படும் தேவர்கள் தோன்றினர்.பிரம்ம தேஜசுடன் தேவர்கள் கொள்ளிக்கட்டையால் பிரமத பூத கணங்களை தாக்கி விரட்டி அடித்தனர்.
           சதிதேவி எரிந்து விட்டதையும் பூத கணங்கள் விரட்டியடிக்கப்பட்டத்தையும் அறிந்த மகாதேவர் ஆத்திரமடைந்து வெகுண்டெழுந்தார். உக்கிரமாக தோன்றியவர் தன் ஜடா முடியிலிருந்து ஒரு ஜடையை பிடுங்கினார்.அது மின்னல் போல எரியும் நெருப்பு போல பிரகாசித்துக்கொண்டு இருந்தது.வெறிச்சிரிப்பு சிரித்து அதை கீழே போட்டார்.அதிலிருந்து வானகத்தை தொடுமளவு பெரிய பயங்கர ஆகிருதி படைத்த ஒருவன் தோன்றினான்.மேகம் போல கருத்த நிறம் கொண்டு ஆயுதங்களுடன் ஆயிரம் கைகள் படைத்திருந்தான். சூரியனை போல மூன்று கண்கள் பிரகாசித்தன.அக்னி ஜுவாலைகள் ஜடாமுடி தரித்து மண்டை ஓடு மாலை அணிந்திருந்தான்.அவன் சிவபெருமானை நோக்கி கரங்கள் கூப்பி பகவானே நான் என்ன செய்ய வேண்டும், ஆணையிடுங்கள் என்றான்.சிவபெருமான் கூறினார்- "வீரபத்திரன் என்ற பெயர் கொண்டவன் நீ.என் ருத்திர அம்சத்தில் தோன்றியவன்.இப்போதே நீ சென்று தக்ஷனையும் அவனை சார்ந்தவர்களையும் யாகத்தையும் அழித்துவிட்டு வா.நீ என் பூத,பிரமத கணங்களின் தலைவனாக இருப்பாய் என்று ஆணையிட்டார்.வீரபத்திரன் சிவபெருமானை வலம் வந்து வணங்கி புறப்பட்டான்.சத்ருக்களின் தாக்குதலை முறியடிக்க சக்தி பெற்றிருப்பதாக உணர்ந்தான்.பயங்கர சிம்ம கர்ஜனை செய்துகொண்டு திரிசூலம் எடுத்து தக்ஷ யாகமண்டபத்தை நோக்கி விரைந்தான்.அவன் திரிசூலம் அகில உலகையும் சம்ஹாரம் செய்துவிடும் போல் தோன்றியது.பூத பிரமத கணங்கள் அவன் பின்னால ஓடினர்.வீரபத்திரன் கால் சலங்கை ஜல் ஜல் என பயங்கரமாக ஒலித்தது.
           யாகத்தில் அமர்ந்திருந்த ரித்விஜர்கள்,சதஸ்யர்களும் மற்ற பிராமணர்களும் வடதிசையில் இருள்கவிந்து புகைமூட்டம் போல வருவதை பார்த்து பயந்தனர்.இது என்ன புயல் போல தூசி எழும்புகிறது?கொள்ளையர்கள் வருகிறார்களா?அப்படி இருக்காது.ஏனெனில் குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்கும் அரசன் பிராசீன பர்ஹீ அரசாண்டு கொண்டிருக்கிறான் என்றார்கள்.தக்ஷனின் மனைவியும் மகள்களும் மற்ற பெண்களும் அஞ்சி நடுங்கி கூறினர். இது நிச்சயம் சதிதேவியை அனைவர் முன் அவமானப்படுத்திய தக்ஷன் செய்த கர்மவினைப்பயன் தான்.(தொடரும்)

No comments:

Post a Comment