Thursday 1 August 2013

நரசிம்மாவதாரம்5


இதை கேட்டு ஆசிரியர்கள், ஹிரணியகசிபுவின் கோபத்திற்க்கு ஆளாக போகிறோம் என்று பயந்தனர். அசுர குரு சுக்கிராசரியாரின் மகன்கள் மிகுந்த கோபமடைந்து கூறினார்கள். யாரங்கே? பிரம்பை எடுத்துக்கொண்டு வாருங்கள் இவன் இப்படி சரிப்பட்டு வர மாட்டான். சாம,தான,பேதம் முடிந்து நான்காவது உபாயமான தண்டத்தினால் தான் நமக்கு கீழ்படிவான். என்று பிரகலாதனை நோக்கி கூறினார்கள். நமது கீர்த்திக்கு களங்கம் உண்டாக்கும்படி செய்வான் போலிருக்கிறது.அசுரவம்ஸம்  என்ற சந்தனவனத்தில் இந்த கருவேலமுள்செடி எப்படி முளைத்தது என்று தெரியவில்லை. அசுரவம்ஸ சந்தனமரத்தை வெட்ட வந்த கோடாரியாக இருக்கிறானே!
இவ்வாறு கடிந்துவிட்டு அசுர பாலகர்களோடு சேர்ந்து அமரச்செய்து அரசியல் சட்ட திட்ட பாடங்களை கற்பிக்க ஆரம்பித்தார்கள்.  வீடுபேற்றிணை விடுத்து அறம்,பொருள்,இன்பம் இம்மூன்றையும் கற்பித்தார்கள். பிரகலாதன் அனைத்தையும் கற்றுக்கொண்டான் என்று தெரிந்தவுடன் பிரகலாதனை அழைத்துச்சென்று அவன் தாய் மகாராணியிடம் சென்றனர். அவன் தாய் மிகுந்த பாசமுடன் மகனே தந்தை மனம் கோணாமல்நடந்து கொள்ளவேண்டும் என்று கூறி அவனுக்கு பட்டாடை ஆபரணங்கள் அணிவித்து தந்தையிடம் அனுப்பினாள். பிரகலாதன் தன் தந்தையின் தாள் தொட்டு வணங்கினான்.அவனை அவர் தந்தை ஆசீர்வதித்து இரு கைகளாலும் தூக்கி நெஞ்சோடு அணைத்துக்கொண்டார். அவன் இதயம் மகிழ்ச்சியால் நிரம்ப மடியில் வைத்து உச்சி முகர்ந்ததால் பாசமிகுதியால் கண்களில் நீர் நிரம்பியது.
ஹிரணியகசிபு கூறினான். அப்பா பிரகலாதா எத்தனை நாட்கள் கழித்து வந்திருக்கிறாய். இப்போது சொல் குருஸ்வாமிகளிடம் என்ன கற்று வந்திருக்கிறாய்? பிரகலாதன் கூறினான். சிறந்த கல்வி எதுவென்று நான் கூறுகிறேன் கேளுங்கள். ஒன்பது வித பக்தியால் ஸ்ரீ விஷ்ணு பகவானை தொழலாம். அவர் திருவிளையாடல்களை காதால் கேட்பது, அவர் திருநாமங்களை பஜனை செய்து பாடி மகிழ்வது,அவர் திருஉருவத்தை தியானம் செய்து மகிழ்வது,அவர் திருப்பணிகள் மூலமாக சேவை செய்வது,அவர் திரு உருவை வைத்து பூஜை அர்ச்சனை செய்வது,அவரை சாஷ்டாங்கமாக வணங்குவது,நான் உனது தாசன் என்று தாச பாவத்தில் தொழுவது,நான் உனது நண்பன் என்ற பாவத்தில் கொண்டாடுவது,தன்னையும் தன் சொத்து சுகங்களையும் அவருக்கே அற்பணித்து வழிபாடுகள் நடத்துவது.இதை கேட்டதும் ஹிரணியகசிபு பயங்கர கோபமடைந்தான்.அறிவு கெட்ட பிராமணனே எல்லாம் நீ தான் கற்றுக்கொடுத்ததா?பகைவர்கள் (தேவர்கள்,விஷ்ணுபகவான்)பக்கம் இருந்துகொண்டு மறைந்திருந்து எமக்கு துரோகம் செய்கிறாயா? ஏதும் அறியாத குழந்தை மனதை கலைத்து பகைவனுக்காக வேலை செய்யும் உங்களை பற்றி தெரிந்து விட்டது. இவ்வாறு கூறிக்கொண்டிருந்தபோது குரு ஸ்வாமி கூறினார். இந்திரனை ஜெயித்தவரே உங்கள் மகனுக்கு நாங்கள் அப்படிபட்ட பாடத்தை போதிக்கவில்லை. அல்லது எவரிடமும் போதனை பெற்று ராஜகுமாரர் அப்படி பேசவில்லை. சாந்தமடையுங்கள். எங்களை குற்றம் சொல்லாதீர்கள். உங்கள் புதல்வருக்கு பிறவியிலேயே இந்த அறிவு வந்திருக்கிறது.     
(தொடரும்)       
        
            


No comments:

Post a Comment