Monday 4 August 2014

கர்ண பீடாசனம்

கர்ண பீடாசனம்

கர்ணபீடாசனத்தில் இரண்டு முழங்கால்களால் இரண்டு காதுகளையும் சேர்த்து அமுக்கி வைக்க வேண்டும். அதனால் இதற்கு கர்ணபீடாசனம் என்ற பெயர் வந்தது. இதற்கு முன் சொன்ன ஆசனங்களின் பலன் இதர்க்கும் உண்டு. கூடுதலாக இருமல், டான்ஸில்,ஜலதோஷம்,தொண்டைக்கட்டி,மூச்சு இளைப்பு வராது. மேலும் காது வலி,காதில் சீல்  வடிதல் ஆகிய நோய்கள் குணமாகும்.
செய்முறை:
கால்களை சற்று பரத்தி வைத்து படுக்க வேண்டும். இடுப்புக்கு மேலே இரண்டு கால்களை தூக்கியபின் தலைக்கு பின் கொண்டுபோகவேண்டும். இரண்டு பாதங்களை பூமியில் வைக்க வேண்டும். கைகளை நேராக கீழே வைக்க வேண்டும். அதன்பின் முழங்கால்களை மெதுவாக தலைப்பக்கம் மடக்கவேண்டும்.அதன் பின் தோள்களுடன் சேர்க்க வேண்டும். காதில் அழுத்தம் கொடுத்து பூமியை தொட வேண்டும். முழங்கால்களில் இருந்து பாதம் வரை (தலையிலிருந்து) ஒரே நேர்கோட்டில் இருக்க வேண்டும். பின்பு மெதுவாக சகஜநிலைக்கு வரவேண்டும். இதை மூன்று முறை செய்யலாம். ஆரம்பத்தில் இந்த ஆசனத்தில் இரண்டு கைகளால் இடுப்பை பிடித்துக்கொள்வதால் தவறு ஏதுமில்லை. ஆரம்பத்தில் பத்து அல்லது பதினைந்து நொடிகள் வரை செய்யலாம். ஐந்து முறை செய்தபின் அபயாசத்தால் நேரத்தை அதிகப்படுத்தி இரண்டு நிமிடம் செய்யலாம்.
          இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால் படக்கென்று வேகமாக கால்களை உயர்த்தி பின்னுக்கு கொண்டுபோகக்கூடாது. அதேபோல் பின்னாலிருந்து எடுத்து கால்களை கீழே வைக்க கூடாது. அதனால் தீய பலன் ஏற்படும். இடுப்பில் வலி ஏற்படும். அல்லது இடுப்பு பிடித்துக்கொள்ளும். இதுவும் உயர் இரத்த அழுத்தம், இதய நோய் உள்ளவர்களுக்கு நல்லதல்ல. முறையாக சர்வாங்காசனம், ஹலாசனம்,அதன்பின் கர்ணபீடாசனம் செய்தாலும் நல்ல பலன் கிடைக்கும்.    
 (தொடரும்)


No comments:

Post a Comment