Saturday 16 February 2013

கற்புக்கரசி சுகன்யா 2

சுகன்யா பதற்றமடைந்து செய்வதறியாது தவித்தாள்.இவர்களில் யார் என் கணவர் என்று அறியாமல் அஸ்வினி குமாரர்களையே சரணடைந்தாள்.தன் கணவர்  யார் என்று அடையாளம் காட்டச்சொல்லி வேண்டினாள்.அவள் கற்பைகண்டு மிகவும் மகிழ்ச்சியடைந்து அஸ்வினி குமாரர்கள் அவள் கணவர் சியவனரிஷியை (தேவகுமாரராக மாறிய)அடையாளம் காட்டிவிட்டு வானுலகம் சென்று மறைந்தார்கள்.
          சிலகாலம் கழிந்த பின் சுகன்யாவின் தந்தை தாம் செய்யப்போகும் யாகத்தை தலைமைதாங்கி நடத்திக்கொடுப்பதற்க்கு சியவனரிஷியின் ஆசிரமத்திற்க்கு வருகை தந்தார்.அச்சமயம் தம் மகள் பேரொளி படைத்த ஒரு வாலிபனோடு சிரித்து பேசிக்கொண்டிருப்பதை கண்டார்.அதனால் வருத்தமும் கோபமும் அடைந்தவர்,” உன்னை மகள் என்று சொல்லிக்கொள்ள வெட்கப்படுகிறேன்.உலகத்தவர் வணங்கும் சியவன ரிஷியை கிழவன்,எதற்கும் பிரயோஜனப்படாதவன்,என்று துறந்து விட்டு இந்த வாலிபனுடன் இருக்கிறாய்? நீ உயர் குடியில் (க்ஷத்திரிய)ராஜாவின் மகளாக இருந்தும் கற்புநெறி தவறிவிட்டாய். நீ தந்தையின் வம்சத்தையும்,கணவரின் வம்சத்தையும் நரகத்திற்க்கு கொண்டு போய் சேர்க்க வழி வகுத்துவிட்டாய்”அதற்கு சுகன்யா “தந்தையே நீங்கள் தவறாக புரிந்து கொண்டீர்கள்.இவர் உங்கள் மருமகன் சியவனரிஷி தான்” என்று கூறி வாலிப பருவம் கிடைத்த சங்கதியை விரிவாக கூறினாள்.அதனால் சந்தோஷமடைந்த சர்யாதி மகளை கட்டி அணைத்துக்கொண்டார்.
          சர்யாதி மன்னரின் யாகம் பிரமாதமாக தொடங்கியது.யாகத்தை நடத்தி வைக்கும் சியவனரிஷி மந்திரங்களை உச்சரித்து உரிய நேரத்தில் தாம் வாக்கு தந்தபடி அஸ்வினி குமாரர்களுக்கு சோமபானம் கிடைக்க செய்தார்.அதனால் கோபமடைந்த இந்திரன் வஜ்ராயுதமெடுத்து மன்னர் சர்யாதியை தாக்க வந்தான்.சியவனரிஷி தன் தபோபலத்தால் இந்திரனின் கையை ஸ்தம்பிக்க செய்து விட்டார்.வஜ்ராயுதமெடுத்து தாக்க வந்த கை அப்படியே செயலற்று நின்றது. அதன் பின் தேவர்களெல்லாம் ஒன்று சேர்ந்து சியவனரிஷியை சமாதானப்படுத்தினார்கள்.,இனி யாகங்களில் சோமபான உரிமையை அஸ்வினி குமாரர்கள் பெறுவார்கள் என்று வாக்களித்தனர்.இந்திரனின் ஸ்தம்பித்த கை சரியானது.சர்யாதி தாம் செய்த சோமயாகத்தை சுபமாக முடித்தார்.
  

No comments:

Post a Comment