Monday 1 December 2014

சர்ப்பாசனம்

     


          இந்த ஆசனத்தில் நாபியிலிருந்து மேல்பாகம் தூக்கப்படுவதால் படமெடுத்த பாம்பு போல இருக்கும். அதனால் இதை  சர்ப்பாசனம் என்று கூறுவார்கள். இதை பூஜாங்காசனம் என்றும் கூறுவார்கள். இந்த ஆசனத்தால் பசி அதிகம் உண்டாகும். முதுக்குத்தண்டு பலப்படும். இரைப்பை தசைகள் முதுகுத்தசைகள் அழுத்தப்படுவதால் அவை உறுதிபெற்று விடும். இடா நாடியும் பிங்கலா நாடியும் முதுகுத்தண்டின் இருபக்கமும்  போவதால் அதில் செயலாக்கம் உண்டாகும். இதனால் குண்டலினி சக்தி எழும். இது பிரமாச்சரியத்திற்க்கு உகந்த ஆசனமாகும். சுக்கிலாசயம் பலப்படும். பெண்களுக்கு இந்த ஆசனம் மிகவும் உகந்தது. கற்பபை உறுதியாகும். ஆரோக்கியமாக இருக்கும். மாதவிலக்கு சம்பந்த்தப்பட்ட கோளாறுகள் (சீரற்ற இரத்தப்போக்கு, அதிக இரத்தபோக்கு)எல்லாம் சரியாகிவிடும்.
          இந்த ஆசனம் சிறுநீரகத்திற்க்கும், குடலுக்கும் நல்ல பலன் தரும். கழுத்து, மார்பு, வயிறு, இடுப்பு, தோள்கள்,கைகள் ,தொடைகள்,கைவிரல்கள் எல்லாம் ஆரோக்கியமாக இருக்கும். கழுத்தில் கண்டமாலா என்ற நோய் வராமல் தடுக்கப்படுகிறது.
          செய்முறை:
                    கீழே ஜமுக்காளத்தை விரித்து அதில் குப்புறப்படுத்து இரண்டு கைகளையும் மார்பின் இருபக்கம் வைத்து பூமியில் ஊன்ற வேண்டும். சரீரத்தின் அனைத்து பகுதிகளும் தளர்வாக வைக்க வேண்டும். நெற்றியை பூமியில் வைத்த பின் இரண்டு கால்களையும் சேர்த்து வைத்து நீட்ட வேண்டும். பின்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரம் நீட்ட வேண்டும். இதை படக்கென்று செய்யக்கூடாது. தலையை மேலே தூக்கும்போது மார்பு பூமியில் பதிந்திருக்க வேண்டும். அதன்பின் முதுகை பின்னால் வளைத்து மெதுவாக மார்பை மேலே தூக்க வேண்டும். நாபியிலிருந்த்து கால் வரை எல்லா பகுதியும் பூமியில் வைக்கப்பட்டிருக்க வேண்டும். பத்து பதினைந்து நொடி வரை உள்ளே சுவாசத்தை அடக்கி வைத்திருக்கும் நிலையில் அப்படியே இருக்க வேண்டும். சுவாசத்தை விடும்போது மார்பும் தலையும் கீழே குனிய வேண்டும்.
          இந்த ஆசனம் மூன்றிலிருந்து எழுமுறை செய்யலாம். ஆரம்பத்தில் ஐந்து அல்லது பத்து நொடி அப்படியே இருக்கலாம். மெதுவாக அப்யாசம் செய்த பின் ஒரு நிமிடம் சுவாசத்தை அடக்கி அப்படியே இருக்க வேண்டும். இந்த ஆசனத்தை செய்ய முடிந்த வரை செய்து விட்டு கண்கள் மூடி சவாசனம் போட்டு படுத்து ஓய்வு எடுக்க வேண்டும்.
          சிலர் இந்த சர்பாசனத்தில் இரண்டு கைகளையும் பூமியில் ஊன்றாமல் இடுப்புக்கு கீழே வைத்து நாகப்படம் எடுப்பது போல தலையையும் மார்பையும் நிமிர்ந்து வைத்து செய்வார்கள். இது மிகவும் கடினமானது. இப்படி செய்யவேண்டும் என்ற அவசியம் இல்லை. காலையிலும் மாலையிலும் இந்த ஆசனத்தை ஐந்து நிமிடம் வரை செய்யலாம்

No comments:

Post a Comment