Wednesday 9 January 2013

வாமன அவதாரம் தொடர்ச்சி 7

அப்போது அசுர ராட்சசாபதி பலி தைரியம் இழக்காமல் பகவானை நோக்கி பேசினார்.என்னை பாசக்கயிற்றால் கட்டினால் என்ன? எனக்கு ஒரு கவலையும் இல்லை.என்னிடம் ஒரு செல்லாத காசும் இல்லை.புனித கீர்த்தி பெற்றவரே தங்களை போன்ற குரு தெய்வங்களால் கொடுக்கும் தண்டனையை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறேன்.அப்படிபட்ட தண்டனையை மாதா,பிதா,அண்ணன்,தம்பி,நண்பர்கள் குற்றங்களை மன்னித்து விடுவார்கள்.  
          பகவானே தாங்கள் அசுரர்களுக்கு மறைமுகமாக குருவாக இருந்து அருள் செய்கிறீர்கள்.ஏனெனில் அசுரர்கள் தனம்,உயர்குடி,பலம் இவற்றால் செருக்கு அடைகிறார்கள்.அவர்களை ஆன்மீக வழியில் செலுத்துவதற்காக ஐசுவர்யங்களையும்,உலகவாழ்க்கையின் மேன்மைகளையும் (பணம்,பெயர்,புகழ்)நாசம் செய்து விடுகிறீர்கள்.அசுரர்கள் தங்களை பகைத்து பகைஉணர்வோடு சிந்தித்து சிந்தித்து இறுதியில்தங்கள் திருவடிகளை சென்றடைகிறார்கள்..என்னை பாருங்கள். நான் எல்லாவற்றயும் துறந்த பின்பும் நான் என்ற கர்வம் இன்னமும் போகவில்லை. நான் எல்லாவற்றயும் உமக்கு அர்ப்பணம் செய்தாலும் நான் தனியனாக அல்லவா நிற்கிறேன்.என்னை இன்னமும் தங்களுக்கு அற்பணிக்க வில்லயே? அந்த மூன்றாவதடிக்கு ஒரு இடம் பாக்கி இருக்கிறது.தாங்கள் திருப்பாதத்தை என் சிரசில் வைத்து விடுங்கள்.அப்போது தான் நான் எல்லாவற்றயும் தந்தவனாவேன் என்று கூறி முடித்தான்.
          அச்சமயம் பிரகலாதன் அங்கு வந்து சேர்ந்தார்.அவர் பகவானை நோக்கி கூறினார்-“பிரபோ தாங்கள் இவனுக்கு இந்திர பதவியை கொடுத்தீர்கள்.அது தங்கள் அருளால் நடந்தது.இப்போது சாம்ராஜ்ய செல்வங்களை அபகரித்துக்கொண்டீர்கள்.அதுவும் தாங்கள் அருள் தான்.லக்ஷ்மி செல்வங்களை அபகரித்து தாங்கள் இவன் மீது அனுக்கிரகம் தான் செய்தீர்கள்.பணம்.பதவி,அதிகாரம்,புகழ்,ஐஸ்வர்யம்,ஆகியவற்றால் மதம் பிடித்து பகவானை மறந்து விடுகிறார்கள்.பற்றுக்களை துறந்தால் தானே ஞானம் பெற முடியும்.பகவானே தாங்கள் எது செய்தாலும் அதில் நன்மை இருக்கிறது.” என்று கூறி முடித்தார்.
          பலிராஜாவின் மனைவி விந்தியாவலி பகவானின் பாதங்களில் விழுந்து வணங்கி தன் கணவரை அனுக்கிரகிக்குமாறு கேட்டுக்கொண்டாள்.
பிரம்மதேவர் கூறினார்-“பகவானே தாங்கள் வருண பாசக்கயிற்றால் இவனை கட்டி வைத்திருக்கிறீர்கள்.இவன் எந்த குற்றமும் செய்ய வில்லயே?தாங்கள் கேட்ட மூன்றடிநிலத்தயும்தந்துவிட்டான்.தன்னயும் கொடுத்து விட்டான்.நான் எனது என்பது இவனிடம் இல்லை.மனமுவந்து எல்லாவற்றையும் அர்ப்பணித்த இவனை விடுதலை செய்துவிடுங்கள்.” என்றார். எல்லாம் அறிந்த பரம புருஷன் விஷ்ணு பகவான் கூறினார்.”எவர்மீது நான் அனுக்கிரகம் செய்கிறேனோ அவரை பற்றற்ற வாழ்க்கைக்கு திருப்பி ஐஸ்வர்யம்,கல்வி,பெயர்,புகழ்,பதவி முதலிய மதம் பிடிக்கும் விஷயங்களை அழித்து விடுவேன்.அல்லது மேற்சொன்ன மேன்மைகளை பெற்றும் என்மீது பக்தி குறையாதிருந்தால் அதையும் என் அனுக்கிரகம் என்று அறியவேண்டும்.பலிராஜா உன்னை பலவிதத்திலும் சோதனைக்கு உள்ளாக்கினேன்..குரு சுக்கிரனின் கோபத்திற்க்கும் ஆளானாய்.ஆனால் நீ சத்தியம் தவறாது இருந்தாய்.எனக்கு எல்லாவற்றயும் அர்ப்பணம் செய்துவிட்டாய்.பழம்,புஷ்பம்,தீர்த்தம் இவற்றை மட்டும் எனக்கு அற்பணித்தாலும் சந்தோஷமடையும்நான் உனக்கு நான் என்ன செய்வேன் என்று குழப்பமடைகிறேன்.
          தேவர்களாலும் விரும்பப்பட்டு பெறமுடியாத ஒரு பெரிய பதவியை கொடுக்க போகிறேன்.சாவர்ணி மன்வந்திர காலம் வரும்போது நீ இந்திரனாகி விடுவாய்.அதுவரை விஸ்வகர்மாவால்மிக கவனமாக நிர்மாணிக்கப்பட்ட சுதல லோகம் சென்று நீ சுகமாக இருப்பாய்.என் அருளால் அங்கு சரீரம்,மனம் சம்பந்தப்பட்ட நோய்கள்,களைப்பு இல்லாமல் அகத்தில்,புறத்தில் இருக்கும் பகைவர்கள் இருக்கமாட்டார்கள்.சத்ருக்களால் தோல்வி ஏற்படாது.எந்த விக்னமும் இருக்காது.பலி ராஜா உனக்கு மங்களம் உண்டாகட்டும்.உன்சுற்றதார்களுடன் நீ சுதல லோகம் செல்வாய்.அந்த சுதல லோகத்தை தேவர்களாலும் ஜெயிக்க முடியாது.அங்கு எல்லாவித சுகபோகங்களும் நிறைந்திருக்கும்.எவரும் உன் ஆணயை மீற மாட்டார்கள். எவராவது உன் ஆணயை மீறினால் என் சக்கராயுதம் அவரை வெட்டிவிடும்.சகல செல்வங்களும் நிறைந்திருக்க என் அருள் எப்போதும் இருக்கும்.உனது பூஜை மாளிகையில் எப்போதும் என்னை பிரத்யட்சமாக காண்பாய்.என்னை சேவித்துக்கொண்டிருப்பாய்.என் அருளால் அசுரர்களின் சேர்க்கையால் வரும் அசுரகுணம் உன்னிடம் இருக்காது.” பகவான் இவ்வாறு கூறியதும் அவரது பேரருளை நினைத்து ஆனந்த பரவசத்தில் கண்ணீர் மல்கி தொண்டை அடைத்து கரங்கள் குவித்து வணங்கினான். அவர் வணங்கும்போது வருண பாசக்கட்டு தாமாக அவிழ்ந்தது.    
அப்போது அசுர ராட்சசாபதி பலி தைரியம் இழக்காமல் பகவானை நோக்கி பேசினார்.என்னை பாசக்கயிற்றால் கட்டினால் என்ன? எனக்கு ஒரு கவலையும் இல்லை.என்னிடம் ஒரு செல்லாத காசும் இல்லை.புனித கீர்த்தி பெற்றவரே தங்களை போன்ற குரு தெய்வங்களால் கொடுக்கும் தண்டனையை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறேன்.அப்படிபட்ட தண்டனையை மாதா,பிதா,அண்ணன்,தம்பி,நண்பர்கள் குற்றங்களை மன்னித்து விடுவார்கள்.  
          பகவானே தாங்கள் அசுரர்களுக்கு மறைமுகமாக குருவாக இருந்து அருள் செய்கிறீர்கள்.ஏனெனில் அசுரர்கள் தனம்,உயர்குடி,பலம் இவற்றால் செருக்கு அடைகிறார்கள்.அவர்களை ஆன்மீக வழியில் செலுத்துவதற்காக ஐசுவர்யங்களையும்,உலகவாழ்க்கையின் மேன்மைகளையும் (பணம்,பெயர்,புகழ்)நாசம் செய்து விடுகிறீர்கள்.அசுரர்கள் தங்களை பகைத்து பகைஉணர்வோடு சிந்தித்து சிந்தித்து இறுதியில்தங்கள் திருவடிகளை சென்றடைகிறார்கள்..என்னை பாருங்கள். நான் எல்லாவற்றயும் துறந்த பின்பும் நான் என்ற கர்வம் இன்னமும் போகவில்லை. நான் எல்லாவற்றயும் உமக்கு அர்ப்பணம் செய்தாலும் நான் தனியனாக அல்லவா நிற்கிறேன்.என்னை இன்னமும் தங்களுக்கு அற்பணிக்க வில்லயே? அந்த மூன்றாவதடிக்கு ஒரு இடம் பாக்கி இருக்கிறது.தாங்கள் திருப்பாதத்தை என் சிரசில் வைத்து விடுங்கள்.அப்போது தான் நான் எல்லாவற்றயும் தந்தவனாவேன் என்று கூறி முடித்தான்.
          அச்சமயம் பிரகலாதன் அங்கு வந்து சேர்ந்தார்.அவர் பகவானை நோக்கி கூறினார்-“பிரபோ தாங்கள் இவனுக்கு இந்திர பதவியை கொடுத்தீர்கள்.அது தங்கள் அருளால் நடந்தது.இப்போது சாம்ராஜ்ய செல்வங்களை அபகரித்துக்கொண்டீர்கள்.அதுவும் தாங்கள் அருள் தான்.லக்ஷ்மி செல்வங்களை அபகரித்து தாங்கள் இவன் மீது அனுக்கிரகம் தான் செய்தீர்கள்.பணம்.பதவி,அதிகாரம்,புகழ்,ஐஸ்வர்யம்,ஆகியவற்றால் மதம் பிடித்து பகவானை மறந்து விடுகிறார்கள்.பற்றுக்களை துறந்தால் தானே ஞானம் பெற முடியும்.பகவானே தாங்கள் எது செய்தாலும் அதில் நன்மை இருக்கிறது.” என்று கூறி முடித்தார்.
          பலிராஜாவின் மனைவி விந்தியாவலி பகவானின் பாதங்களில் விழுந்து வணங்கி தன் கணவரை அனுக்கிரகிக்குமாறு கேட்டுக்கொண்டாள்.
பிரம்மதேவர் கூறினார்-“பகவானே தாங்கள் வருண பாசக்கயிற்றால் இவனை கட்டி வைத்திருக்கிறீர்கள்.இவன் எந்த குற்றமும் செய்ய வில்லயே?தாங்கள் கேட்ட மூன்றடிநிலத்தயும்தந்துவிட்டான்.தன்னயும் கொடுத்து விட்டான்.நான் எனது என்பது இவனிடம் இல்லை.மனமுவந்து எல்லாவற்றையும் அர்ப்பணித்த இவனை விடுதலை செய்துவிடுங்கள்.” என்றார். எல்லாம் அறிந்த பரம புருஷன் விஷ்ணு பகவான் கூறினார்.”எவர்மீது நான் அனுக்கிரகம் செய்கிறேனோ அவரை பற்றற்ற வாழ்க்கைக்கு திருப்பி ஐஸ்வர்யம்,கல்வி,பெயர்,புகழ்,பதவி முதலிய மதம் பிடிக்கும் விஷயங்களை அழித்து விடுவேன்.அல்லது மேற்சொன்ன மேன்மைகளை பெற்றும் என்மீது பக்தி குறையாதிருந்தால் அதையும் என் அனுக்கிரகம் என்று அறியவேண்டும்.பலிராஜா உன்னை பலவிதத்திலும் சோதனைக்கு உள்ளாக்கினேன்..குரு சுக்கிரனின் கோபத்திற்க்கும் ஆளானாய்.ஆனால் நீ சத்தியம் தவறாது இருந்தாய்.எனக்கு எல்லாவற்றயும் அர்ப்பணம் செய்துவிட்டாய்.பழம்,புஷ்பம்,தீர்த்தம் இவற்றை மட்டும் எனக்கு அற்பணித்தாலும் சந்தோஷமடையும்நான் உனக்கு நான் என்ன செய்வேன் என்று குழப்பமடைகிறேன்.
          தேவர்களாலும் விரும்பப்பட்டு பெறமுடியாத ஒரு பெரிய பதவியை கொடுக்க போகிறேன்.சாவர்ணி மன்வந்திர காலம் வரும்போது நீ இந்திரனாகி விடுவாய்.அதுவரை விஸ்வகர்மாவால்மிக கவனமாக நிர்மாணிக்கப்பட்ட சுதல லோகம் சென்று நீ சுகமாக இருப்பாய்.என் அருளால் அங்கு சரீரம்,மனம் சம்பந்தப்பட்ட நோய்கள்,களைப்பு இல்லாமல் அகத்தில்,புறத்தில் இருக்கும் பகைவர்கள் இருக்கமாட்டார்கள்.சத்ருக்களால் தோல்வி ஏற்படாது.எந்த விக்னமும் இருக்காது.பலி ராஜா உனக்கு மங்களம் உண்டாகட்டும்.உன்சுற்றதார்களுடன் நீ சுதல லோகம் செல்வாய்.அந்த சுதல லோகத்தை தேவர்களாலும் ஜெயிக்க முடியாது.அங்கு எல்லாவித சுகபோகங்களும் நிறைந்திருக்கும்.எவரும் உன் ஆணயை மீற மாட்டார்கள். எவராவது உன் ஆணயை மீறினால் என் சக்கராயுதம் அவரை வெட்டிவிடும்.சகல செல்வங்களும் நிறைந்திருக்க என் அருள் எப்போதும் இருக்கும்.உனது பூஜை மாளிகையில் எப்போதும் என்னை பிரத்யட்சமாக காண்பாய்.என்னை சேவித்துக்கொண்டிருப்பாய்.என் அருளால் அசுரர்களின் சேர்க்கையால் வரும் அசுரகுணம் உன்னிடம் இருக்காது.” பகவான் இவ்வாறு கூறியதும் அவரது பேரருளை நினைத்து ஆனந்த பரவசத்தில் கண்ணீர் மல்கி தொண்டை அடைத்து கரங்கள் குவித்து வணங்கினான். அவர் வணங்கும்போது வருண பாசக்கட்டு தாமாக அவிழ்ந்தது.    
அப்போது அசுர ராட்சசாபதி பலி தைரியம் இழக்காமல் பகவானை நோக்கி பேசினார்.என்னை பாசக்கயிற்றால் கட்டினால் என்ன? எனக்கு ஒரு கவலையும் இல்லை.என்னிடம் ஒரு செல்லாத காசும் இல்லை.புனித கீர்த்தி பெற்றவரே தங்களை போன்ற குரு தெய்வங்களால் கொடுக்கும் தண்டனையை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறேன்.அப்படிபட்ட தண்டனையை மாதா,பிதா,அண்ணன்,தம்பி,நண்பர்கள் குற்றங்களை மன்னித்து விடுவார்கள்.  
          பகவானே தாங்கள் அசுரர்களுக்கு மறைமுகமாக குருவாக இருந்து அருள் செய்கிறீர்கள்.ஏனெனில் அசுரர்கள் தனம்,உயர்குடி,பலம் இவற்றால் செருக்கு அடைகிறார்கள்.அவர்களை ஆன்மீக வழியில் செலுத்துவதற்காக ஐசுவர்யங்களையும்,உலகவாழ்க்கையின் மேன்மைகளையும் (பணம்,பெயர்,புகழ்)நாசம் செய்து விடுகிறீர்கள்.அசுரர்கள் தங்களை பகைத்து பகைஉணர்வோடு சிந்தித்து சிந்தித்து இறுதியில்தங்கள் திருவடிகளை சென்றடைகிறார்கள்..என்னை பாருங்கள். நான் எல்லாவற்றயும் துறந்த பின்பும் நான் என்ற கர்வம் இன்னமும் போகவில்லை. நான் எல்லாவற்றயும் உமக்கு அர்ப்பணம் செய்தாலும் நான் தனியனாக அல்லவா நிற்கிறேன்.என்னை இன்னமும் தங்களுக்கு அற்பணிக்க வில்லயே? அந்த மூன்றாவதடிக்கு ஒரு இடம் பாக்கி இருக்கிறது.தாங்கள் திருப்பாதத்தை என் சிரசில் வைத்து விடுங்கள்.அப்போது தான் நான் எல்லாவற்றயும் தந்தவனாவேன் என்று கூறி முடித்தான்.
          அச்சமயம் பிரகலாதன் அங்கு வந்து சேர்ந்தார்.அவர் பகவானை நோக்கி கூறினார்-“பிரபோ தாங்கள் இவனுக்கு இந்திர பதவியை கொடுத்தீர்கள்.அது தங்கள் அருளால் நடந்தது.இப்போது சாம்ராஜ்ய செல்வங்களை அபகரித்துக்கொண்டீர்கள்.அதுவும் தாங்கள் அருள் தான்.லக்ஷ்மி செல்வங்களை அபகரித்து தாங்கள் இவன் மீது அனுக்கிரகம் தான் செய்தீர்கள்.பணம்.பதவி,அதிகாரம்,புகழ்,ஐஸ்வர்யம்,ஆகியவற்றால் மதம் பிடித்து பகவானை மறந்து விடுகிறார்கள்.பற்றுக்களை துறந்தால் தானே ஞானம் பெற முடியும்.பகவானே தாங்கள் எது செய்தாலும் அதில் நன்மை இருக்கிறது.” என்று கூறி முடித்தார்.
          பலிராஜாவின் மனைவி விந்தியாவலி பகவானின் பாதங்களில் விழுந்து வணங்கி தன் கணவரை அனுக்கிரகிக்குமாறு கேட்டுக்கொண்டாள்.
பிரம்மதேவர் கூறினார்-“பகவானே தாங்கள் வருண பாசக்கயிற்றால் இவனை கட்டி வைத்திருக்கிறீர்கள்.இவன் எந்த குற்றமும் செய்ய வில்லயே?தாங்கள் கேட்ட மூன்றடிநிலத்தயும்தந்துவிட்டான்.தன்னயும் கொடுத்து விட்டான்.நான் எனது என்பது இவனிடம் இல்லை.மனமுவந்து எல்லாவற்றையும் அர்ப்பணித்த இவனை விடுதலை செய்துவிடுங்கள்.” என்றார். எல்லாம் அறிந்த பரம புருஷன் விஷ்ணு பகவான் கூறினார்.”எவர்மீது நான் அனுக்கிரகம் செய்கிறேனோ அவரை பற்றற்ற வாழ்க்கைக்கு திருப்பி ஐஸ்வர்யம்,கல்வி,பெயர்,புகழ்,பதவி முதலிய மதம் பிடிக்கும் விஷயங்களை அழித்து விடுவேன்.அல்லது மேற்சொன்ன மேன்மைகளை பெற்றும் என்மீது பக்தி குறையாதிருந்தால் அதையும் என் அனுக்கிரகம் என்று அறியவேண்டும்.பலிராஜா உன்னை பலவிதத்திலும் சோதனைக்கு உள்ளாக்கினேன்..குரு சுக்கிரனின் கோபத்திற்க்கும் ஆளானாய்.ஆனால் நீ சத்தியம் தவறாது இருந்தாய்.எனக்கு எல்லாவற்றயும் அர்ப்பணம் செய்துவிட்டாய்.பழம்,புஷ்பம்,தீர்த்தம் இவற்றை மட்டும் எனக்கு அற்பணித்தாலும் சந்தோஷமடையும்நான் உனக்கு நான் என்ன செய்வேன் என்று குழப்பமடைகிறேன்.
          தேவர்களாலும் விரும்பப்பட்டு பெறமுடியாத ஒரு பெரிய பதவியை கொடுக்க போகிறேன்.சாவர்ணி மன்வந்திர காலம் வரும்போது நீ இந்திரனாகி விடுவாய்.அதுவரை விஸ்வகர்மாவால்மிக கவனமாக நிர்மாணிக்கப்பட்ட சுதல லோகம் சென்று நீ சுகமாக இருப்பாய்.என் அருளால் அங்கு சரீரம்,மனம் சம்பந்தப்பட்ட நோய்கள்,களைப்பு இல்லாமல் அகத்தில்,புறத்தில் இருக்கும் பகைவர்கள் இருக்கமாட்டார்கள்.சத்ருக்களால் தோல்வி ஏற்படாது.எந்த விக்னமும் இருக்காது.பலி ராஜா உனக்கு மங்களம் உண்டாகட்டும்.உன்சுற்றதார்களுடன் நீ சுதல லோகம் செல்வாய்.அந்த சுதல லோகத்தை தேவர்களாலும் ஜெயிக்க முடியாது.அங்கு எல்லாவித சுகபோகங்களும் நிறைந்திருக்கும்.எவரும் உன் ஆணயை மீற மாட்டார்கள். எவராவது உன் ஆணயை மீறினால் என் சக்கராயுதம் அவரை வெட்டிவிடும்.சகல செல்வங்களும் நிறைந்திருக்க என் அருள் எப்போதும் இருக்கும்.உனது பூஜை மாளிகையில் எப்போதும் என்னை பிரத்யட்சமாக காண்பாய்.என்னை சேவித்துக்கொண்டிருப்பாய்.என் அருளால் அசுரர்களின் சேர்க்கையால் வரும் அசுரகுணம் உன்னிடம் இருக்காது.” பகவான் இவ்வாறு கூறியதும் அவரது பேரருளை நினைத்து ஆனந்த பரவசத்தில் கண்ணீர் மல்கி தொண்டை அடைத்து கரங்கள் குவித்து வணங்கினான். அவர் வணங்கும்போது வருண பாசக்கட்டு தாமாக அவிழ்ந்தது.    .    (தொடரும்)

Friday 21 December 2012

வாமன அவதாரம் தொடர்ச்சி 6

ஆச்சரியார் இவ்வாறு கூறியதும் பலி ஒருகணம் பேசாமல் இருந்துவிட்டுபணிவுடன் சொன்னார்.ஸ்வாமி தாங்கள் சொன்னது சரிதான்.அறம்,பொருள்,இன்பம் யாவற்றையும் எந்தவிதத்திலாவது காப்பாற்றிக்கொள்ள வேண்டும்.ஆனால் நான் பிரகலாதன் பேரன் ஆனதால் நான் நரகத்திற்க்கு சென்றாலும் ,துன்பக்கடலில் மூழ்கினாலும், தரித்திரம் அடைந்தாலும், ராஜ்யமிழந்தாலும்,மரணம் வந்தாலும் பிராமணனுக்கு கொடுத்த சத்திய வாக்கிலுருந்து மாற மாட்டேன்.தன் அஸ்த்தியை தானமாக தந்த ததிசி முனிவர் சிபிராஜா ஆகியோர் தானத்தினால் பெரும் புகழ் அடைந்திருக்கிறார்கள்.எத்தனயோ அரக்கர்கள் வெற்றிகளை குவித்து ராஜ சுகபோகங்களை அனுபவித்தார்கள்.ஆனால் அவர்கள் ஐசுவர்யங்களை நிலைத்துபெற்றார்களா?பரம்பொருளைதவிரஎல்லாம்அழியக்கூடியவை.ஸ்வாமி தாங்கள் கூறியது போல இந்த பாலகன் விஷ்ணுவாகவே இருந்தால் என்னுடன் போர் செய்து என்னை கொன்றுவிட்டு ராஜ்யத்தை இந்திரனுக்கு கொடுக்கும் ஆற்றல் இல்லாமல் என்னிடம் ஏன் யாசிக்கவேண்டும்? விஷ்ணுவாக இருந்தால் அவருக்கு எல்லாவற்றயும் அர்ப்பணித்த பெருமை என்னை சேரும்.வேறு எவனாக இருந்தாலும் அவனுடன் போர் செய்து அவனை வீழ்த்தி விடுகிறேன்.
          சுக்கிராசரியார் மிகுந்த கோபத்துடன் கூறினார்.”என் பேச்சை கேளாது என்னை அவமதித்து விட்டாய்.சீக்கிரமே எல்லா செல்வங்களயும்,சாம்ராஜ்யங்களையும் இழந்து ஒன்றுமில்லாமல் நிற்கபோகிறாய்.”பலிராஜாகுருசுக்கிராசாரியாரைபொருட்படுத்தவில்லை.பலிராஜா கையில் நீர் எடுத்து மூன்றடி பூமிதானத்திற்க்கு  சங்கல்பம் செய்தார்.பலி மஹாராஜா பட்டத்து ராணி விந்தியாவலி முத்து பொன்னாபரணங்கள் அணிந்தவள் கலசத்தில் புனித நீர் கொண்டுவர அதை வாங்கி வாமன பகவானின் பாதங்களை கழுவி தமக்கு அபிஷேகம் செய்து கொண்டார்.சங்கல்பம் செய்த நீரால் தாரை வார்த்து வாமன பகவானுக்கு மூன்றடி நிலத்தை அர்ப்பணம் செய்தார்.அச்சமயம் தேவதுந்துபிகள் முழங்கின.வானகத்திலுருந்து மலர்மாரி பொழிந்தது.
          வாமனனாக இருந்த விஷ்ணு பகவான் விஸ்வரூபமெடுத்தார்.அவருக்குள் பதினான்கு உலகங்களும் ஜீவராசிகளும்,தேவர்களும் தெரிந்தனர்.அசுரர்கள் பகவானின் விசுவரூபத்தை கண்டு பிரமித்து போய் நின்றனர்.பகவான் ஒரு அடி எடுத்து பூமியின் எல்லை வரை அளந்தார்.அதில் பூமியும் திசைகளும் சொர்க்கம் பாதாளம் எல்லாம் அடங்கி விட்டன.மற்றொரு அடி வானுலகம் சென்று பிரமலோகம் வரை சென்றது.அங்கு வேத உபநிஷத உபவேத யம நியம தர்க்கசாஸ்திர இதிகாச புராணங்கள் உருவமெடுத்து பிரம்மாவை சேவித்துக்கொண்டு இருந்தன.பிரம்மதேவர் தம் கமண்டல நீர் ஊற்றி தன்னிடம் வந்த பாதத்திற்க்கு பூஜை செய்தார்.பகவான் பாதம் கழுவப்பட்ட நீர் புனித கங்கையாக பெருக்கெடுத்து பூமியில் நதியாக பிரவாகமெடுத்து ஓடியது.மூன்றாவதடிக்கு எங்கும் இடமில்லாமல் போகவும் பகவான் தனது விஸ்வரூபத்தை சுருக்கிக்கொண்டு சங்குசக்கரதாரியாக விஷ்ணுவாக காட்சியளித்தார்.
          பலி சக்கரவர்த்தியின் அசுர பந்து மித்ரர்கள்,படை தளபதிகள்,மந்திரிகளும் அனைத்து சாம்ராஜ்யங்களும் பறி போய்விட்டதை அறிந்து மிகுந்த ஆத்திரம் அடைந்து கூறினர். மாயாவி விஷ்ணு நம்மை ஏமாற்றி விட்டார்.நாம் மோசம் போய் விட்டோம்.நமது அரசர் அறநெறி தவறாதவர்.மேலும் யாகத்தில் தீக்ஷை பெற்றதனால் கொல்லாமை விரதம் ஏற்று இருக்கிறார்.அதனால் போருக்கு வரமாட்டார்.நாமே இவர்களுடன் போர் புரிந்தால் என்ன?என்று கூறி விஷ்ணுவின் தெய்வசக்திபடைத்த பார்ஷத சேவகர்களுடனும் அவர்களுக்கு துணையாக இருக்கும் தேவர்களுடன் போர் செய்தனர்.விஷ்ணுவின் சேவகர்களால் அவர்கள் கொல்லப்பட்டனர்.இதைகண்டு அசுரராஜா பலி கூறினார்.”சகோதரர்களே,நண்பர்களே யுத்தம் செய்யும் காலம் இதுவல்ல.நமக்கு காலமும் நேரமும் பிரதிகூலமாக இருக்கின்றன.படைபலம்,மந்திரி,புத்திபலம், கோட்டை,சாம,தான,நீதி,மந்திரம்,ஔஷதம் இவற்றாலும் கால பிரதிகூலமாக இருக்கையில் ஏதும் செய்ய முடியாது.பலியின் பேச்சை கேட்டு அசுரர்கள் போர் செய்வதை நிறுத்தினர்.
          விஷ்ணு பகவான் கூறினார்.”பலிராஜா நீங்கள் மூன்றடி தருவதாக வாக்களித்தீர்களே?எங்கே அந்த மூன்றாவது அடி?கொடுத்தவாக்கை காப்பாற்றாமல் அசத்தியம் பேசி எம்மை ஏமாற்றி விட்டீர்கள்.அதற்கு பலனாக நீங்கள் நரகத்திற்க்கு தான் செல்லவேண்டும்.என்றார்.கருட பகவானின் எண்ணமறிந்துவாருண பாசத்தால் பலியை கட்டிப்போட்டார்.(தொடரும்)  
         

Tuesday 18 December 2012

வாமன அவதாரம் தொடர்ச்சி 5

கேட்டதை கொடுக்கும் வள்ளலான உங்களிடம் நான் தேவைக்கு அதிகமாக நான் எதையும் கேட்க விரும்பவில்லை.என் அடியில் மூன்று அடி நிலம் கொடுத்தால் போதும்.தன் ஆத்மாவை மேம்படுத்தும் மனிதன் தேவைக்கு அதிகமாக ஆசைப்படுவது சரியல்ல.
          பலி ராஜா பதில் கூறினார்.பிராமண குமாரரே அனுபவம் மிக்க பெரியோர்கள் போல பேசுகிறீர்கள்.ஆனால் தோற்றத்தில் தாங்கள் சிறுபிள்ளை போல இருக்கிறீர்கள்..அதனால் தான் தன்னலத்தை அறியாமல் லாப நஷ்டங்களை அறியாமல் மூன்றடிநிலம் கேட்கிறீர்கள்.இந்த உலகம் முழுவதும் என் ஆட்சியின் கீழ் உள்ளது.நான் நினைத்தால் உலகில் உள்ள தீவுகளையும் தந்துவிடுவேன்.என்னிடம் வந்துவிட்டால் அவன் தேவைக்காக வேறு எவரிடமும் கையெந்த அவசியம் இருக்கக்கூடாது.
          வாமன பகவான் கூறினார்.பலிராஜா!இவ்வுலகில் மனிதன் ஆசைப்படும் எல்லா விசயங்களும் அவனுக்கு கிடைத்து விட்டாலும் மனிதனின் ஆசை பூர்த்தி ஆவது இல்லை.மனிதன் நிறைவடையமாட்டான்.
அவ்வாறு இருக்க மூன்றடி நிலத்தில் சந்தோஷமாடையாதவன் ஏழு தீவுகள் கொண்ட கடல் சூழ்ந்த பூமியை பெற்றும் நிறைவடைந்து விடுவானா?ஆசைக்கோ ஓர் அளவில்லை.புலன்கள் வசப்படுத்த முடியாதவன் துயரத்தை சந்தித்துக்கொண்டே இருப்பான்.கிடைத்ததை பெற்று சந்தோஷமடையாத  பிராமணனின் தேஜஸ் குறைந்து விடுகிறது.ஆதலால் எனக்கு மூன்றடி நிலமே போதுமானது.அதை தாங்கள் தந்தால் போதுமானது.
          வாமன பகவானின் வார்த்தைகளை கேட்ட பலி மகாராஜாவுக்கு சிரிப்பு தான் வந்தது.சரி உங்களுக்கு எவ்வளவு விருப்பமோ அதை எடுத்துக்கொள்ளுங்கள்.என்று கூறிவிட்டு தாரை வார்த்துக்கொடுக்க கமண்டல நீரை எடுத்தார்.அச்சமயம் குரு சுக்கிராசரியார் குறுக்கிட்டு பேசினார்.-
          அசுரவேந்தே பலிமகாராஜா! நான் சொல்லுவதை சற்று கேளுங்கள்.நாம் முன்னால் சிறுபாலகனாக வந்திருப்பது வேறு எவருமில்லை.இவர் சாட்சாத் விஷ்ணு பகவானே தான்.தேவர்களின் காரியத்தை சாதிப்பதற்காகவே தேவமாதா அதிதி கர்பத்தில் இருந்து ஜென்மமெடுத்து வந்திருக்கிறார்.தானம் என்ற பெயரில் உங்களிடம் ராஜ்யங்களை பிடுங்கி இந்திரனுக்கு தர போகிறார்.இது அசுர குலத்தவருக்கு செய்யும் அநியாயம்,அக்கிரமம்,இது துரோகம்.உங்களுடய ராஜ்யம் ஐஸ்வர்யம்,லக்ஷ்மி தேஜஸ்,உலகப்புகழ் கீர்த்தி அனைத்தையும்
தானமாக பெற்று இந்திரனுக்கு கொடுக்க போகிறார்.ஏனெனில் பகவான் விசுவரூமானவர்.விசுவரூபமெடுத்து பூமியயும்ஆகாயத்தயும்அளந்து விடுவார்.நீங்கள் பிழைப்புக்கு வழியில்லாமல் என்ன செய்ய போகிறீர்கள்.மேலும் ஆகாயமும் பூமியும் இரண்டடி அளந்தபின் மூன்றாவதடி என்ன செய்வீர்கள்.கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டாமா?தனக்கென்று மிஞ்சாத தானத்தைஅறிஞர்கள் புகழ மாட்டார்கள். இவ்வுலகில் தான் சம்பாதித்த செல்வத்தை ஐந்தாக பிரித்துக்கொள்ள வேண்டும்.அறத்திற்காகவும்,புகழுக்காகவும் பணமுதலீட்டிற்காகவும்,தன் சந்தோஷத்திற்காகவும் தன் பந்துக்களுக்காகவும் செலவிடவேண்டும்.
          அரசே நான் வாக்கு கொடுத்துவிட்டேன் என்று கவலைபடாதீர்கள்.வாக்கு தவறுவது அசத்தியம் தான்.இந்த தேகம் ஒருமரம் என்றால் சத்தியம் தான் அதன் பழங்கள்.தேக ஜீவனோபாயமின்றி
சகலமும் தந்துவிட்டால் தேகம் என்ற மரம் பட்டுப்போய்விடும்.மேலும் அறியாமல் அவசரத்தில் விவாகம் போன்ற சந்தோஷமான தருணங்களில் தன் உயிரை காப்பாற்றிக்கொள்ள சொல்லப்படும் பொய்,பொய்யாகாது.
                                                          (தொடரும்)

Friday 30 November 2012

வாமன அவதாரம் தொடர்ச்சி 4

 
பலிசக்கரவர்த்தி மஹாராஜா பார்க்கவ பிராமண ரிஷிகளுடன் அசுவமேத யாகம் செய்வதை கேள்விப்பட்டு யாகசாலையை நோக்கி புறப்பட்டார்.அவர் செல்லும் போது,ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும்போதும் பூமி நிலை தடுமாறியது.நர்மதா நதிக்கரையில் பிருகு கச்சம் என்ற ஒரு ரம்யமான இடத்தில் யாக அனுஷ்டானம் நடந்துகொண்டு இருந்தது.
 
     யாகம் செய்யும் திக்விஜர்களும்,சபயோர்களும் அந்த தெய்வ பாலகனை கண்டு பிரமித்து போய் நின்றனர்.நம் யாகசாலையை நோக்கி பேரொளியுடன் பிரகாசித்துக்கொண்டு வருவது யாரோ?சூரியனா? அல்லது அக்னி சனத்குமாரரோ?என்று யோசித்தனர்.வாமன பகவான் இளம் பிஞ்சு கரங்களில் குடை தண்ட கமண்டலங்களுடன் வந்து பிரவேசித்தார். அங்கங்கள் ஒவ்வொன்றிலும் பிரகாசமான ஒளி சிந்திக்கொண்டிருக்க சிறுவனாக காட்சியளிக்கும் அவரை கண்டு முதிய தவசீலர்களும் ஆசாரியர்களும் தன்னை மறந்து எழுந்து  நின்று வரவேற்றனர். அவர் தேஜசால் கட்டுண்ட பலிராஜா அவரை ஒரு சிறந்த பொன்னாசனத்தில் அமரச்செய்து அவர் பாதங்களில் பாதபூஜை செய்வித்தார்.பற்றற்ற மகான்களுக்கும் மனோரம்யாமான பாதகமலங்களின் தீர்த்தத்தை தலையில் தெளித்துக்கொண்டார்.
     பலி ராஜா கூறினார்.”ஸ்வாமி தங்கள் நால்வரவால் யாம் பெருமாகி ழ்சி   அடைந்தோம்.மகரிஷிகள் தவமே உருவெடுத்து வந்தது போல வந்திருக்கிறீர்கள்.இங்கு என் இல்லத்திற்க்கு வருகை புரிந்ததால் நாங்கள் அனைவரும் புனிதமாகி விட்டோம்.எங்கள் பித்துருக்கள் திருப்தி அடைந்து விட்டார்கள்.எங்கள் வம்ஸமே புனிதமானது.இன்று யாகத்தின் முழு பலனும் கிடைத்து விட்டது.பிராமண பாலகரே தாங்கள் எதை வேண்டுமானாலும்என்னிடம்இருந்துபெற்றுக்கொள்ளலாம்.சொல்லுங்கள்.வலம் மிக்க சாம்ராஜ்யங்கள்,கிராமங்கள், வேண்டுமா?யானை,குதிரை,தேர் படைகள் வேண்டுமா?பொன்,ரத்தினபொக்கிஷங்கள்,பணிப்பெண்கள்,பிராமண கன்னிகள் வேண்டுமா?எதையும்கேட்டுக்கொள்ளுங்கள் நான் தருவதற்கு காத்துக்கொண்டு இருக்கிறேன்.” என்றார்.
     வாமன பகவான் திருவாய் மொழிந்தார்.: அசுர குல ராஜாவே!கீர்த்தியை வளர்க்கும் அறம் கலந்த வார்த்தைகள் தங்கள் குல பரம்பரைக்கு தகுந்தபடி தான் இருக்கின்றன.நீங்கள் பிருகு வம்ச சுக்கிராசாரியாரின் சிஷ்யர்.பிரகலாதனின் பேரன்.உங்கள் குல பரம்பரையில் தைரியமும் வீரமும் குறைந்தவர் எவரும் இல்லை.யுத்ததிற்க்கு சவால் விட்டவனை எவரும் சும்மாவிட்டதில்லை.சத்தியம் தவறாத பரம்பரையில் பிறந்தவர் நீங்கள்.அன்று ஹிரணியாக்ஷனிடம் போரிட்டு ஜெயித்த பின்பும் விஷ்ணு பகவானுக்கு ஜெயித்த திருப்தி ஏற்படவில்லை.எப்படியோ கஷ்டப்பட்டு ஜெயித்தோம் என்று நினைத்தார்.மேலும் ஹிரணியகசிபு மூவுலகங்களை ஜெயித்த பின்பு விஷ்ணு பகவானிடம் போர் செய்ய வைகுண்டம் வந்த போது விஷ்ணு பகவான் கண்களுக்கு புலப்படாமல் ஹிரனியனின் இதயத்திற்குள் நுழைந்து விட்டார்.அவரை வைகுண்டத்தில் காணாமல் ஹிரணியகசிபு சிம்மகர்ஜனை செய்துவிட்டு போய்விட்டார்.(தொடரும்)

Saturday 24 November 2012

வாமன அவதாரம் தொடர்ச்சி 3

அதிதி தேவி விரைவில் பகவானை தன் கர்ப்பத்தில் சுமந்தாள்.அதனால் பிரமானந்த பரவசநிலை எய்தினாள். கச்யர் தியான சமாதியில் அனைத்தும் அறிந்து விட்டார்.பிரம்ம தேவர் பிறக்க போகும் வாமன பகவானை துதி செய்தார்.ஒரு சுபயோக சுப தினத்தில் சந்திரன் திருவோண நட்சத்திரத்தில் இருக்க புரட்டாசி மாதம் சுக்கிலபட்சம் துவாதசி திதியில் பகவான் அவதரித்தார்.சகல நட்சத்திர தாரகைகள் அனுகூலமாகவும் மங்களகரமாகவும் அமைந்திருந்தன.பகவானின் அவதார திதியை விஜயா துவாதசி என்றும் கூறுவர்.அவர் அவதார சமயத்தில் வானகத்தில் தேவ துந்துபிகள் அதிர்ந்தன.சங்கம் மிருதங்கம் அதிர அப்சரஸ்கள் நடனமாடினார்கள்.தேவர்களும்,முனிவர்களும்,பித்ருக்களும் துதி பாடினார்கள்.அதிதியின் ஆசிரமத்தில் பூமாரி பொலிந்தன.அதிதி பரம புருஷ பரமாத்மாவை கண்டு பேரானந்தம் அடைந்தாள்.தந்தை கச்யபரும் அளவில்லா ஆனந்த பரவச நிலை அடைந்தார்.சங்கு சக்கிரதாரியாக பிறந்தவர் திடீரென பிரம்மச்சாரி பாலகனாக மாறினார்.நாடகத்தில் நொடியில் நடிகன் வேஷம் மாற்றிக்கொண்டது போல இருந்தார்.அவர் வேதம் பயிலும் பிரம்மச்சாரி மாணவன் போல இருந்தார்.தேவரிஷி,மகரிஷிகள் அனைவரும் ஜாதக புனித சடங்கு செய்தனர்.பூணூல் அணிவித்தனர்.காயத்திரி தேவி சக்தியே காயத்திரியாக வந்து காயத்திரி உபதேசம் செய்வித்தாள். பிரகஸ்பதி பூணூலயும் கச்யபர் அரை ஞான் கயிரயும் தந்தனர்.பூமிமாதா மான் தோலை தந்தாள்.சந்திரன் தண்டத்தயும் அதிதி மாதா கௌடீன வஸ்திரத்தயும் தந்தார்கள்.ஆகாயம் குடை தந்தது.பிரம்மா கமண்டலத்தாயும் சப்தரிஷிகள் தர்பயை அளித்தனர்.குபேரன் பிட்சா திருவோட்டயும்,சரஸ்வதி ருத்திராசை மாலை யயும் தந்தனர்.சாட்சாத் அன்னபூரனேஸ்வரி பிசையிட்டாள்.பகவான் முறைப்படி சமித்துக்களால் ஹோமம் செய்தார்.(தொடரும்)

Tuesday 23 October 2012

வாமன அவதாரம் தொடர்ச்சி 2

தேவர்கள் கண்காணாத இடத்திற்கு சென்று மறைந்துவிட்டதும் பலி சக்கரவர்த்தி தன் அசுரப்படை பரிவாரங்களோடு சொர்க்கபுரி அமராவதியை அடைந்து ஆட்சியை பிடித்தான்.மூவுலகிலும் அதிகாரம் செய்து ஆட்சி புரிய ஆரம்பித்தான்.பிருகு வம்ச பிராமணர்களும் சுக்கிரச்சரியாரும் அகிலத்தையும் வென்ற சிஷ்யன் பலிராஜா மேலும் வளர்ச்சியடைய அன்பு மேலிட்டு நூறு யாகங்கள் செய்தார்கள்.அதனால் அரசனின் கீர்த்தி எட்டுத்திக்கிலும் பரவியது.
           தேவர்கள் ஓடி ஒளிந்ததும் அரக்கர்களின் சாம்ராஜ்யம் பிரமாதமாக நடந்தது.இதை அறிந்து தேவமாதம் மிகவும் வருதமுற்றாள்.நெடுநாள் தவமிருந்து ஆசிரமத்திற்கு திரும்பிய தன் கணவர் கச்யபமுனிவரை வரவேற்று உபசரணை செய்தாள்.அவள் வாட்டமுடன் இருப்பதை கண்டு முனிவர் எப்போதும் நமது ஆசிரமத்தை அலங்கரித்து வைத்திருப்பாய்.எங்கும் உற்சாகமும் சந்தோசமும் இல்லையே.காரணம் என்னவென்று அறிய விரும்புகிறேன்.வீட்டிற்கு வந்த விருந்தாளியை உபசரிக்க தவறி விட்டாயா?அல்லது பூஜிக்கத்தகுந்த பிராமணர்களை அலட்சியபடுத்தி விட்டாயா?அறம்,பொருள், இன்பம்,இந்த மூன்றும் இல்லறத்தில் இருப்பவனுக்கு சகல சௌக்கியங்களை அளித்து இறுதியில் வீடு பேரு அடைய வழி செய்கின்றன.நீ ஏன் சோகமாக இருக்கிறாய்? என்று கேட்டார்.
          தேவர்களை பெற்ற தேவமாதா அதிதி கூறினால்: யாக பூஜை நடத்தும் பிராமணர்கள் பசுக்கள் அறம் பொருள்,அனைத்தும் சௌக்கியமாக தான் உள்ளன.நான் தவறாமல் அதிதி பூஜை,தேவபூஜை செய்து கொண்டு தான் இருக்கிறேன்.எவரும் நமது ஆசிரமத்தை விட்டு பசியோடு சென்றதில்லை.பிரஜாபதியான நீங்கள் தான் பெற்ற மக்களிடம் பேதமில்லாமல் பாரபட்சமின்றி நடந்து கொள்கிறீர்கள்.இதை நான் அறிவேன்.தேவர்களும் அசுரர்களும் உங்கள் மக்கள் தான் இருப்பினும் நான் வேண்டிக்கொள்வது என்னவென்றால் அசுரர்கள் தேவர்களான எம் மக்களிடம் ராஜ்ஜியம்,புகழ்,ஐஸ்வர்யம் சம்பத்துகள் அனைத்தையும் பறித்துக்கொண்டு சொர்க்கபுரி அமராவதியை ஆட்சி செய்துகொண்டு இருக்கிறார்கள்.அமராவதி நம் கைக்கு வரவேண்டும்.அசுரர்கள் விரட்டியடிக்கப்பட வேண்டும்.தாங்கள் அனைவருக்கும் எது நன்மையோ அதை செய்து அருளவேண்டும்.நான் என்மக்களோடு சேர்ந்து துன்பத்தை அனுபவித்து கொண்டு இருக்கிறேன்.என்றாள்.
         கச்யபமுனிவர் கூறினார்: உன் துக்கம் தீர வேண்டுமென்றால் நீ ஒரு விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும்.பங்குனிமாதம் சுக்கில பட்சம் பனிரெண்டு நாள் பயோவிரதம் இருக்கவேண்டும்.அந்த பனிரெண்டு நாள் பகவானுக்கு நைவேத்தியம் செய்த பாலை மட்டும் உண்ணவேண்டும்.வேதமூர்த்தியாக இருக்கும் பகவானை சூரியனில் அக்னியில் ஜலத்தில் வைத்து பூசிக்கவேண்டும்.பால் பஞ்சாமிர்தம் அபிசேகம் செய்து பலவித மலர்களாலும் வஸ்திர ஆபரணங்களாலும் பூஜை செய்ய வேண்டும்.பால்பாயாச அன்னம் நிவேதினம் செய்து அதையே அக்னியில் ஹோமம் செய்ய வேண்டும்.விரதம் முடித்த நாளன்று பிராமணர்களை அழைத்து பால் பாயாசம் அறுசுவை உணவு அளித்து சக்திக்கு தக்கவாறு தான தர்மங்கள் செய்ய வேண்டும். பிரம்ம தேவரால் உபதேசிக்கப்பட்ட இந்த விரதத்தை நான் உனக்கு உபதேசித்தேன்.மனம்,வாக்கு,காயம் ஒன்றுபட்டு ஒரே சிந்தனையுடன் சர்வாத்மாவான நாராயணனை வழிபடுவாயாக.
         அதிதி தேவியும் மிகுந்த பக்தி சிரத்தையுடன் பகவானை வழிபட்டாள்.இறுதியில் எந்த குறையும் இல்லாது விரதத்தை முடித்தாள்.பகவானை துதி செய்து தன் அந்தராத்மாவில் பகவானை நிறுத்தினாள். உடனே எங்கும் நிறைந்த பரமாத்மா விஷ்ணு பிரத்யக்ஷமானார்.அவர் அதிதியை நோக்கி கூறினார்.”தேவி உன் விருப்பத்தை யாம் அறிவோம்.உன் மக்கள் சொர்க்கபுரி ராஜ்யத்தை திரும்பபெற வேண்டும். அசுரர்கள் வீழ்ச்சியடைய வேண்டும்.என்று விரும்புகிறாய்.தற்சமயம் யுத்தம் செய்து அவர்களை வெல்ல முடியாது.ஏனெனில் கடவுளும் விதியும் பிராமணரும் பலிராஜாவுக்கு அனுகூலமாக இருக்கிறார்கள்.அதனால் வேறு ஒரு உபாயத்தால் காரியத்தை சாதிக்கவேண்டும்.நீ செய்த விஷ்ணுபகவானின் ஆராதனை வீண் போககூடாது அல்லவா.அதற்காக உனக்கு மகனாக பிறந்து காரியத்தை சாதிக்கப்போகிறேன்” என்று கூறி மறைந்தார்
.(தொடரும்)

Monday 15 October 2012

வாமன அவதாரம்

 
இந்திரனால் கொல்லப்பட்ட அசுரராஜ பலியையும் மற்ற அசுரர்களையும் அசுரகுரு சுக்கிராச்சாரியார் மிருத சஞ்சீவினி வித்தையை கொண்டு உயிர் பெற செய்து விட்டார்.அசுர ராஜ பலி தமக்கு உயிர் கொடுத்த சுக்கிரசாரியாரையும் அவரது சொந்த பந்தங்களையும் ஆதரித்து மனப்பூர்வமாக சேவை செய்தார்.பிருகு வம்ச பிராமணர்களுக்கு எல்லாவற்றையும் அர்பணித்து விட்டு மனம் வாக்கு சரீரத்தால் அவர்களை மகிழ்வித்தார்.அதனால் பெருமகிழ்ச்சியடைந்த சுக்கிரர் பலியை தலைவராக வைத்து விசுவஜீத் என்ற அற்புதங்கள் நிகழ்த்தும் யாகத்தை செய்தார்.பலவித பொருட்களால் அக்னி தேவனை திருப்தி படுத்தினார்கள்.இறுதியில் அகில உலகங்களையும் வெல்வதற்கு சக்தி படைத்த தங்கத்தகடு வேய்ந்த ஒரு ரதம் யாககுண்டத்தில் இருந்து வந்தது.இந்திரனின் குதிரைகள் போல அதிவேகமுள்ள குதிரைகள் சிங்ககொடிபறக்கும் தேரில் பூட்டி இருந்தன.வெற்றியை தரும் தங்கமயமான வில்லும் குறையாத அம்புகளும் கொண்ட தூணிரும் தோன்றின.உடையாத தெய்வீக கவசமும் வந்தது.தாத்தா பிரகலாதன் வாடாத மலர் மாலையை வெற்றிமாலையாக பலியின் கழுத்தில் சூடினார்.எல்லாவற்றிற்கும் மேலாக பிருகு வம்ச பிராமணர்களின் பூரண ஆசிகள் கிடைத்தன.
அசுர ராஜா பலி தன்னை நன்கு அலங்கரித்துக்கொண்டு அக்னி குண்டத்திலிருந்து அக்னி போல தேரில் ஏறி அமர்ந்தார்.மாபெரும் வீர அசுர சேனாதிபதிகள் தம்தம் சேனைகளோடு வந்து சேர்ந்து கொண்டனர்.அச்சமயம் அசுர சேனை ஆகாயத்தை குடித்து விடுவது போல கனல் பறக்கும் கண்களால் திசைகளையும் லோகங்களையும் சாம்பலாக்கி விடுகிறவர்கள் போல தோற்றமளித்தனர்.

           இதை சற்றும் எதிர்பார்க்காதவர்கள் போல தேவர்கள் ஆடல் பாடல்களில் சந்தோசமாக மயங்கி கிடந்தார்கள்.தேவர்களின் தலைநகரம் அமராவதி பொன்னகரம் மின்னிக்கொண்டு இருந்தது. எங்கும் சந்தோசம் நிறைந்த சூழலில் திடிரென பலி அரசர் சேனைகள் அமராவதியை முற்றுகையிட்டன.தேவமாதர்கள் நெஞ்சம் பயத்தால் நடுங்கின.பலி அரக்கனும் அவனது சேனைகளும் அட்டகாசமாக மிக பயங்கரமாக இருந்தன.இந்திரன் தன ராஜகுரு பிரகஸ்பதியிடம் ஆலோசனை கேட்டான்.சுவாமி என் பழைய எதிரி அணுக முடியாதவனாக பயங்கர ஏற்பாடுகளுடன் அமராவதியை தாக்க வந்திருக்கிறான்.இந்த அரக்கர்களை எதிர்த்து வெல்ல முடியாது என்று நினைக்கிறேன்.எந்த சக்தியை துணை கொண்டு இப்படி வளர்ச்சியடைந்து வந்திருக்கிறான் என்று தெரியவில்லை.பிரளயகால அக்னி கபளீகரம் செய்வதற்கு பெருகி வந்து அகில விசுவத்தையும் விழுங்குவதுபோல தீ ஜூவலை நாக்குகளால் பத்து திசைகளையும் நக்கி தீர்த்துவிடுவது போல வந்திருக்கிறான்.சுவாமி எனக்கு தெரியவேண்டும்.இவன் சரீரம,மனம், புலன்கள் ஆகியவற்றில் அபூர்வ பலமும் தேஜசும் எங்கிருந்து வந்தன.?

          தேவராஜனே உனது சத்ருவின் வளர்ச்சி எந்த காரணத்தால் வந்தது என்பதை நான் அறிவேன்.சுக்கிராச்சாரியார் மற்றும் பிருகு வம்சத்து பிராமணர்களை உபாசித்ததனால் இவன் தேஜஸ் அனுகமுடியாதது ஆகிவிட்டது.சர்வசக்திமான் இறைவனை தவிர உன்னாலும் எந்நாளும் மற்ற எவராலும் இப்போது இவன்முன் நிற்க முடியாது.இப்போது நீங்கள் செய்யவேண்டியது இந்த சொர்கபுரியை விட்டு வெளியேறிவிடுங்கள்.அவன் கண்களுக்கு தெரியாமல் எங்காவது சென்று ஒளிந்து கொள்ளுங்கள்.அது தான் அனைவருக்கும் நலம் என்று தேவகுரு கூறினார்.குருவின் ஆலோசனைப்படி இஷ்டம்போல உருவம் தரிக்க வல்லமை படைத்த தேவர்கள் சொர்கத்தை விட்டு எங்கோ சென்று மறைந்தனர்.