Tuesday 26 August 2014

பத்மாசனம்

 பத்மாசனம்:


 பூ மலர்ந்திருப்பது போல செய்வதே பத்மாசனம். இரண்டு கால் பாதங்களு 
தாமரை ம் தொடைகள் மீது வைத்திருக்க அடி பாகம் மேல் இருக்க தாமரை பூ மலர்ந்திருப்பது போல தோற்றமளிக்கும்.
          இந்த ஆசனத்தில் தேகத்தின் கீழ் பகுதி (இடுப்பு ) பலப்படும். முதுக்குத்தண்டு நேராக இருக்கும். யோகிகளுக்கு பிராணவாயு சுஷும்னா நாடி வழியே போகும். இதனால் அறிவு நன்றாக செயல்படும். சிந்தனா சக்தி விருத்தியாகும். இது தியானம் செய்ய வேண்டிய ஆசனம். ஆன்மீக பாதையில் துணை புரியும். ஜபமும் தியானமும் செய்யப்பயன்படுகிறது. பிரம்மச்சரியம் காக்கப்படுகிறது.
          இந்த ஆசனத்துடன் ஜாலந்தர் பந்தமும், மூல பந்தமும் செய்வார்கள். முகவாய்க்கட்டையை கழுத்துடன் ஓட்ட வைத்துக்கொள்வது ஜாலந்தர் பந்தம். மூலபந்தம் என்பது ஆசனவாயை சுருக்குவது. இதனால் அஜீரண கோளாறுகள் நீங்கும். வாதரோகமும், பேதியும் தடுக்கப்படும். இந்த ஆசனம் போட்டுக்கொண்டு உத்தித பத்மாசனம், பர்வதாசனம், ப்ரமராசனம் , தாடாசனம் எல்லாவற்றையும் செய்வார்கள். அதனால் சரீர தேகம் ஆரோக்கியம் பெருகும்.
          ஆண், பெண் முதல் பாலகர் அனைவரும் இதை செய்யலாம். இத்துடன் உட்யான பந்தம் செய்தால் (வயிற்றை ஏக்கி ஓட்டினார் போல செய்வது) அதிக பலன் கிட்டும். இந்த ஆசனம் போட்டு முடித்த பின் கால்களை சகஜ நிலைக்கு கொண்டுவரும்போது தேகத்தின் கீழ் அங்கங்களில் சுத்த இரத்தம் பாயும்.

:செய்முறை
இரண்டு கால்களையும் பரத்தி வைத்தபின் வலது பாதத்தை இடது தொடை மீதும், இடது பாதத்தை வலது தொடை மீதும் வைக்க வேண்டும். இரண்டு பாதங்களையும் தொடைகளில் நன்கு பதிய வைக்கவேண்டும். நாபியின் நேர் இரண்டு குதிகால்களும் தொடை ஆரம்பிக்கும் பகுதியில் நன்கு ஒட்டி வைக்க வேண்டும். பாதத்தின் அடிப்பாகம் மேல் இருக்க வேண்டும். குதிகால்கள் இரண்டும் சேர்ந்திருக்க வேண்டும். வலது புறங்கையை இடது உள்ளங்கையில் வைத்திருக்க குதி கால்கள் மேல் வைக்கலாம். அல்லது இரண்டு கைகளையும் முழங்கால்களில் வைத்துக்கொள்ளலாம். தொடைகளும் முழங்கால்களும் பூமியில் பதிந்து இருக்க வேண்டும். அதில் தளர்வாக (லூசாக) இருக்க கூடாது. முதுக்குத்தண்டு, கழுத்து, தலை , இடுப்பு எல்லாம் ஒரே நேர்கோட்டில் இருக்க பார்வை புருவத்தின் நடுவில் அல்லது மூக்கு நுனியில் இருக்க வேண்டும். அல்லது கண்களை மூடிக்கொண்டு புருவநடுவில் நோக்க வேண்டும். அல்லது எதிரில் தெய்வபடத்தையும் நோக்கலாம்.
          பத்மாசனம் ஒன்றிலிருந்த்து பத்து நிமிடம் வரை செய்யலாம். தியானம் செய்பவர்கள் அதற்கு மேலும் செய்வார்கள். கைகளை முழங்காலில்(சுலபமாக இருக்க) வைத்துக்கொள்வார்கள். எதையும் கஷ்டப்பட்டு செய்யக்கூடாது. பயிற்சி செய்து சுலபமாக செய்யலாம். கஷ்டப்பட்டு நெடுநேரம் வரை செய்யக்கூடாது. அதாவது வலி எடுக்கும்வரை செய்யக்கூடாது.
          கனமான சரீரம் உள்ளவர்கள் கால்களை தடிமனாக இருந்தால் இதை செய்ய முடியாவிட்டால் ஒரு கால் பாதத்தை மட்டும் தொடையில் வைத்துக்கொள்ளலாம். அப்போது அர்த்த பத்மாசனம் ஆகிறது. மற்றுமொரு காலை மடக்க முடிந்தவரை மடக்கி கொள்ளலாம். அர்த்த பத்மாசனம் செ(தொடரும்)
ய்பவர்கள் ஒருகாலை மாற்றி மாற்றி தொடையில் வைத்துக்கொள்வது அவசியம். அவ்வாறு இருக்கும்போது இரண்டு கால்களுக்கு பயிற்சி கிடைக்கிறது.

          இந்த ஆசனத்தில் முக வாய்க்கட்டையை கழுத்துடன் ஒட்ட வைத்துக்கொள்ளும் பயிற்சியால் தைராய்ட் வர வாய்ப்பில்லை. மூளை சுறுசுறுப்பாகிறது. இந்த ஆசனத்தில் வயிற்றை எக்கி ஒட்ட வைத்து ஆசனவாயை மேல்பக்கம் சுருக்கினால் (மூலபந்தம்) பெருங்குடல் நன்கு செயல்படும். செரிமானம் நன்கு ஏற்பட்டு மலச்சிக்கல் நீங்கும். 

No comments:

Post a Comment