Tuesday 15 May 2012

மாமன்னன் பிருது தொடர்ச்சி 2

அரசன்  வேனின் ஆட்சியில் யாகவழிபாடுகள் நின்று போய்விட்டதாலும் நாட்டில் அநியாயங்களும் அக்கிரமங்களும் நடந்து கொண்டு இருந்ததால் பூமி தேவி வன் கொடுமைகளை தாங்காமல் மண் வளத்தையும் பயிர் முதலிய தாவரங்கள் தளைத்து வளரும் சக்தியையும் தன்னுள் அடக்கி புதைத்துக்கொண்டாள். அதன் விளைவாக விளைச்சல் இல்லாமல் குடிமக்களுக்கு உணவு தானியம் கிடைக்காமல் எங்கும் பசியும் பஞ்சமும் நிலவியது.குடிமக்கள் அனைவரும் ஒன்று கூடி பிருது மன்னனிடம் வந்து முறையிட்டனர்
             அரசே வயலில் பயிர்கள் விளைச்சல் இல்லாமல் போனதால் நாங்கள் பசியால் வாடுகிறோம்.மாற பொந்துக்குள் தீ கங்கு அணையாமல் மரத்தை சிறிது சிறிதாக எரிப்பது போல எங்களுக்குள் இருக்கும் பசித்தீ எங்களை கபளீகரம் செய்து கொண்டு உள்ளது.இதோ பாருங்கள் நாங்கள் அனைவரும் எழும்பும் தோலுமாக இருக்கிறோம்.உங்களை நம்பி வந்திருக்கிறோம்.ஏதாவது ஏற்பாடு செய்யுங்கள்.பூமியை சமதளப்படுத்தி எங்களுக்கு வீடு அமைத்துக்கொடுத்தீர்கள்.
            பிருது மகாராஜாவின் குடிமக்கள் துயரங்களை கேட்ட பின் இதற்க்கு ஏதாவது வழியை கண்டுபிடித்து ஆவன செய்கிறேன் என்று கூறிவிட்டு நெடுநேரம் யோசித்தார். இந்த பூமிமாதா தான் பயிர்களை விளைவிக்கும் மண் வளத்தை தன்னில் மறைத்துக்கொண்டு விட்டது என்று அறிந்தார்.அவர் மிகவும் ஆத்திரம் அடைந்து பூமியை பிளந்து விடவேண்டும் என்று நினைத்து அக்னி பகவானிடம் பெற்ற வில்லை எடுத்தார்


.அதில் அம்பை பொருத்தினார்.இதை அறிந்த பூமி தேவி நடுங்கினாள்.வேட்டைகாரனுக்கு பயந்து மான் ஓடுவது போல பசு உருவமெடுத்து ஓடினாள். ஆனால் எங்கு ஓடி ஒளிந்தாலும் பிருது ராஜா பின் தொடர்ந்து வருவதை கண்டாள்.இந்த உலகில் மக்கள் மரணத்திற்கு பயந்து ஓடினால் மரணம் அவர்களை விட்டு விடுமா?பூமி தேவி வேறு வழியின்றி பிருது மகா ராஜாவிடம் சமாதானமாக போகலாம் என்று எண்ணம் கொண்டு கூறினாள். "பிருது மகாராஜா சரணம் என்று வந்தவர்களை காப்பவரே என்னை கொல்வதன் நோக்கம் என்ன?பெண்கள் இரக்கத்திற்கு உரியவர்கள்.சாதாரண மக்களே பெண்களை இம்சிக்க மாட்டார்கள்.அவ்வாறு இருக்க தேவர்களால் அரசாட்சி பதவியில் அமர்த்தப்பட்ட சக்கரவர்த்தி நீங்கள் தர்மத்தை கை விடலாமா?என்னை பிளந்து விட்டு தரையில் வசிக்கும் குடிமக்களை கடல் நீரில் வாழ வைப்பீர்களா?
            பிருது மன்னன் பதிலுரைத்தார்:--"பூமி தேவி யாகத்தில் தேவர்களுக்கு சமமாக அவிர்பாகத்தை பெற்றுக்கொண்டு பயிர் முதலிய தாவர விளை நிலத்தின் வளங்களை ஏன் தன்னுள் அடக்கி கொண்டாய்?பச்சை புல் தின்று விட்டு பால் கறக்காத பசு போல வேடமணிந்து இருக்கிறாய்?நான் பசுவை கொல்ல மாட்டேன் என்று தான் பசு வேடம் தரித்து ஓடுகிராயோ?நான் உன்னிடம் இரக்கம் காட்ட போவதில்லை.உன்னை கொன்றுவிட்டு அந்த ரத்தத்தால் குடிமக்களின் பசி தாகத்தை தீர்த்து வைக்க போகிறேன்.பூ தளம் இல்லாமல் போனால் என்ன?நான் ஏன் யோக சக்தியால் தளம் உண்டாக்கி குடிமக்களை அதில் வாழ வைப்பேன்.என்று கூறி முடித்தான்.
            ஆத்திரம் தணியாத பிருது ராஜாவை நோக்கி கை கூப்பி வணங்கி பூமி தேவி கூறினாள். நீங்கள் ஆதிநாராயணர் அம்சத்தில் தோன்றியவர்.தர்மத்தை ரட்சிக்க வந்தவர்.அதாவது விஷ்ணு ரூபமாக உலகை காக்க வந்தவர்.என்னை கொள்ள முயற்சிப்பது தகுமா?ஆதி வராக அவதாரத்தில் கடலில் மூழ்கி இருந்த என்னை வெளியில் கொண்டு வந்து தரணீதரன் என்று பெயர் பெற்றீர்கள்.இப்போது பிருது ராஜாவாக தோன்றி படகு போல் பிரஜைகளை தாங்கும் என்னை கொல்ல வருகிறீர்கள்.பிருது ராஜா கோபம் தணியாமல் இருப்பதை கண்டு பூமி தேவி மேலும் கூறினாள். மகாராஜா கோபம் தணிந்து நான் சொல்வதை கேளுங்கள்.அறிவுள்ளவர்கள் உபாயத்தால் எப்படி காரியத்தை சாதித்துக்கொள்ள வேண்டும் என்று யோசிக்க வேண்டும்.ஆதி காலத்தில் இருந்தே மகரிஷிகள் இறைவழிபாடு மூலம் தெய்வ அருளால் நற்பலன்களை அடைந்தார்கள்.மனிதர்கள் விவசாய நுணுக்கங்களை அறிந்து முறைப்படி விவசாயம் செய்து வெற்றி கண்டார்கள்.மகாராஜா பிரம்ம தேவர் தானியங்களையும் பயிர் வகைகளையும் சிருஷ்டித்தார்.காலத்தின் மாறுதலால் பூமியில் அநியாயம் செய்பவர்களும், தர்மத்திற்கு எதிராக நடப்பவர்களும் தன தானிய செல்வங்களை பெற்று பொது நலம் கருதாமல் மக்களுக்கு பங்கிட்டு கொடுக்காமல் சுயநலத்திற்காக வாழ்ந்தார்கள்.அதனால் நான் அந்த தானிய விதைகளை யாகத்திற்கு பயன்படுத்துவதற்காக தனக்குள் மறைத்து வைத்துக்கொண்டேன்.காலப்போக்கில் அந்த தானிய விதைகள் எனக்குள் ஜீரனமாகிவிட்டன. குடிமக்களின் பசி பிணி நீங்க அவர்கள் நலமாக வாழஅவர்களுக்கு அன்னமளிக்க விரும்புகிறீர்கள். ஆதலால் சிருஷ்டியின் ஆதியில் படைக்கப்பட்ட மனித இனத்தின் முதல்வர் ஸ்வயம்புமனு என்பவரை அழைத்து வாருங்கள்.அவரை கன்று போல பாவித்து எனது பால் மூலமாக எல்லாவித உணவு தானியங்களையும் கறந்து கொள்ளுங்கள்.அதனால் உங்கள் நாட்டின் பஞ்சம் தீரும்.மேலும் தாங்கள் செய்ய வேண்டியது மழைநீர் பூமியில் அனைத்து பகுதிகளிலும் தங்கும்படி மேடுகளை பள்ளமாக்குங்கள்.குளம் ஏரிகளில் நீர் நிரம்புமானால் விவசாயம் நன்கு நடக்கும்.
          பூமிதேவி இவ்வாறு கூறியதும் பிருது மகாராஜா பசு வடிவம் கொண்ட பூமியில் இருந்து தானியங்களை பாலாக கறந்து கொண்டார்.பிருது மகாராஜாவால் வசமாக்கப்பட்ட பசுவடிவம் கொண்ட பூமியில் இருந்து மற்றவர்களும் அவர் அவர் தேவைக்கு ஏற்றவாறு பாலை கறந்து கொண்டனர்.பிருகஸ்பதியை கன்றாக்கிரிஷி முனிவர்கள் வேத உபநிஷதுகளை கறந்து கொண்டனர்.இந்திரனை கன்றாக செய்து தேவர்கள் பல சக்திகளை கறந்து கொண்டனர்.அது போல அசுரர்களும், பித்ருக்களும்,சித்தர்களும் தேவைக்கேற்ற விசயங்களை கறந்து கொண்டனர்.வன விலங்குகளும் நாக,யட்ச,ராட்சஷர்களும், காடுகளும்,மலைகளும்,பூமியில் இருந்து பெற்றுக்கொள்ளவேண்டிய வஸ்துக்களை பெற்றுக்கொண்டனர்.இவ்வாறு பிருது மகாராஜா குடிமக்களின் பஞ்சத்தை போக்கினார்.நீதி வழுவாமல் நல்லாட்சி புரிந்தார்.
            பிருது மகாராஜா யாகங்கள் பல செய்து விஷ்ணு பகவானையும், தேவர்களையும் வழிபட்டார்.நூறு யாகம் செய்தால் இந்திர பதவி கிடைக்கும் என்பதால் பிருது மகாராஜா அதிக யாகங்கள் செய்து முடித்து நூறாவது யாகம் செய்யும் பொது இந்திரன் குதிரையை திருடிக்கொண்டு போனான்.பல விக்னங்களை உருவாக்கினான்.அதனால் அந்த யாகத்தை கைவிட்டார்.விஷ்ணு பகவான் அவர் யாகபூஜையில் தரிசனம் தந்து பிருதுவி பாராட்டினார்.தர்மத்தை காத்து தன் கடமைகளை செய்து மேன்மை அடைந்த உயர்ந்த மனிதர்கள் தம் ஆத்மாவின் முன்னேற்றத்திற்காக மோட்ச வழியை தேடுவார்கள்.விஷ்ணு பகவான் பிருது ராஜாவுக்கு மேலும் அறிவுரை கூறினார்.பிருது ராஜா யாக பூஜைகள் மூலம் இறைவனை வழிபட்டாலும் தன்னுள் இருக்கும் பரமாத்மாவை உணர வேண்டும்.மனதை சமநிலையில் வைத்து சுக துக்கங்களை சமமாக நினைத்து மந்திரிகள் துணையோடு நாட்டை காக்க வேண்டும்.குடிமக்களை காப்பது உன் கடமை அல்லவா?அவ்வாறு மக்களுக்கு ஒரு குறையும் இல்லாமல் ஆட்சி செய்தால் புண்ணியத்தில் ஆறாவது பங்கு உன்னை சேரும்.அவ்வாறு இல்லாத பட்சத்தில் அவர்களிடம் வரி வசூலித்து அவர்களுக்காக செலவிடாமல் போனால் அரசன் அவர்கள் பாவத்தில் பங்கு பெற்று துன்பம் அடைவான்.விஷ்ணு பகவான் இவ்வாறு கூறியதும் பிருது அவருக்கு பூஜைகள் செய்து மகிழ்வித்தார்.அதன் பின் சனத் குமாரர்கள் வருகை தந்து சில அறிவுரைகளை கூறினார்கள்.அவர்களுக்கும் மரியாதைகள் செய்து மன்னர் பிருது பூஜித்தார்.நெடுங்காலம் ஆட்சி செய்த பின் புதல்வர்களுக்கு முடிசூட்டிவிட்டு தபோவனம் சென்று தவம் செய்து மன்னர் பிருது  முக்தி அடைந்தார்.  

No comments:

Post a Comment