Sunday 4 August 2013

நரசிம்மாவதாரம்6

 
            
நரசிம்மாவதாரம்
ஹிரணியகசிபுசொன்னான்.-“பிரகலாதாகுருமார்கள்சொல்லிக்கொடுக்காத விஷயம் உன் மதியில் எங்கிருந்து யார் தூண்டுதலினால் வந்தது?
              பிரகலாதன் பதில் உரைத்தான்.” தந்தையே புலன்கள் வழியாக போகங்களை எவ்வளவு அனுபவித்தாலும் அவை அடங்காமல் மேலும் மேலும் ஆசையை தூண்டிக்கொண்டே இருக்கும். அடங்காத ஆசைகளை மனதில் வளர்த்துக்கொண்டு வாழும் மனிதர்களின் மனம் விஷ்ணு பக்தியை அறியாது. மனதின் அடித்தளத்தில் விருப்பு வெறுப்புகள் என்ற கர்மா வாசனை அழிந்த பின் விஷ்ணு பகவானின் பக்தர்களான சாது மகாத்மாக்களை சேவித்தால் எவர் தூண்டுதலும் இல்லாது விஷ்ணு பக்தி தாமாக தோன்றும். என்று கூறி முடித்தான்.
ஹிரணியகசிபுவின் ஆத்திரம் எல்லை மீறியது. அவன் மடியிலிருந்த பிரகலாதனை பூமியில் தள்ளி விட்டான். ஆத்திரம் மேலிட்டு  கண்கள் சிவக்க உதடு துடிக்க ஆணையிட்டான். இங்கிருத்து இவனை வெளியேற்றி கொன்று விடுங்கள். இப்படிப்பட்ட பிள்ளை இல்லாமல் போனாலே எமக்கு நல்லது. இவன் சிற்றப்பனையும் நமது அசுர குலத்தவரையும் கொன்ற விஷ்ணுவுக்கு தாசன் போல பாத பூஜை செய்கிறான். இவனை நம்பக்கூடாது. இவன் தாய் தந்தை பாசத்தை புரிந்து கொள்ள வில்லை.
          நலம் தரும் மருந்தாக இருப்பவனே புத்திரன் ஆவான். கை,கால் போன்ற அங்கங்களில் புண் வந்து விட்டால் அது புரை ஓடுவதற்கு முன் நமது அங்கமாக இருந்தாலும் அதை வெட்டிவிடவேண்டும். அப்போது தான் நாம் நலம் பெறுவோம். இவன் எனக்கே யமனாக உருவாக்கிறான். இவனை கொன்று விடுவது தான் நல்லது.
          ஹிரணியகசிபுவின் அரக்க சேவகர்கள் ஆணையை சிரமேற்கொண்டு திரி சூலங்களை எடுத்து குத்துங்கள், கொல்லுங்கள் என்று கத்திக்கொண்டு பிரகலாதனின் மர்மஸ்தானத்தில் நெஞ்சில் குத்தினர். பிரகலாதானோ பகவத் தியானத்தில் மனம்,வாக்கு, புல ன்
களால் சர்வாத்மா ஹரியோடு ஒன்றிபோய் இருந்தான். சூலாயுதங்களின் தாக்குதல்களால் அவனை ஏதும் செய்ய முடியவில்லை. துரதிஷ்டம் பிடித்த மனிதனின் எல்லா முயற்சிகளும் வீணாவது போல எல்லாம் வீணாகி விட்டன.
          யானைகளை பிரகலாதன் மீது ஏவினார்கள்,விஷ நாகங்களை கடிக்க வைத்தார்கள்.மாந்திரீகம் செய்தும் பிராமனார்களால் பேய் பிசாசுகளை ஏவினார்கள்.மாயங்கள் செய்து பார்த்தார்கள். மலை உச்சியில் இருந்து தள்ளினார்கள். இருட்டறையில் அடைத்து வைத்தார்கள். அன்னத்தில் விஷம் கலந்து கொடுத்தார்கள். உணவின்றி நீரின்றி அறையில் பூட்டி வைத்தார்கள். பனி மலையில் விட்டு வந்தார்கள். நெருப்பில் தூக்கி போட்டார்கள். பெரும் பாறாங்கல்லை கட்டி சமுத்திரத்தில் போட்டார்கள். ஆனால் அவன் மூழ்கவில்லை. பாலைவன புயலில் விட்டார்கள். பாரங்கல்லில் போட்டு அமுக்கினார்கள். பிரகலாதன் எல்லாம் வல்ல இறைவன் எங்கும் நிறைந்த பரம்பொருள் ஜீவாத்மாக்களின் தலைவன் அளவற்ற அருளாளர் ஆதி அந்தமில்லாதவர் இப்படிப்பட்ட இயல்புகள் கொண்டு இருந்த பரமாத்மா விஷ்ணுவுடன் இரண்டரறக்கலந்திருந்த நிலையில் அவன் எந்த தீயசக்தியாலும் பாதிக்கப்படவில்லை. அவன் மிகவும் நலமாக இருந்தான். ஹிரணியகசிபு வியந்தான். எந்த உபாயத்தாலும் இவன் கொல்லப்படவில்லையே! நலமாக அல்லவா இருக்கிறான். இறுதியில் நான் இவனை திட்டினேன், கருணையின்றி கொலை செய்ய பல தீங்குகள் செய்தேன். அதையெல்லாம் நினைத்து என்னை பழிவாங்கி விடுவானோ? என அஞ்சினான். இவனை விரோதித்துக்கொண்டு நான் தான் சாகப்போகிறேனோ?இவன் எதற்க்கும் பயப்படுவது போல தெரியவில்லையே?
          ஹிரணியகசிபு கவலை தோய்ந்த  முகத்துடன் அமர்ந்திருப்பதை கண்டு பிரகலாதனுக்கு பாடம் சொல்லிக்கொடுத்த சுக்கிராசாரியாரின் புதல்வர்கள் தனிமையில் சந்தித்து கூறினார்கள். அசுர குல வேந்தே நீங்கள் மூவுலகையும் வென்றிருக்கிறீர்கள். தங்கள் புருவ அசைப்பின் குறிப்பால் இந்திரன் முதலிய லோக பாலர்களும் அஞ்சி நடுங்கி தங்கள் ஆணையை நிறைவேற்றுகிறார்கள். நீங்கள் கவலைபட வேண்டாம். விளயாடும் பருவம் கொண்ட ஐந்து வயது பாலகன் தீமை,பகையை பற்றி அறியாத வயதுடையவன். கூடிய விரைவில் குரு ஸ்வாமிகளுக்கு சேவை செய்து திருந்தி விடுவான்.   
 
(தொடரும்)       
        
            
 

No comments:

Post a Comment